முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஸ்மார்ட் ஸ்கார்ஃப்

காற்று மாசுபடுதலில் இருந்து தற்காத்துக் கொள்ள ஸ்மார்ட் ஸ்கார்ஃப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. வையர் என்ற இந்த ஸ்கார்ஃப், மொபைல் ஃபோனுடன் இணைந்து செயல்படுகிறது.  நாம் வெளியே வரும்போது, காற்றின் மாசு எவ்வளவு, ஸ்கார்ஃப் அணிய வேண்டுமா வேண்டாமா என்பதை இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் போன் தனது அப்ளிகேஷன் மூலம் வழிகாட்டுகிறது.

நோய் எதிர்ப்பு மருந்து

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை குணப்படுத்த நேரடி மருந்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபயாடிக்) மருந்துகளையும் வழங்குவது வழக்கம். இது கிருமிகள், பாக்டீரியாக்களை கொன்று நோயை குணப்படுத்தும். வருங்காலத்தை கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே வான்கோமைசின் என்ற நோய் எதிர்ப்பு மருந்து புழக்கத்தில் இருந்தது. அந்த மருந்தால் இப்போது பலன் இல்லை. இதே மருந்தை மேலும் வீரியப்படுத்தும் வகையில் ஆய்வு செய்தனர். அதில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 1000 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கிறது. எனவே கிருமிகளால் உருவாகும் அனைத்து நோய்களையும் இது கட்டுப்படுத்துமாம்.

வெட்டுக்கிளிகளின் காதுகள் எங்குள்ளன தெரியுமா?

உலகில் உள்ள பெரும்பாலான ஜீவராசிகளுக்கும் புற ஒலிகளை கேட்கும் வகையில் காதுகள் அமைந்துள்்ளன. மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளுக்கு காதுகள் அதன் தலையிலேயே அமைந்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மனிதனை போல அல்லாமல் வெட்டுக்கிளிகளுக்கு காதுகள் எங்குள்ளன தெரியுமா? வெட்டுக்கிளிகளின் காதுகள் அவற்றின் வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. ஒலிகளை கேட்கும் வகையில் அதன் வயிற்றில் அடிப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சவ்வு போன்ற பகுதிக்கு டைம்பனம் என்று பெயர்.

துரித உணவுகள்

துரித உணவுகளை இரவில் அதிகமாகச் சாப்பிடுவதாலும், நேரம் கழித்து சாப்பிடுவதாலும், காலையில் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். துரித உணவுகளில் இருக்கும் மைதா, சீஸ், சமையல் சோடா போன்றவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, உடலுக்கு அதிக கலோரியைக் கொடுத்து, பசியை அடக்கி, நீண்ட நேரத்துக்குப் பசிஉணர்வே ஏற்படாமல் செய்யும்.

பண்டைய காலத்தில் கண்ணாடி எவ்வாறு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

பண்டைய காலத்தில் எகிப்தில் கண்ணாடி பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் குவார்ட்ஸ் எனும் தனிமத்தை மணலிலிருந்து பிரித்தெடுத்து அதை மரச் சாம்பலுடன் கலந்துள்ளனர். பின்னர் அதை களிமண் கலனின் வைத்து சுமார் 750 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்கப்பட்டது. அந்த கலவை உருகி ஒரு பந்து வடிவை அடையும் வரை இந்த செயல்பாடு தொடரும். பின்னர் குளிர்விக்கப்பட்டு, வண்ணம் சேர்க்கப்படும். மீண்டும் மற்றொரு கலனில் அது செலுத்தப்பட்டு இரண்டாவது முறையாக அதிக வெப்பநிலையில் சூடாக்கப்பட்டு குளிர்விக்கப்பட்டதும் கண்ணாடி பெறப்படும்.

மேலும் வசதி

விபத்தை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது.இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் சென்சார்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago