குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரூ.6000 கோடி மதிப்புடைய ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியாவின் மகன் ஒருவர் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். செகந்திராபாத்தில் 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றியும், ரிக்ஷா தொழிலாளிகளுடன் தங்கியும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மனிதர்களுக்கு பெயரிடுவதுதான் உலகம் முழுவதும் உள்ள மனித இனத்தின் கலாச்சார அடையாளமாக இன்றைக்கும் திகழ்ந்து வருகிறது. ஒருவரது பெயரை வைத்தே நாடு மொழி தேசம் இனம் கலாச்சாரம் பண்பாடு, வரலாறு உள்ளிட்ட பல்வேறு மனித குல அடையாளங்களையும் கண்டறிந்து விட முடியும். ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் என தனித்த பெயரிடல் முறைகளும், பெயர்களும் உள்ளன. அவ்வாறு பெயர் சூட்டுவதற்கென தனி சடங்குகளும், பழக்க வழக்கங்களும் உள்ளன. ஒரு சிறிய சுட்டு விளிப்பாக பெயரிடுவதுதான் பொதுவாக உலக வழக்கு. ஆனால் ஒரு சிறிய பாடலை ஹம்மிங் செய்வது போல பெயரிடும் விசித்திர கிராமம் உள்ளது என்பது தெரியுமா.. அதுவும் அந்த கிராமம் உலகில் வேறு எங்கோ அல்ல.. இந்தியாவில் உள்ள மேகாலயாவில் தான் உள்ளது. காங்தோங் என்றழைக்கப்படும் அழகிய மலைக்கிராமத்தில்தான் ஓவ்வொருவர் பெயரும் அழகிய சிறிய பாடலைப் போன்ற ஹம்மிங்கை கொண்டது. நாலைந்து பேர் சேர்ந்து ஒருவர் பெயரை மற்றொருவர் தொடர்ச்சியாக சொல்லக் கேட்டால் நாம் நிஜமாகவே ஒரு பாடலைத் தான் கேட்கிறோமோ என்ற ஆச்சரியம் ஏற்படும். மேலும் உலகிலேயே சுற்றுலா செல்வதற்கு ஏற்ற தூய்மையான மலைக் கிராமம் என்ற ஐநாவின் பட்டியலிலும் இந்த இந்த ஊர் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. தாளாதா ஆச்சரியம் தானே..
பழங்கால மனிதன் தீயைக் கண்டுபிடித்தபோதே முதல் தீக்குச்சி வடிவமைக்கப்பட்டதாகக் கருதலாம். தற்காலத் தீக்குச்சிகள், குறைவான வெப்ப நிலையிலேயே தீப்பிடித்துக்கொள்ளும் பாஸ்ஃபரஸ் (phosphorus) கண்டறியப்பட்ட பின்னர் உருவானவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாஸ்ஃபரஸைப் பயன்படுத்திப் பல்வகை வடிவிலான தீக்குச்சிகள் வடிவமைக்கப்பட்டன.முதலாவது பாதுகாப்பான தீக்குச்சிப் பெட்டிகள் (safety matches) 1844ஆம் ஆண்டு ஸ்வீடனில், நச்சுத் தன்மையற்ற சிகப்புப் பாஸ்ஃபரஸைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டன. தீப்பிடித்து எரிவதற்குத் தேவையான எல்லா வேதிப்பொருட்களையும் தீக்குச்சியின் தலைப் பகுதியில் சேர்க்காமல், சிகப்புப் பாஸ்ஃபரஸை பக்கவாட்டுச் சுவர்ப் பகுதியில் பூசி, தீக்குச்சியை அதில் உராயச் செய்து தீயை உண்டாக்கும் வகையில் தீப்பெட்டி செய்யப்பட்டது.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை நீங்கும். தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம் இதய தசைகள் வலிமையடைந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். கண் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம். சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு தொண்டைப் புண்ணும் குணமாகும்.
இந்தியாவின் முதல் சினிமா "ராஜா ஹரிச்சந்திரா" என்ற படம் 1913ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி கருப்பு வெள்ளையில் வெளியானது. இது ஒரு மெளனப் படம். 40 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தவர் தாதா சாகிப் பால்கே. முதன் முதலில் மும்பையில் கோரோனேசன் சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா:. இப்படம் இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி இயக்கி அவரது இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்திருந்தது. தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆர். நடராஜ முதலியார் என்பவரால் தயாரிக்கப்பட்ட "கீசக வதம்" என்ற மெளனப்படம், அவரது புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் 1916 இல் வெளியிடப்பட்டது. தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்". இதுவும் 1931 இல் வெளியானது. எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியிருந்தார். இதன் மூலம் முதல் தமிழ் படத்தின் பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவரானார்.
தற்போது, மனித மூளையில் உருவாக்கப்படும் அலைகளை உணர்ந்து செயற்படக்கூடிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதன்மூலம் இருந்த இடத்திலிருந்தே தமது எண்ணங்களால் ரோபோக்களுக்கு மனிதர்கள் கட்டளை இட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை எம்ஐடி பல்கலைக்கழகத்தின் கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். அதேப்போல் மனிதர் களிடம் கேள்வி கேட்க கூடிய புதிய வகை ‘ரோபோ’ க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடும் ‘ரோபோ’ குழப்பமான சூழ்நிலையில் தனது சந்தேகங்களை புத்திசாலி தனமாக கேள்விகளாக கேட் கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
2030-ல் டி.டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயரும்: தமிழ்நாடு அரசு தகவல்
05 Mar 2026சென்னை, 2030-ல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயரும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
வருகிற 16-ம் தேதி மாநிலங்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் ஆறு இடங்களுக்கு போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
05 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு போட்டியிடுபவர்களின் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது.
-
இணையதளத்தில் கோவில் நில விவரங்களை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு
05 Mar 2026மதுரை, கோவில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
இடைக்காட்டூர் கிராமத்தில் தாக்குதல் சம்பவம்: கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
05 Mar 2026சென்னை, சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மா
-
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டிற்குள்ளே எப்படியாவது மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
05 Mar 2026தஞ்சாவூா், இன்றைக்கு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது மீண்டும் தமிழ்நாட்டிற்குள்ளே இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய பா.ஜ.க அ
-
மாநிலங்களவைத் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த தம்பிதுரை
05 Mar 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.
-
திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சு: எல்லாம் முடிந்துவிட்டதாக சைகை காட்டியது எதனால்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
05 Mar 2026தஞ்சை, தஞ்சையில் நடந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத் திருமண விழாவில், தேர்தல் கூட்டணி பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் பேசினார்.
-
ஈரான் எங்களிடம் ராணுவ உதவி கேட்கவில்லை: ரஷ்ய அறிவிப்பு
05 Mar 2026மாஸ்கோ, ஈரான் தங்களிடம் எந்தவொரு ராணுவ உதவியையும் கேட்கவில்லை என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
-
மாநிலங்களவை தேர்தலுகான வேட்புமனு தாக்கல் நிறைவு: மனுக்கள் மீது இன்று பரிசீலனை
05 Mar 2026சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடையும் 6 மாநிலங்களவை தேர்தலுகான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது.
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆஃபர் கொடுத்து தி.மு.க. கூட்டணியை உடைக்க அரசியல் எதிரிகள் முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
05 Mar 2026சென்னை, 2021 தேர்தலில், தி.மு.க. 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளும் வாய்ப்பைத் தாருங்கள். அ.தி.மு.க.
-
தே.மு.தி.க. சார்பில் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவை தேர்தலில் போட்டி
05 Mar 2026சென்னை, தே.மு.தி.க. சார்பில் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டார்.
-
தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
05 Mar 2026சென்னை, தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என்று பிரேமலதா விஜயகாந் தெரிவித்துள்ளார்.
-
மாநிலங்களவை தேர்தல் தி.மு.க. வேட்பாளர்கள் திருச்சி சிவா - கான்ஸ்டன்டைன் இரவீந்திரன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்
05 Mar 2026சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தி.மு.க.
-
போர் சூழல் எதிரொலி: மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்
05 Mar 2026புதுடெல்லி, போர் சூழல் காரணமாக ரஷ்யாவில் இருந்து கூடுதல் அளவு கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வரி என்ற பெயரில் வசூலித்த 130 பி.டாலரை வட்டியோடு திருப்பி செலுத்த வேண்டும் : அதிபர் ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
05 Mar 2026நியூயார்க், பல்வேறு நாடுகளிடம் இருந்து வரி என்ற பெயரில் வசூலித்த 130 பி.டாலரை வட்டியோடு திருப்பி செலுத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்
-
த.வெ.க.வில் இணையுமாறு ஜெயக்குமாருக்கு செங்கோட்டையன் அழைப்பு
05 Mar 2026ஜெயக்குமார் வேண்டுமானால் த.வெ.க.விற்கு வரலாம் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்கள் பட்டியல் : 2 வாரங்களில் வெளியிட திட்டம்
05 Mar 2026சென்னை, த.வெ.க. சார்பில் இரணடு வாரங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழ்நாட்டில் இதுவரை 23.56 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்: முதல்வர்
05 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் இதுவரை 23.56 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்
-
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்க படைகள் பயன்படுத்தியதா..? வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு
05 Mar 2026வாஷிங்டன், ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்தியதாக வந்த தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பின்லாந்து நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கிட இந்தியா ஒப்புதல்: பிரதமர் மோடி தகவல்
05 Mar 2026டெல்லி, பின்லாந்து நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கிட இந்தியா ஒப்புதல் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் பலி 1,045 ஆக உயர்வு
05 Mar 2026தெஹ்ரான், ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக நடத்தி வரும் தாக்குதல் 5-வது நாளை எட்டியது.
-
ஈரானின் உச்சத்தலைவர் கமேனி மறைவிற்கு இந்தியா இரங்கல்
05 Mar 2026தெஹ்ரான், ஈரானின் உச்சத் தலைவர் கமேனியின் மறைவிற்கு 6 நாட்களுக்குப் பிறகு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய நாள் எப்படி?
05 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Mar 2026- ஆழ்வார் திருநகரியில் ரதம்
- கோவை கோணியம்மன் தெப்பம்.
- திருவாரூர் தியாகராஜர் விழா தொடக்கம்.
- வேதாரண்யம் சிவபெருமான் பவனி.
- காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.


