முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நிறத்தை அதிகரிக்க

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ஆயுட்காலத்தை அதிகரிக்கும்

குழந்தை பெற்றவர்கள் , பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்லது. சுமார் 15 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்ததில், குறைந்தது ஒரே ஒரு குழந்தையையாவது பெற்றவர்கள், குழந்தைகள் ஏதும் பெறாதவர்களைக் காட்டிலும், குறைவான இறப்பு ஆபத்தையே எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த ஆய்வில் 1911-லிருந்து 1925 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களை பரிசோதித்ததில் குழந்தை பெற்றவர்களுக்கும், பெறாதவர்களுக்கும், ஆண்-பெண்கள் இடையேயான ஆயுட்கால இடைவெளி அவர்களின் 60வது வயதில், ஆண்களுக்கு 2 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.

பார்வை அற்றவர்களுக்காக விரைவில் செயற்கையாக தயாரான ரோபோ கண்கள்

இன்றைக்கு அனைத்து துறைகளிலும் ரோபோடிக்ஸ் இல்லாத இடமே இல்லை என்று சொல்லிவிடலாம்.. பார்வையற்றோரின் பார்வையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த தொழில்நுட்பம் விரைவில் நிஜமாக போகிறது. ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (HKUST) ஆராய்ச்சியாளர்கள் குழு சமீபத்தில் ஒரு மனித, குழிவான விழித்திரையை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்மாதிரி புரோஸ்டெடிக் கண்ணை உருவாக்கியுள்ளது, இது நானோஒயர்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை விழித்திரை சிலிகான் பாலிமரில் பொருத்தப்பட்டுள்ளது, இது நானோ கனெக்டர்களுக்கு இடையில் ஒரு இடையீடாக பங்கு வகிக்கிறது. இந்த செயற்கை விழித்திரை ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 0.3 மைக்ரோவாட் முதல் 50 மில்லி வாட் வரை பரந்த அளவிலான தீவிரங்களின் ஒளியைக் கண்டறிய முடியும். தற்போது சோதனை வடிவில் இருக்கும் இவற்றில் இன்னும் களையப்பட வேண்டிய ஏராளமான சிக்கல்கள் நிறைய உள்ளன. இருந்த போதிலும் விரைவில் அவை நிஜமாக்கப்படும் என நம்பலாம்.

இரு மலைகளுக்கு நடுவே கயிறு கட்டி அசால்ட்டாக நடந்து சென்ற வாலிபர்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் Nathan Paulin. இவருக்கு உயரத்தில் கயிறு கட்டி நடப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி அத்தனை விருப்பம். சிலருக்கு தரையில் நடப்பதற்குள்ளேயே கண்ணை கட்டிக் கொண்டு வந்து விடும். ஆனால் மனுசன் எத்தனை உயரத்திலும் ஒரு ஒல்லியான கயிறை கட்டிக் கொண்டு சாதாரணமாக நடந்து சென்று விடுகிறார். இவர் ஏற்கனவே ஈபிள் டவர் உள்ளிட்ட பல்வேறு உயரமான இடங்களில் கயிறு கட்டி நடந்தவர். தற்போது  ரியோடி ஜெனிரோவில் உள்ள பாபிலோனியா மலைக்கும் உர்கா மலைக்கும் இடையே கயிறு கட்டி அசால்ட்டாக நடந்து சென்ற வீடியோ வேகமாக பரவி வருகிறது.  இரண்டுக்கும் இடையிலான தொலைவு 500 மீட்டர். உயரம் 264 அடி அதாவது 80 மீட்டர். மேலேயிருந்து கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது. மனுசன் அதற்கெல்லாம் அசந்த ஆள் இல்லை. ஜாலியாக நடந்து மலையை கடந்து விட்டார்.

புதிய கண்டுபிடிப்பு

கார்பன் டை ஆக்சைடை மீத்தேனாக மாற்றும் முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ரோடியம் என்ற நுண்துகள் மூலம் நிகழ்த்தப்படும் வேதிவினையால் உலக அளவில் ஏற்படும் மாசுபாட்டுக்கு முக்கிய காரணியாக விளங்கும் கார்பன் டை ஆக்சைடினை மீத்தேனாக மாற்ற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்/ பைக்குகளுக்கு நைட்ரஜன் நிரப்பலாமா

நமது பைக் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு டயர்களில் ஏர் நிரப்புவது வழக்கம். அவை பொதுவான காற்றுதான். ஆனால் தற்போது புதிதாக சில பெட்ரோல் நிலையங்களில் நைட்ரஜன் வாயு நிரப்புகின்றனர். இவை வாகனங்களுக்கு நல்லதா... கொஞ்சம் பார்க்கலாமா...இந்த வகையான காற்று தான் ரேஸ் கார்/பைக் டயர்களில் நிரப்பப்படுகிறது. இந்த நைட்ரஜன் காற்றை நம் டயரில் அடைப்பது மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. வாகனங்களில் நைட்ரஜன் ஏர் அடைக்கப்படுவதால் டயர் ஏர் பிரஷர் குறையாது. மேலும் பிரஷர் அளவை துல்லியமாக கணக்கிடும் எந்திரங்கள் தற்போது வந்துள்ளதால் டயருக்கு தேவையான துல்லியமான பிரஷர் கிடைக்கும். முழுமையாக நைட்ரஜன் ஏர் இருப்பதால் அது இரும்புடன் சேர்ந்து ரியாக்ட் ஆகாமல் இருக்கும். இதனால் துரு பிடிக்காது. பஞ்சர் ஏற்பட்டாலும் காற்று வெளியேற சாதாரண டயரை விட சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் டயரின் வாழ்நாள் அதிகரிக்கும். ஆகவே இனிமேல் உங்கள் சாய்ஸ்...நைட்ரஜன் தானே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago