முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இரவில் மனிதர்களை போலவே தூங்கும் தாவரங்கள் - ஆய்வில் ருசிகர தகவல்

பின்லாந்தை சேர்ந்த பின்னிஸ் ஜியோஸ்பாசியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்னும் அமைப்பினர், பின்லாந்து மற்றும் ஆஸ்திரியாவில் தாவரங்களை ஆராய்ச்சி செய்தனர். லேசர் ஸ்கேனிங் முறையில் இரவு நேரத்தில் தாவரங்களில் நிகழும் மாற்றத்தை அவர்கள் கணக்கிட்டனர். அதில் தாவரங்கள் மனிதர்கள்போலவே இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வதாகவும், அது அவைகளின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. எல்லா உயிரினங்களைப் போலவே தாவரங்களின் வளர்ச்சியிலும், முக்கிய மாற்றங்களிலும் தூக்கம் பங்கு வகிப்பது தெளிவாகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பாட்டி வைத்தியம்

முடி உதிர்வு என்பது யாருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை. கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த கண்ட ஷாம்புக்களை உபயோகிக்காமல் இயற்கை முறையில் தீர்வு காண ஆராய வேண்டும். மாங்கொட்டையில் உள்ள ஓட்டை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் பகுதியை அப்படியே அரைத்துக்கொள்ளுங்கள். வெண்ணெய் போல் வரும். இதனுடன் 1 ஸ்பூன் வேப்பம்பூ, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும்.

மேலும் வசதி

விபத்தை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது.இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் சென்சார்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

சூரியனுக்கு விழா

தமிழகத்தில் தஞ்சை, ஒடிசாவில் கோனார்க் பகுதியில் சூரிய கோவில் உள்ளது. இதுதவிர, கேரளா, ஜம்மு காஷ்மீர், குவாலியர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலும் இந்த கோவில்கள் அமைந்துள்ளது. சூரிய தேவன் இடம் பெயர்வதை குறிக்கும்  விழாவாக மகர சங்கராந்தி வட மாநிலங்களில் பொங்கல் நேரத்தில் கொண்டாடப்படுகிறது.

கவனம் தேவை

சிறுவயதில் குழந்தைகள் W வடிவில் உட்கார்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இதை நாம் ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், குழந்தையின் இடுப்பு சுழற்சியில், தீவிர எலும்பியல் பிரச்சனைகளை உருவாக்கும். மேலும், தசைகள் சிதைவுற்று, சுருங்கி, எலும்புகளின் வளர்ச்சியை கடுமையாக பாதிப்படையச் செய்கிறது. எனவே பெற்றோர்கள் இதை கண்காணித்து மாற்ற வேண்டும்.

சாணத்திலிருந்து மின்சாரம் தயாரித்து 50 தெருவிளக்குகளை எரிய செய்யும் கிராமம்

நவீன அறிவியலில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த செய்திதான் சாட்சி. முன்பு மாற்று எரிபொருள் என்ற வகையில் சாண எரிவாயு முறைகள் பின்பற்றப்ப்டடன. பெரும்பாலும் தற்போது அதையாரும் தொடர்வதில்லை என்ற போதிலும் இன்றைக்கும் அது ஒரு சிறந்த மாற்று எரிபொருள்தான். அதே போல மாற்று எரிசக்தி என்ற முறையில் தற்போது அறிவியலில் புதிய முறையாக மாட்டுச் சாணம் உள்ளிட்ட கால்நடை கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை மேல்நாட்டு பண்ணைகளில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சண்டிகர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தொடங்கப்பட்ட போதிலும் இன்னும் பரவலாகவில்லை. இதற்கு முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள வரதராஜபுரம் ஊராட்சி திகழ்கிறது. இங்கு கால்நடை கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள 50 தெரு விளக்குகள் எரிய வைக்கப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 12 மணிநேரம் இந்த ஆற்றலை  பயன்படுத்தி விளக்குகள் எரிகின்றன. இதை இன்னும் திட்டமிட்டு விரிவாக்கினால் கிராமத்துக்கான மின் தேவையையே சமாளிக்கலாம் என்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago