முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வியக்க வைக்கும் இளஞ்சிவப்பு ஏரி

ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற ஹில்லியர் ஏரி (Lake Hillier) இளஞ்சிவப்பு ஏரி எனப்படுகிறது. 1802 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் ரெச்செர்ச் தீவுக் கூட்டத்தின் 105 தீவுகளில் ராயல் நேவி எக்ஸ்ப்ளோரரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள கோல்ட் ஃபீல்ட்ஸ் எஸ்பெரன்ஸ் பகுதியில் இது அமைந்துள்ளது. இந்த ஏரியின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆண்டு முழுவதும் காணப்படும் அதன் இளஞ்சிவப்பு நிறம். அதற்கு என்ன காரணம்...இந்த ஏரியில் டுனாலியெல்லா சலினா என்று அழைக்கப்படும் உப்பு பாசி இனங்கள் மற்றும் ஹாலோபாக்டீரியா எனப்படும் இளஞ்சிவப்பு பாக்டீரியாக்கள், சிவப்பு ஆல்கா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உள்ளன. அதுதான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் நீரை பாட்டிலில் பிடித்தாலும் சிகப்பு நிறத்திலேயே காணப்படுமாம். ஆண்டு முழுவதும் ஏன் இந்த நிறம் தொடர்ந்து மாறாமல் இருக்கிறது என்பதற்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் விளக்கம் இதுவரை எதுவும் இல்லை. பிங்க் ஹில்லியர் இன்னும் அறிவியலுக்கு ஒரு மர்மமாகவே உள்ளது. ஆச்சரியமாக உள்ளது அல்லவா..

அழிவை நோக்கி....

பூமியில் அடுத்த 1000 ஆண்டுகள் மட்டுமே மனித இனத்தால் வாழ முடியும். இந்த கால இடைவெளிக்குள் ஏற்படும் மிகப்பெரிய இயற்கைப் பேரிடரால் மனித இனம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று  ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மூளை செயல்பாடு அதிகம் கொண்டவராகக் கருதப்படும் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

நிலத்துக்கு அடியில் இருக்கும் அருவி எங்குள்ளது தெரியுமா?

உலகின் மிகப் பெரிய நிலத்தடி நீர் வீழ்ச்சி அமெரிக்காவில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.. அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள  ரூபி பால்ஸ் எனப்படும் இந்த அருவி தரைக்கு கீழே சுரங்கப் பாதைகளின் வழியாக சென்றால் அங்கு அமைந்துள்ளது. ஆம்... தரைக்கு கீழே குகைகளின் வழி பயணம் செய்தால் மிகவும் உயரமான பாறையிலிருந்து நிலத்தடி குகைக்குள் இந்த அருவி கொட்டுவதை பார்ப்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும், அவ்வாறு இந்த அருவியில் நீர் கொட்டும் உயரம் மட்டும் எவ்வளவு தெரியுமா 1120 அடி... உலகின் புவியியல் அதிசயங்களில் ரூபி அருவியும் ஒன்றாகும். இதற்காக பிரத்யேக பூங்கா, தரைக்கு கீழே செல்லும் லிப்ட் என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகமாக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த அருவி மட்டுமின்றி, இந்த அருவி அமைந்துள்ள தரை கீழ் சுரங்க குகைகளும் ஒரு புவியியல் அற்புதங்கள்தான்.

கொல்கத்தா நகரின் சிறப்புகள்

கொல்கத்தா என்று தற்போது அழைக்கப்படும் நகரம் முன்பு கல்கட்டா என கூறப்பட்டது.  இந்தியாவின் முதல் செய்தி ‌நிறுவன‌ம் கொல்கத்தாவில்தான்  தொடங்கப்பட்டது. முத‌ல் செ‌ய்‌தி‌த்தா‌ள் வெ‌ளியானது‌ம் கொல்கத்தா‌வி‌ல்தா‌ன். கொல்கத்தா‌வி‌ல்தா‌ன் இந்தியாவின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. ஹூ‌க்‌ளி ந‌தி‌யி‌ன் ‌மீது ஹெளரா - கொல்கத்தா நகர‌ங்களை‌ இணை‌க்க‌க் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள ஹெளரா பால‌ம் ‌‌மிக‌ப் பழமையானது‌. 1943‌ல் இது ‌திற‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் தபா‌ல் ‌நிலைய‌‌ம் கொல்கத்தா‌வி‌ல்தா‌ன் உ‌ள்ளது. பி‌ர்லா கோ‌யி‌ல், ஜ‌ெ‌யி‌ன் கோ‌யி‌ல் ஆ‌கியவை கொல்கத்தா‌வி‌ல் ‌சிற‌ப்பு வா‌ய்‌ந்த இட‌ங்களாகு‌ம். அரண்மனைகளின் நகரம் என அழைக்கப்படும் நகரம் கொல்கத்தா. இந்தியாவின் மிகப் பெரிய விளையாட்டு மைதானமான ஈட‌ன் கா‌ர்‌ட‌ன் அமைந்துள்ள நகரம். பிரபலமான எழுத்தாளர் கட்டடம் அமைந்துள்ளது கொல்கத்தாவில்தா‌ன்.

அமெரிக்க பெண்களை அச்சுறுத்தும் இருதய நோய்

அமெரிக்கா்களிடம் கடந்த சில ஆண்டுகளாக இருதய நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக புரோக்கன் ஹார்ட் சின்ட்ரோம் எனப்படும் நோய் மாரடைப்பு நிகரானதாக மருத்துவ நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.  இது கடந்த 15 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.அதிலும் இதனால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்பது கவலைக்குறிய அம்சமாகும். இந்த பாதிப்பானது 50 முதல் 74 வயதினரை தாக்கும் போது நிலைமை இன்னும் விபரீதமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். பெருகி வரும் விவாகரத்துகள், வேலைப்பளு, மாறி வரும் சமூக சூழல் ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தம், சோரவு போன்றவையே இது ஏற்பட காரணம் என்கின்றனர்மருத்துவ வல்லுநர்கள். கடந்த 2006 லிருந்து 2017 வரை இருதய கோளாறு தொடர்பாக இந்த வயது பிரிவினர்கள் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர் என்கிறது அந்நாட்டு புள்ளிவிபரம். அதில் பெரும்பாலோனோர் 50 வயதை கடந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செட்டிநாடு அரண்மனை

இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் செட்டிநாடு அரண்மனை காரைக்குடியில் அமைந்துள்ளது. அண்ணாமலைச் செட்டியார் இந்த அரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார். கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டு செட்டிநாடு அரண்மனை கட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago