முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இலையுதிர் காலத்தில் இலையை உதிர்க்காத மரங்கள்

இலையுதிர் காலத்தில் அனைத்து மரங்களின் இலைகளும் நிறம் மாறி உதிர்ந்து கீழே விழும் என்பதல்ல, இதில் சில மரங்கள் மட்டும் விதிவிலக்கு. அவற்றில் சைப்ரஸ் வகை மரங்களும் அடங்கும். Conifer வகையைச் சேர்ந்த மரங்களின் இலைகள் (ஊசி இலைகள்) இவைகளின் நிறம் மாறுவதில்லை அதேபோல் உதிர்ந்து கீழே விழுவதும் இல்லை. Pine tree, cedar, cypress trees, fire, junipers, kauris, larches, redwoods, spruces, yews இவ்வகை மரங்கள் எல்லாம் gymnosperm என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. இவற்றை நாம் கிறிஸ்துமஸ் மரங்கள் என பொதுவாக குறிப்பிடுவோம். டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் அதற்கு உணவாக இவ்வகை மரங்கள் இருந்துள்ளது. இவ்வகை மரங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டாலும் குளிர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது.  நம்மூரில் காணப்படும் அரச மரம், ஆலமரம், வேப்பம் மரம், போன்ற மரங்களை போல அல்லாமல் குளிர் பிரதேச மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்ப்பதில்லை என்பது ஆச்சரியம் தானே..

உயிரினங்களில் கருத்தரிக்கும் ஆண் உயிரி எது தெரியுமா?

உயிரினங்களில் பெரும்பாலும் அனைத்துமே பெண் இனமே கருத்தரிக்கின்றன. ஆனால் ஒன்றே ஒன்றை தவிர. அது கடல் குதிரை. இது ஒருவகை மீன் இனமாகும். கடல் குதிரைகள், பச்சோந்தியைப் போல நிறம் மாறும் தன்மை கொண்டவை. ஆனால் இவை தன்னுடைய ஜோடியைக் கவர்வதற்காக மட்டுமே தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. ஆண், பெண் என இரண்டு கடல் குதிரைகளுமே தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும். கடல் குதிரையில் ஆண்தான் தன்னுடைய குஞ்சுகளை பொரிக்கும். பெண் கடல் குதிரை, ஒரே நேரத்தில் 200 முட்டைகள் வரை, ஆண் கடல் குதிரையின் கருப்பை மீது இடும். அந்த முட்டைகள் மீது, ஆண் கடல் குதிரை தன்னுடைய விந்தணுவை தெளித்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதற்காக ஆண் கடல் குதிரையின் வாலின் கீழ் பகுதியில் ஒரு பை இருக்கும். சுமார் 50 முதல் 100 குஞ்சுகளே பொரிந்து முழுமையாக வெளிவருகின்றன.

திசை காட்டும் தாவரம்

தென் ஆப்பிரிக்க பாலைவனங்களில் காணப்படும் ஒரு வகை தாவர இனம் பாட்சிபோடியம் நாமகுவானம் (Pachypodium Namaquanum). இந்த செடியில் நீளமான ஒரு கிளை மட்டுமே காணப்படுகிறது.மேலும் தண்டு எப்போதும் வடக்கு திசை நோக்கியே சாய்ந்து நிற்க்கும் இயல்புடையது. பாலைவனங்களில் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த செடியை திசைகாட்டும் கருவியாக பயன்படுத்துகின்றனர்.

தாகம் தீர்க்கும்

சர்க்கரை நோய், உடல் உஷ்ணம், அதிக வியர்வை, அதிகளவில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றால் நாவறட்சி ஏற்படும். அதிக வயிற்றுப்போக்கால் நீர்ச்சத்து வெளியேறுவதாலும் நாவறட்சி உண்டாகிறது. அதிக தாகம், நாவறட்சியை போக்க ஆவாரை, அரச இலை, நித்திய கல்யாணி ஆகியவை மருந்தாகின்றன.

மாடலிங்கில் கலக்கும் கேரளத்து கூலி தொழிலாளி

கேரள மாநிலம் எல்லாவற்றிலும் சற்று வித்தியாசமானதுதான். தற்போது அதே கேரளாவில் தினக் கூலி தொழிலாளி ஒருவர் மாடலிங்காக மாறி கலக்கி வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் நெட்டை கலக்கி வருகின்றன. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயதான இவர் அதே ஊரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பிரபல புகைப்பட கலைஞர் ஷரிக் வயலில் கண்களில் இவர் பட்டதும், இவரது தோற்றமே மாறி விட்டது. உள்ளூரில் கசங்கிய லுங்கியும், அழுக்கு சட்டையுமாக வலம் வந்த அவரை, மேக் கப் கலைஞர்ள் மூலம் அசத்தலான மாடலிங்காக மாற்றினார். கோட்டும் சூட்டும் கையில் டேப் சகிதமாக இவர் ஸ்டைலாக கேட் வாக் வரும் வீடியோக்கள் தற்போது நெட்டை கலக்கி வருகின்றன. இவரது புகைப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகின்றன.

கோடையில் 15 செமீ உயரம் வளரும் ஈபில் கோபுரம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரில் அமைந்திருக்கும் மிகப் பெரிய ஈபில் கோபுரம் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். சுமார் 18 ஆயிரம் எஃகு துண்டுகளை 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று இணைத்து இந்த 324 மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட கோபுரத்ைத அமைத்தனர். இது உலக அதிசயங்களில் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கோடை காலத்தில் இந்த கோபுரம் 15 செமீ கூடுதலாக வளர்ந்து விடும் என்றால் ஆச்சரியம் தானே.. ஏன் என்கிறீர்களா, இது முழுக்க முழுக்க உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால், கோடை காலத்தில் எஃகு விரிவடைந்து ஒட்டுமொத்தமாக இதன் உயரமும் அதிகரித்து விடுகிறது. விரிவடையும் போது பாதிக்கப்படாத வகையில் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago