முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

விரைவில் வருகிறது பறக்கும் பைக் - இனி அபார்ட்மெண்டில் பார்க்கிங் சண்டை வராது

நகரங்களில் வசிப்பவர்களின் மிகப் பெரிய பிரச்னை எது என்று கேட்டால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதுதான். இதில் எத்தனை படித்தவர்களாக இருந்தாலும் பார்க்கிங் பிரச்னையை தீர்த்து வைக்க தனி நாட்டாண்மை தான் எப்போதும் வர வேண்டியிருக்கும். போதாக்குறைக்கு வண்டிகளை மாற்றி மாற்றி நிறுத்தி எடுத்து வைப்பதில் கேட் காவலர்களும் களைத்து போய் விடுவர். அபார்ட்மென்ட் கொஞ்சம் பெருசாக இருந்தால் போதும், வண்டியை எங்கே நிறுத்துவது, எப்படி நிறுத்துவது என்பதில் ஒரு இசை நாற்காலி போல பெரும் போட்டியே நடக்கும். இனி அதற்கெல்லாம் வேலையே இருக்காது. நீங்கள் எந்த தளத்தில் இருந்தாலும் அந்த தளத்துக்கு பறக்கும் பைக்கிலோ, காரிலோ போய் இறங்கி, அங்கேயே உங்கள் வீட்டின் பால்கனியில் பறக்கும் பைக் அல்லது காரை நிறுத்திக் கொள்ளலாம். இதனால் நகர நெரிசலில் சிக்கி அவதிப்படவோ, ஹார்ன் ஒலிகளால் தலை வீங்கி போகவோ வேண்டியதில்லை. ஒரு டிஜிட்டல் யுகம் நம் கண்முன்னே மாய உலகமாக மாறிக் கொண்டிருக்கிறது. நமது பேரப் பிள்ளைகள் சாலைகளில் வாகனங்கள் ஓடின என கேட்டால் சிரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

புத்தாண்டு சுவாரசியம்

நியூசிலாந்து நாடு முதன்முதலில் புத்தாண்டை வரவேற்றது. அந்த வரிசையில் மற்றுமொரு சுவாரசியமாக இந்த ஆண்டின் முதல் குழந்தை பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2.72 கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு பெற்றோர் எல்லினா குமாரி என பெயர் வைத்துள்ளனர்.இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆரிவ் குமார் என 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்தது. குறிப்பாக இந்த ஆண்டின் முதல் குழந்தையாக பிறந்தது பாரதி-அஷ்வானி தம்பதியரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆய்வகத்தில் தயாரான செயற்கை வைரங்கள்

நகைகள் என்றாலே உலகம் முழுவதும் முன்னணியில் இருப்பது தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள்தான். இவற்றில் பெரும்பாலும் இவை அனைத்தும் இயற்கை முறையில் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. தங்கத்தை செயற்கையாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்வது பெரும் செலவு பிடிக்கும் காரியம் என்பதால் யாரும் இதுவரை அதில் ஈடுபடவில்லை. வைரத்தில் இதுவரை செயற்கை வைரம் என கூறப்பட்டவை அனைத்தும் விலை மலிவான வைரமாகவே இருந்து வந்தது. ஆனால் முதன்முறையாக இயற்கை வைரத்துக்கு இணையாக மதிப்புள்ள செயற்கை வைரத்தை நகை உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது ஆய்வகத்தில் தயாரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜூவல்லரி பிராண்டான பந்தோரா முதன்முறையாக தனது ஆய்வகத்தில் தயார் செய்த செயற்கை வைரத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மற்றொரு பிராண்டான பந்தோரா பிரில்லியன்ஸ் ஏற்கனவே பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது இதன் புதிய முயற்சி 2022 இல்  உலக சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் கல்வெட்டு, Tamil inscription

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் மங்கோலிய பேரரசரான குப்லாய்கானின் ( Kublai Khan) ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சூவன்லிசௌ(shuan Chou) துறைமுக நகரில் உள்ள இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீன பேரரசரின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ஆம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் பேரரசனான செங்கிஸ்கானின் பேரனாவான். மங்கோலிய பேரரசர்கள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

'மொய் டெக்'

செல்போன் செயலியின் மூலமாக மொய் செய்பவரின் விவரங்களை எழுதிக்கொள்ள புது செயலியை உருவாக்கியுள்ளனர் உசிலம்பட்டிப் பெண்கள்.  'மொய் டெக்' எனும் இந்த செயலி வியக்க வைத்துள்ளது. மேலும் விழாக்களுக்கு வந்து மொய் எழுதும் மக்களுக்கு அவர்கள் மொய் செய்தமைக்கான ரசீது மற்றும் அவர்களது அலைப்பேசிக்கு குறுந்தகவல் என அசத்துகின்றனர்.

மீனின் உயிரணுவிலிருந்து சூழலை பாதிக்காத பிளாஸ்டிக்

இன்றைக்கு உலகை அச்சுறுத்தி வரும் கொடிய அரக்கனாக நாம் பிளாஸ்டிக்கையே சொல்ல முடியும். நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதன் தீமைகள் பட்டியலிட முடியாத அளவுக்கு பெருகிக் கொண்டே போகின்றன. மாற்று பிளாஸ்டிக்கை தேடி விஞ்ஞானிகளும், சூழலியல் ஆர்வலர்களும் தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை ஆறுதல் படுத்தும் செய்தியை சீனாவில் உள்ள தியான்ஜின் பல்கலை கழகம் கொண்டு வந்துள்ளது. அங்குள்ள அறிவியலாளர்கள் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பிளாஸ்டிக்கை சால்மோன் மீனின் உயிரணு மற்றும் தாவர எண்ணை ஆகியவற்றை பயன்படுத்தி கண்டு பிடித்துள்ளனர். இதை ஹைட்ரோஜெல் என்று அழைக்கின்றனர். இனியாவது அது வர்த்தக பயன்பாட்டுக்கு வந்து உலகில் புதிய மாற்றத்தை உருவாக்குமா.. காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago