முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இயற்கை வழி

முகப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்படுத்தும். தழும்புகள் வேறு எளிதில் போகாது. முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காயங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம். அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.

இருளில் ஒளிரும் மனித உடல்

இருளில் மனித உடல் ஒளிரும் என்பது உங்களுக்கு தெரியுமா.. ஒரு நாளில் மிக குறைந்த அளவிலோ, மிக அதிகமாகவோ உடல் ஒளிர்கிறது. ஆனால் அதை நாம் வெறும் கண்ணால் பார்க்க இயலாது. அது வெளியிடும் ஒளியின் அளவானது நமது கண்கள் உணரும் திறனை விட 1000 மடங்கு குறைவானதாகும். ஆனால் இந்த ஒளியானது அகச்சிவப்பு கதிர்களிலிருந்து மாறுபட்டது. அது உடலின் வெப்பத்திலிருந்து வெளிப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு ஒளி உமிழும் உடலின் திறனானது காலை 10 மணி அளவில் மிக குறைவாகவும், மாலை 4 மணி அளவில் உச்சத்திலும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முற்றிலும் ஒளியற்ற அரையில் ஆரோக்கியமான நபர்களை நிறுத்தி வைத்து குறைவான ஒளியில் படம் பிடிக்கும் கேமராவை கொண்டு விஞ்ஞானிகள் இதை படம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன தொட்டில்

குழந்தைகள் வீட்டில் தூங்குவதை விட, கார் பயணங்களில் இயல்பாகவே உறங்கிவிடும். இந்த வழக்கத்தை வைத்து குழந்தைகளுக்கென நவீன படுக்கை ஒன்றை கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது. வீட்டில் எந்தவித தொந்தரவுமின்றி குழந்தைகள் உறங்க இது உதவுகிறது. மேக்ஸ் மேட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான இந்தத் தொட்டிலில் பல தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன. தெருவிளக்குகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எல்.இ.டி விளக்குகள், காரின் ஒலியை மிமிக் செய்யக்கூடிய அமைப்புகள் இந்த நவீனத் தொட்டிலில் உள்ளன. குழந்தை எதுபோன்ற பயணத்தில் உறக்கத்தை எட்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீங்களும் எளிதாக வானொலி தொடங்கலாம்

ஃபேஸ்புக், பிளாக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் மிக எளிதாக போட்காஸ்டிங் (Podcasting) எனப்படும் வானொலியைத் தொடங்க முடியும். பிளாக்கை எப்படி இலவசமாகத் தொடங்க முடிகிறதோ, அதே போன்று போட்காஸ்டிங் வானொலியையும் இலவசமாகவே தொடங்க முடியும். தனியாக நாமே ஒரு பக்கத்தை அமைப்பதற்குப் பெரிய சர்வர்கள் தேவைப்படும்; அதனால், முதலில் ஏதேனும் ஒரு போட்காஸ்டிங் எனப்படும் சேவை இணையதளத்தை நாடலாம். இதற்குப் பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன. மேலும், செயலியை செல்பேசியிலும் பதிவிறக்கிக்கொள்ள முடியும். நம் செல்பேசியிலேயே நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து, அதிலேயே எடிட்செய்யும் வசதியும் உள்ளன. எனவே ஸ்மார்ட்போன் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் போட்காஸ்டிங் எனப்படும் வானொலியைத் தொடங்க முடியும். இதற்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. இதற்காக ‘ஆங்கர்’ (anchor.fm), ‘ஸ்பாட்டிஃபை’ (open.spotify.com), ‘கூகுள் பாட்காஸ்ட்’ (google.com/podcasts), ‘ஆப்பிள் பாட்காஸ்ட்’ (podcast.apple.com), ‘பிரேக்கர்’ (breaker.audio), ‘காஸ்ட் பாக்ஸ்’ (castbox.fm), ‘ஓவர் காஸ்ட்’ (overcast.fm), ‘பாக்கெட் காஸ்ட்’ (pca.st), ‘ரேடியோ பப்ளிக்’ (radiopublic.com) போன்ற இணையதளங்கள் இலவசமாகவே இடம் தருகின்றன. ஆனால், அரசின் ஒலிபரப்புக் கொள்கைகளுக்கு உட்பட்டே போட்காஸ்டிங் எனப்படும்ஒலிபரப்பும் இருக்க வேண்டும். ஒலிபரப்புக் கொள்கைகளை ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளத்துக்குச் (mib.gov.in/broadcasting/air-broadcast-code) சென்று பார்த்துக்கொள்ளலாம்.

டினோசர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்ந்தன என தெரியுமா?

டினோசர் என்றாலே பெரியவர்கள் தொடங்கி சிறிவர்கள் வரை அனைவருக்கும் ஆர்வம் தான். ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து அழிந்து போன உயிரினங்களில் மிகப் பெரியவை டினோசர்கள். அவை குறித்த ஆய்வுகள் உலகம் முழுவதிலும் நடைபெற்று வருகின்றன. அதில் அண்மையில் நடைபெற்ற ஆய்வில் டினோசர்கள் 90 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு அண்டார்டிகா பகுதிகளில் நடமாடியது தெரியவந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஆல்ப்ரெட் வேக்னர் கல்வி நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன் முடிவுகள் நேச்சர் இதழிலும் வெளியிடப்பட்டன. 90 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகா பிரதேசம் இப்போது போல பனி படர்ந்த பிரதேசமாக இல்லாமல் அடர்ந்த வனமாக இருந்தததாக சொல்லப்படுகிறது. அவற்றில் டினோசர்கள் நடமாடின என்கிறது அந்த ஆய்வு.

இஞ்சியின் மகிமை

தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஒரு இஞ்சி துண்டை நேரடியாக ஸ்கால்ப்பில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின் 10-15 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், தலைமுடி உதிர்வது முற்றிலும் நின்றுவிடும். மேலும், ஸ்கால்ப்பில் தொற்றுகளால் பொடுகு ஏற்படுவதை இது தடுக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago