முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாடஹஸ்தாசனம்

பாடஹஸ்தாசனத்தை செய்வது மிகவும் எளிது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு, கால்கள் நன்கு வலிமை அடையும். மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.இந்த ஆசனத்தை தினமும் 3 முதல் 5 முறை செய்து வந்தால், இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது. கால்கள் வலுப்பெறுகின்றன.

ஹேக்கர் உஷார்

ஹேக்கர்களிடம் இருந்து ஸ்மார்ட்போனை பாதுகாக்க வலுவான பாஸ்வேர்டு வைத்து கொள்ள வேண்டும். உங்கள் போன் மறைகுறியாக்கப்பட்டதா? என்பதை செக் செய்யுங்கள். Encryted என்று கூறப்படும் இந்த பாதுகாப்பு அம்சம் என்பது டேட்டாவை ஓப்பன் செய்யும் முன் செய்ய வேண்டிய ஒரு பாதுகாப்பு வழியாகும். மேலும், போனில் உள்ள சாப்ட்வேர்களை அப்டேட் செய்ய வேண்டும்.

ஆஸ்கர் விருதுகள்

திரைப்படங்களுக்கு மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. முதன்முதலில் 1929 இல் மே 16 ஆம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. அதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே விருதில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. மூடி முத்திரையிடப்ப்டு சீல் வைக்கப்பட்ட கவரில் வெற்றி பெறுபவரின் பெயரை அறிவிக்கும் வழக்கம் 1941 இல் தான் தொடங்கியது. 1940க்கு முன்பு வரை லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெற்றியாளர்களை அதன் மாலை பதிப்பில் முந்தைய நாளே அறிவித்துவிடுவதன் காரணமாகவே, 1941 இல் முத்திரையிடப்பட்ட கவர் முறை தொடங்கியது.

திப்பு சுல்தான் ஓவியம் ரூ.6.32 கோடிக்கு விற்பனை

இந்திய சுதந்திர போரின் போது மைசூர் சமஸ்தானத்து மன்னர்களான ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் படைகள் 1780 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் படைகளை ஓட ஓட விரட்டியடித்தனர். பொள்ளிலூர் என்ற இடத்தில் இந்த சண்டை நடைபெற்றது. இந்த வெற்றியை குறிப்பிடும் வகையில் பொள்ளிலூர் சண்டை என்ற தலைப்பில் சுமார் 32 அடி நீளமுள்ள 10 மிகப் பெரிய காகிதங்களில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் ஓவியமாக தீட்டப்பட்டது. இந்த ஓவியம் லண்டனில் புதன் கிழமை ஏலத்துக்கு வந்தது. அப்போது 630000 பவுன்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6.32 கோடிக்கு விற்பனையானது.

வெட்டுக்கிளிகளின் காதுகள் எங்குள்ளன தெரியுமா?

உலகில் உள்ள பெரும்பாலான ஜீவராசிகளுக்கும் புற ஒலிகளை கேட்கும் வகையில் காதுகள் அமைந்துள்்ளன. மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளுக்கு காதுகள் அதன் தலையிலேயே அமைந்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மனிதனை போல அல்லாமல் வெட்டுக்கிளிகளுக்கு காதுகள் எங்குள்ளன தெரியுமா? வெட்டுக்கிளிகளின் காதுகள் அவற்றின் வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன. ஒலிகளை கேட்கும் வகையில் அதன் வயிற்றில் அடிப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சவ்வு போன்ற பகுதிக்கு டைம்பனம் என்று பெயர்.

பறவைகளும் பாட கற்றுக் கொள்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

பறவைகள் எவ்வாறு பாட வேண்டும் எனக் கற்றுக் கொள்வதில்லை; யாரும் அதற்கு கற்று கொடுப்பதும் இல்லை. இது அவற்றுடன் பிறந்த ஒர் இயற்கைப் பண்பாகும். ஆனால் அதே நேரத்தில் பறவைகளால் இசையைக் கற்றுக்கொள்ள முடியாது என்பதும் உண்மையல்ல. சில பறவைகள் பிற பறவைகளின் ஒலியைக் கற்றுக் கொள்வதும் உண்டு. மஞ்சள் நிறமுள்ள கேனரி (canary) எனப்படும் பறவைகள் நைட்டிங்கேல் (nightingale) என்னும் இன்னிசை பாடும் பறவைகளோடு வாழ்ந்தால், அப்பறவைகள் நைட்டிங்கேலின் இசையைக் கற்றுக்கொண்டு இனிமையாகப் பாடும். கிளிகள் மனிதர்களின் தொடர்பினால் சில சொற்களைக் கற்றுக்கொண்டு பேசுவதை நாம் அறிவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago