முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிரபலமான தலங்கள்

உலகுக்கே காதலை போதித்த காமசூத்ரா எழுதப்பட்ட நாடு இந்தியா. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்து கோயில்களில் அற்புதமாக காதலை வெளிப்படுத்தும் சிற்பங்களை ஏராளம் காணலாம். அவற்றில் காமக்கலையினை காட்சி வடிவமாக பிரதிபலிக்கும் கட்டிடக்கலை அதிசயம் கஜுராஹோ. இதன் காரணமாக இங்கு வெளிநாட்டவர் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கோவா ஒரு சுற்றுலாத் தலமாக அற்புதமான விடுமுறை கால கொண்டாட்டமாகவும், அடைவதற்கு சுலபமான இடமாகவும் இருக்கிறது.

நிலவின் வரைபடத்தை முதலில் உருவாக்கியவர்

ஜோஹன்னஸ் ஹெவிலியஸ்(Johannes Hevelius) சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்னர் போலந்தில் வாழ்ந்த ஒரு வானவியலாளர் மற்றும் வானவியலுக்கான கருவிகள் செய்தவர். சந்திரனின் முதல் அட்லஸை உருவாக்கித் தொகுத்த வானியலாளர். அது செலினோகிராஃபியா ( Selenographia) என்ற பெயரில் 1647-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் மேற்பரப்பின் ஆரம்பகால விரிவான வரைபடங்களில் ஒன்றையும் அதன் பல அம்சங்களுக்கான பெயர்களையும் கொண்டுள்ளது. சந்திரனில் உள்ள  மலைகளுக்கான அவரது சூட்டிய பெயர்களில் இன்னும் சில (எ.கா. ஆல்ப்ஸ்) இன்னும் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் நினைவாக சந்திரனில் உள்ள பள்ளத்துக்கு ஹெவிலியஸ் பள்ளம் (Hevelius crater) என்றும் பெயரிடப்பட்டது.

மின் விளக்கை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் அல்ல

தாமஸ் ஆல்வா எடிசன் மிகப் பெரிய விஞ்ஞானி என்பது நமக்கு தெரியும். அவர் கண்டுபிடித்தவற்றின் பட்டியல் மிக நீளமானது. அதிகாரப்பூர்வமாக 1093 கண்டுபிடிப்புகளுக்கு அவர் காப்புரிமை பெற்றிருந்தார். அவற்றில் ஒன்று மின் விளக்கு. ஆனால் பெரும்பாலான வரலாற்றாய்வாளர்களின் கருத்துபடி அவர் பெரும்பாலான பிறரால் கண்டுபிடிக்கப்பட்டவற்றை தன்னுடையது என காப்புரிமை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதில் மின் விளக்கம் அடங்கும். ஏனெனில் அவர் மின் விளக்கை கண்டுபிடிப்பதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்து வானியல் மற்று ரசாயன விஞ்ஞானி வாரன் டி லா ரூ என்பவர் அதை கண்டுபிடித்து விட்டார் என்பதுதான் ருசிகரமான தகவலாகும்.

ஐந்து பொத்தான்கள்

சீனாவை ஆண்ட டி.ஆங் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில்தான் சீனர்கள் தங்கள் சட்டைகளுக்கு ஐந்து பொத்தான்களை வைத்து அணியும் பழக்கத்தை மேற்கொண்டனர்.அதற்கு கன்ஃபூஷியஸ் மதத்தின் அன்பு, அறிவு, துணிவு, வாய்மை, நேர்மை ஆகிய ஐந்து கொள்கைகளையும் பின்பற்றவேண்டும் என்பதுதான்.

டிஜிட்டல் ஆபத்து

டிஜிட்டல் டெக்னாலஜி பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கிடையேயான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தினசரி செயல்பாடுகளில் அல்லது குழந்தைகளிடம் பேசும் போது நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தினால், குழந்தைகள் அதிக சென்ஸ்டிவ், அதிக கோபம், தீவிர செயல்கள் மற்றும் புலம்பல் போன்றவற்றிக்கு உள்ளாகுகிறார்களாம்.

அசத்தலாக 5 வண்ணங்களில் நெளிந்தோடும் அதிசய ஆறு

கொலம்பியாவின் லா மக்கரேனாவில் உள்ள கானோ கிறிஸ்டல்ஸ் நதியானது "ஐந்து நிறங்களின் நதி" மற்றும் "திரவ வானவில்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் தெளிவான நீரின் கீழே நீங்கள் காணக்கூடிய பல வண்ணங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஆற்றில் உள்ள நீர்வாழ் தாவரங்களின் இனப்பெருக்க செயல்பாட்டின் போது வண்ணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அவை Macarenia clavigera என்று அழைக்கப்படுகின்றன, இங்கு ஓடும் தூய, தெளிவான நீரால் பொது மக்கள் ஈர்க்கப்பட்டு இப்பகுதியை பார்ப்பதற்காக ஆண்டு தோறும் ஏராளமானோர் வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago