முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சமண படுகைகளைப்போல மலை உச்சியில் பாறைகளை குடைந்து வீடு கட்டி வசிப்பவர்கள்

தென்னிந்தியா முழுவதும் உள்ள எந்த மலைக்கும், குன்றுக்கும் சென்றாலும் அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட குடை வரை சிற்பங்களையும், கோயில்களையும், படுக்கைகளையும் காண முடியும். இன்றைக்கும் தொல்லியல் துறையின் மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாக நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அவை தாங்கி நிற்கின்றன. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் அப்படி யாராவது மலை உச்சியில் பாறையை குடைந்து குடை வரை குடியிருப்பை அமைப்பார்களா என்றால்... ஆம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். ஆனால் அது நடந்துள்ளது இங்கு அல்ல. இத்தாலியில். அந்நாட்டில் உள்ள Dolomites Mountains என்ற மலையில்தான் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2700 மீட்டர் அதாவது 8 ஆயிரத்து 858 அடி உயரத்தில் பாறையை குடைந்து தன்னந்தனிமையில் ஒருவர் வீட்டை உருவாக்கியுள்ளனர். முதலாம் உலகப் போரின் போது இத்தாலியர்களுக்கும் ஆஸ்திரோ ஹங்கேரியர்களுக்கும் சண்டை வந்த போது அதிலிருந்து தப்ப விரும்பிய சிலர் இது போன்று யாரும் எளிதில் வரமுடியாத இந்த இடத்தில் வீட்டை உருவாக்கினர். தொலைவிலிருந்து பார்க்கும் போது பாறையில் ஒட்டியிருப்பது போல தோன்றும் இந்த வீடு தற்போது பாரம்பரிய சுற்றலா தளத்தில் இடம் பெற்றுள்ளது. மிகவும் ஆச்சரியமும் வியப்பும் அளிக்கும் செய்தியாக இது உலகுக்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்.1 ஏன் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது

ஏப்ரல் 1-ம் தேதி உலகம் முழுவதும் உள்ளவர்கள் முட்டாள்கள் தினமாக கொண்டாடுகின்றனர். அப்போது சின்ன ஏமாற்றுகள், நகைச்சுவைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வழக்கம் எப்போதிருந்து தொடங்கியது. 1381-ல் இங்கிலாந்து அரசர் 2-வது ரிச்சர்டுக்கும், ராணி பொகிமியாவின் ஆனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் மார்ச் 32-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை கேள்விபட்டதும் மக்கள் அதை கொண்டாட தயாராகினர். அப்போதுதான் இடையிலேயே மார்ச்சில் 32 தேதி இல்லையே என தெரிய வந்தது. உடனே கொண்டாடத்தை நிறுத்தினர். அதுவே பின்னர் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. மற்றொரு காரணம் 1582-ல் பிரான்சில் பயன்பாட்டில் இருந்த பழைய காலண்டரை நீக்கி விட்டு சார்லஸ் போப் புதிய ரோமானிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். இருந்த போதிலும் பலரும் பழைய காலண்டரையே பயன்படுத்தினர். இதை குறிப்பிடும் வகையிலும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது, 19-ம் நூற்றாண்டிலிருந்து இது தொடங்கியது.

சவாசனம்

அதிக பரபரப்பு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் இந்த சவாசனத்தை செய்யலாம். இந்த ஆசனம் மூலம் உடல் தணிவடைதல், மன அமைதி, உடலுக்கு சீரான ஓய்வு கிடைக்கும். மிகவும் எளிதான ஆசனமாகவும், வீட்டில் எளிதாக செய்யவும் இயலும். இந்த ஆசனம் செய்வோர் உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் எல்லாத் தூண்டுதல்களுக்கும் ஆட்படாமல் எந்த எதிர்ச் செயலுமின்றி பிணம் போல் ஆக வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

செலவு குறைவு

தற்போது ஒளி மூலம் பிரிண்ட் எடுக்கும் செலவு குறைவான புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பயன்படுத்தப்படும் சிறப்பு பேப்பரில் உள்ள பிரஸ்ஷியன் நீலம், டைட்டேனியம் டை ஆக்சைடு என்ற வேதி கலவை மீது எலக்ட்ரான்களை செலுத்தும் போது தாளில் உள்ள எழுத்துக்கள் வெளிவந்து பிரதிபலிக்கிறது. இதன் மூலம் பேப்பரில் உள்ள எழுத்துகள் நீல வடிவில் பிரிண்ட் ஆகிறது.

விஞ்ஞானி டார்வினின் செல்ல பிராணி

உயிர்களின் பரிணாம வளர்ச்சி குறித்து முதன் முதலாக உலகுக்கு புதிய அறிமுகத்தை செய்தவர் சார்லஸ் டார்வின் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது செல்ல பிராணி எது தெரியுமா.. ஆமை தான். தொடக்கத்தில் அது செல்லப்பிராணியாக இல்லை.. கலபகோஸ் தீவுகளுக்கு அவர் சென்ற பிறகு, அதற்கு ஹாரியட் என பெயரிட்டு வளர்த்தார். ஆனால் தனது உரிமையாளரை காட்டிலும் 126 ஆண்டுகள் அந்த ஆமை உயிர் வாழ்ந்தது. அதாவது 176 வயதில் கடந்த 2006 இல் அது உயிரிழந்தது. ஹாரியட்டை இறுதியில் வளர்த்தவர் பிரபல முதலை வேட்டையாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இர்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இடம் பெற்ற நாணயம் எப்போது வெளியானது தெரியுமா?

இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி ரூபாய் நோட்டுகளில் தமிழ் மொழி இடம் பெற்றிருந்தது நமக்கு தெரியும். அதைவிட பெருமை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்த முக்கியமான 8 மொழிகள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டு வந்தன. அதில் ஹிந்தி இடம்பெறவில்லை. இந்தி மொழியானது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகே ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டன. 1953 ஆம் ஆண்டுகளுக்கு பிறகே இந்தி மொழியானது பெரும்பாலும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற துவங்கின. இந்நிலையில் முன்னாள் முதல்வர் அண்ணா நூற்றாண்டை போற்றும் வகையில் 2009 இல் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. நினைவு நாணயங்களில் தலைவர்களின் அதிகாரப்பூர்வ பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அண்ணாவின் நாணயத்தில் அவரது சிறப்புப் பெயரான ‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு’ என்று பொறிக்கப்பட்டிருப்பது வேறு எந்தத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்பு. அதேபோல், அண்ணாவின் கையெழுத்தைத் தாங்கியிருக்கும் இந்த நாணயம், தமிழ் மொழி இடம்பெற்றிருக்கும் ஒரே நாணயமாகவும் திகழ்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago