முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

டால்பின்களை போர்களுக்கு பயன்படுத்துகின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக டால்பின்கள் கூடுதல் கூருணர்வு திறன் மிக்கவை. மேலும் மனிதர்களோடு நன்கு நெருங்கி பழகக் கூடியவை. சங்க காலத்தில் தமிழர்கள் யானைகளை போருக்கு பயன்படுத்தியது போல, தற்போது டால்பின்களை போர்களுக்கும், உளவுக்கும் பயன்படுத்துகின்றனர். அண்மையில் நீருக்கடியில் இருந்து நடக்கும் தாக்குதலில் இருந்து தனது கடற்படையை பாதுகாக்க கருங்கடலில் உள்ள தனது கடற்படை தளத்தில் பயிற்சி பெற்ற டால்பின்களை ரஷியா நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராணுவ நோக்கங்களுக்காக டால்பின்களுக்கு நன்கு பயிற்சி அளித்து உள்ளது ரஷியா . அவை பொருட்களை மீட்டெடுக்க மற்றும்  எதிரி டைவர்ஸைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவும் இதே போல் டால்பின்களுக்கு போர் பயிற்சி அளிக்கிறது.

கறிவேப்பிலையில் இவ்வளவு இருக்கா?

கறிவேப்பிலை அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாகும். கறிவேப்பிலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகமாக கொண்டுள்ளது.சுமார் 10 முதல் 20 கறிவேப்பிலை இலையை எடுத்து அதை தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த பிறகு அதில் இருந்து இலைகளை அகற்றுவதற்காக அதை வடிக்கட்டவும். வெறும் கறிவேப்பிலை தண்ணீர் சிலருக்கு பிடிப்பதில்லை. சுவைக்காக எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.இது கலோரிகளை எரிக்கவும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உதவுகிறது. இதன் மூலமாக உடல் பருமன் ஏற்படுவதை தடுப்பதோடு ஏற்கனவே உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு எடையை குறைக்கவும் உதவுகிறது.கறிவேப்பிலையில் மஹானிம்பைன் என்ற ஆல்கலாய்டு உள்ளது, இது உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. மேலும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

காற்றே எரிபொருள்

அழுத்தப்பட்ட காற்றினை எரிசக்தியாகக் கொண்டு இயங்கும் காரினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஏர்பேட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தவகை கார்கள் மணிக்கு 65 கி.மீ. அதிகபட்ச வேகத்தில் செல்லும். இந்த காரில், 200 கி.மீ. தூரம் பயணிக்க ரூ.70 மட்டுமே செலவாகும் என்பது சிறப்பம்சம்.

இணையதளத்தை நகலெடுக்கலாம்

நல்ல அதிவேக இணைய வசதி அன்லிமிட்டெட்டாக கணக்கின்றி இருக்கும் போது நல்ல இணையத்தளங்களை நகல் எடுத்து வைத்துக் கொண்டால் இணையம் இல்லாத நேரங்களிலோ குறைந்த வேகத்தில் இருக்கும்போதோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிச் செய்வதற்கு உதவும் ஒரு மென்பொருள் தான் 'எச்டிடிராக் வெப்சைட் காப்பியர்.  இந்த மென்பொருள், கட்டற்ற, இலவச மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு.  இதை https://www.httrack.com/  தளத்திற்குச் சென்று  பதிவிறக்கிக் கொள்ளலாம். விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா,  7, 8, லினக்ஸ் டெபியன், உபுண்டு, ஜென்டூ, ஃபெடோரா, ஆண்டிராய்டு  ஆகிய இயங்குதளங்களில் எச்டிடிராக்கை நிறுவிக்கொள்ளலாம். முக்கியமான இணையத்தளங்களை செல்போனிலேயே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம். மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள் எச்டிடிராக்.

தக்காளியின் மகிமை

வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி அன்றாட உணவில் பயன்படுத்தும் தக்காளிக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வயிற்று புற்று நோய் ‘மாலிக்னன்ட் செல்’ எனப்படும் திசுக்களால் ஏற்படுகிறது. இந்த திசுக்களை மேலும் வளரவிடாமலும், அவை பரவாமலும் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உள்ளதாம்.

சஹாராவில் மக்கள்

உலகின் மிகவும் வறண்ட நிலமான பாலைவன பூமி சஹாரா. உலகில் சஹாரா பாலைவனம் மூன்றாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,200,000 சதுர கிலோமீட்டர்கள். கடந்த 100 ஆண்டுகளில் சஹாரா பாலைவனம் 10% வளர்ச்சியடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். சஹாராவில் மக்கள் வாழ்கிறார்கள் தெரியுமா? சுமார் 2.5 மில்லியன் மக்கள் சஹாராவை தங்கள் வீடு என்று அழைக்கிறார்கள். இவர்கள் இங்கு நாடோடிகளாக வாழ்கின்றனர். ஒட்டகங்களுடன் பயணம் செய்யும் பெடோயின் நாடோடி மக்கள் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சுற்றிலும் பாலைவனத்தைச் சுற்றி நகர்கிறார்கள். பருவ மாற்றம் மற்றும் அவர்களின் தேவைகளைப் பொறுத்து இயற்கை வளங்களுக்கு அருகில் கூடாரங்கள் அடித்து முகாம்களை உருவாக்குகிறார்கள். சஹாரா வறண்டது என்ற போதிலும் இரவில் வெப்பநிலை வியக்கும் அளவில் குறைகிறது. வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறையும். பல மலைத்தொடர்களில் பனி தவறாமல் விழுகிறது. சஹாரா பாலைவனத்தில் மொத்தம் 20 ஏரிகள் உள்ளன. சஹாராவில் உள்ள ஒரே நன்னீர் ஏரி சாட் ஏரி. இங்கு 1960கள் வரையிலும் கூட சிங்கங்கள் வாழ்ந்தன. அவை பாலைவனத்தின் வறட்சியால் அழியவில்லை. மனிதர்களின் வேட்டையினாலேயே அவை முற்றிலும் அழிந்து போயின என்பது மிகுந்த சோகம்தானே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago