முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மத்யாசனம்

தோள்பட்டை கழுத்து வலியால் அவதிப்படுபவர்களுக்கு மத்யாசனம் சிறந்த தீர்வு. இந்த யோகா செய்வதால், மன அழுத்தம், கழுத்துவலி, நரம்பு பிரச்சனை ஆகியவை தீரும். அதேபோல் வயிற்று பகுதியில் அழுத்தம் தரப்படுவதால் கொழுப்புகள் குறைந்து தொப்பை குறைய வழிவகுக்கும். சுவாசத்தை சீர்படுத்தும். மார்புக் கூடு விரிவடையும். தைராய்டு சுரப்பிகள் நன்றாக இயங்கும்.

அதிவேக லைபை

வைபை இணைப்புக்களுக்கு பதிலாக ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணைய இணைப்பினை உருவாக்கப்படுவதே லைபை.இத்தொழில் நுட்பமானது வைபையைப் போல பன்மடங்கு வேகத்தினைக் கொண்டதாக இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள இணைப்புகளை விட 100 மடங்கு வேகமாக இருக்குமாம். லைபை தொழில்நுட்பத்தில் எல்.இ.டி மின்விளக்குகளே பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த லைபை வசதியின் மூலம் 40 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றம் மேற்கொள்ளமுடியும். அகச்சிவப்பு கதிர்களை பயன்படுத்தி இந்தப் புதிய லைபை உருவாக்கப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்களில் லைபை சாத்தியம் என்று கூறப்படுகிறது. பரிசோதனை முயற்சியில் இருக்கும் இத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் இணைய உலகில் திருப்புமுனையாக இருக்கும் .

கிரேட் நிக்கோபார்

நிகோபார் தீவுக்கூட்டங்களில் உள்ள மிகப்பெரிய தீவு கிரேட் நிக்கோபார் தீவு. இந்தத் தீவுப்பகுதியில் ஸ்க்ரப் பவுல் மற்றும் மெகாபாட் என்ற இரண்டு அரிய காட்டு கோழியினங்கள் உள்ளன. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து ஹெலிபாக்டர் சேவைகள் மற்றும் சொகுசுப்படகு மூலமாக இந்த தீவை நாம் அடையலாம்.

மழைக்கால குளியல்

மழைக் காலத்தில் தினமும் குளிப்பது சருமத்திற்கு தீங்கானது. நமது சருமத்தில் பெரிதாக அழுக்கு படியாது. பாக்டீரியா தாக்கம் இருக்காது. மேலும், சாதரணமாகவே நமது சருமம் தன்னை தானே சுத்தம் செய்துக் கொள்ளும் தன்மை கொண்டிருக்கும். மழைக் காலத்தில் தினமும் சுடு நீரில் குளிப்பது சருமத்தை வறட்சியடைய செய்யும். இது தீங்கானது என்கின்றனர். மேலும்  இது, நகங்களின் நலத்திற்கும் கேடு. இதனால் நகங்கள் வலுவிழந்து உடைந்து / விரிசல் அடைந்து போகும்.

இணையதள சேவை

முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கும், அக்யூலா என்ற குறைந்த எடையுள்ள ஆளில்லா விமானங்கள் மூலம் உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணையதள சேவையை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆளில்லா விமான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

தூக்கமின்மை

பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, ஆரம்பத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி ஏற்படும். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும் ஆபத்து அதிகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago