முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் ஆண்டின் சில நாட்கள் மட்டும் உப்பு நீர் உருவாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. என்ன மக்களே.. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா.. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், செவ்வாயின் மேற்பரப்பில் நடுவில் அமர்ந்திருக்கும் ஒரு பாறை குளிர்காலத்தில் நிழலை உருவாக்குகிறது. குளிர்காலத்தில் அந்த நிழல் பகுதியில் பனி குவிகிறது. அதில் சூரிய ஒளி படும்போது ​​பனி திடீரென்று வெப்பமடைகிறது. அதன் விரிவான ஆய்வுகளில், கிரகத்தில் காலையில் மைனஸ் 128 டிகிரி செல்சியஸ் இருந்த வெப்பநிலை மதியத்துக்குள் மைனஸ் 10 டிகிரி செல்சியஸாக மாறுகிறது. இது ஒரு நாளில் சில மணி நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய மாறுதலாகும். ஆனால், குறுகிய காலத்தில், உறைபனி அனைத்தும் கரைந்து வளிமண்டலத்திற்கு செல்வதில்லை. இதனால், அப்பகுதியில் இருக்கும் நீரானது உப்பு கரைசலாக இருக்கலாம். ஏனென்றால் உப்பு நிறைந்த தரையில், பனி மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருகிவிடும். பனி அனைத்தும் திரவமாக அல்லது நீராவியாக மாறும் வரை உப்புநீர் இருக்கிறது. இந்த நிகழ்வு நடந்து முடிந்து, அடுத்த செவ்வாய் ஆண்டில் (687 நாட்கள்), இதே செயல்முறை மீண்டும் நிகழ்கிறது என்கிறது அந்த அறிக்கை. ஆச்சரியமாக உள்ளதல்லவா...

சுவிஸ் நாட்டில் விலங்கை வளர்ப்பது சட்டவிரோதம் ?

சுவிஸ் நாட்டில் கினியா பிக் விலங்கை தனியாக வீட்டில் வைத்து செல்லப்பிராணியாக வளர்ப்பது சட்டவிரோதமாகும் ஏனெனில் அவை கூட்டமாக வாழும் விலங்குகள் இனத்தை சேர்ந்தவையாகும் எனவே கினியா பிக் விலங்கை ஒற்றையாக தனியாக வீட்டில் வைத்து வளர்க்க அந்த நாடு தடை விதித்துள்ளது ஆகவே அவற்றை கூட்டமாக வளர்க்கலாமே ஒளிய ஒற்றையாக தனித்து வைத்து வளர்க்கக்கூடாது என்று அந்த நாடு அறிவித்துள்ளது.

ஆஸ்கர் விருது பின்னணி

உலக அளவில் சினிமாத் துறையில் சாதித்த கலைஞர்களுக்கு போர்வீரன் சிலை வழங்கப்படுகிறது. இந்த வழக்கம் 1929ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. இந்த சிலையை லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சேர்ந்த சிற்பி ஜார்ஜ் ஸ்டேன்லி வடிமைத்துள்ளார். வெண்கலத்தால் உருவாக்கப்பட்டு தங்க முலாம் பூசப்படும் இந்த விருதுகள் 13.5 இன்ச் உயரமும், 8.5 பவுண்ட் எடையும் கொண்டது. 2-ம் உலகப்போரின் போது வெண்கலத்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் 3 ஆண்டுகள் பிளாஸ்டரில் தயாரிக்கப்பட்டு வர்ணம் தீட்டி விருதுகள் வழங்கப்பட்டன. போர் முடிந்த பின்னர் அந்த விருதுகளை தங்க முலாம் பூசப்பட்ட விருதுகளாக ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பு மாற்றிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

கைரேகை தீவு எங்கிருக்கு தெரியுமா?

பார்ப்பதற்கு கட்டை விரல் ரேகை போல காட்சியளிக்கும் இந்த படத்தில் உள்ளது ஒரு தீவு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. நம்பித்தான் ஆக வேண்டும். இப்படி ஒரு தீவு குரோஷியா நாட்டில் உள்ள அட்லாண்டிக் கடல் பிராந்தியத்தில் உள்ளது. இந்த தீவு முழுவதும் நிறைந்திருக்கும் உலர்ந்த பாறைகளின் குவியல் தான் இதற்கு கைரேகை போன்ற ஒரு தோற்றத்தை அளிக்கிறது. Baljenac என்று அழைக்கப்படும் இந்த குட்டி தீவில் 23 கிமீ பரப்பு அளவுக்கு இது போன்ற பாறைகள், கற்கள் பரந்து விரிந்து நீண்ட சுவர்களை போல காணக் கிடக்கின்றன. தற்போதைய இணைய யுகத்தில் இந்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதை ஐநா பாரம்பரிய பட்டியலில் சேர்த்து பாதுகாக்க வேண்டும் என குரோஷிய அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வியக்க வைத்த தமிழன்

கி.மு 1010ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட தஞ்சாவூர் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளை நன்றாக உற்றுநோக்கினால், அதில் ஐரோப்பிய உருவத் தோற்றமுடைய ஒருவரின் சிலை உள்ளது தெரியும். அந்த ஐரோப்பியர் யார் என்று தற்போது ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அவர் பிரான்ஸ் மன்னர் இரண்டாம் ராபர்ட். அவரது காலமும் கி.மு 10-ம் நூற்றாண்டுகள்தான். 1500ம் ஆண்டில் தான் வாஸ்கோடாகாமா உலகை சுற்றிவந்தார். அதுதான் உலகை ஒன்றிணைக்க முயற்சித்த முதல் நடவடிக்கை என்று எண்ணப்பட்ட நேரத்தில், தமிழன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே உலகத்தோடு தொடர்பு கொண்டு வாணிபம் செய்துவந்தது தெரியவந்தது. இதனாலேயே பிரான்ஸ் மன்னர்களின் சிலையை உலகின் சிறப்புவாய்ந்த கோயிலில் வடிவமைத்து வைத்துள்ளான் சோழப்பெருமகன்.

கோகோ-விற்கு மாற்று.

‘கோகோ’ வில் இருந்து சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. அதற்காக சர்வதேச அளவில் 45 லட்சம் டன் கோகோ தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அந்த அளவு கோகோ சாகுபடி செய்ய முடியவில்லை. 37 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். இதற்கு மாற்று வழியை கண்டுபிடிக்க பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், பலாக் கொட்டையில் இருந்து சாக்லேட் தயாரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர். பலாக் கொட்டையில் சாக்லேட்டின் நறுமணம் மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பொருள் மறைந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதில் இருந்து சாக்லேட் தயாரிக்க பயன்படும் பொருள் உருவாக்க முடியும். இதன் மூலம் கோகோ பற்றாக்குறையால் சாக்லேட் தயாரிப்பில் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago