முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தூக்கம் தான் உங்கள் ஆளுமையை தீர்மானிக்கிறது

பலரும் உறக்கத்தை வெறுமனே ஓய்வெடுப்பதற்கான இன்டர்வெல்லாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உறக்கமா நாம் அறியாத பல விசயங்களை உள்ளடக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக நீங்கள் எந்த நிலையில் உறங்குகிறீர்கள் என்பது தான் உங்களது ஆளுமையை தீர்மானிப்பதாக சொல்கிறார்கள். இது குறித்து ஆய்வு செய்த நிபுணர் கிரிஷ் இட்ஷிகோவிஸ்கி கூறுகையில், கருவில் இருப்பதை போல உறங்க விரும்புபவர்கள் பார்க்க கடினமானவர்களாக தோன்றினாலும், மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர்களாக இருப்பார் என்கிறார். இவ்வாறு ஒவ்வொரு நிலைக்கும் ஒரு ஆளுமை இருப்பதாக சொல்லப்படுகிறது.

மழைக்கால குளியல்

மழைக் காலத்தில் தினமும் குளிப்பது சருமத்திற்கு தீங்கானது. நமது சருமத்தில் பெரிதாக அழுக்கு படியாது. பாக்டீரியா தாக்கம் இருக்காது. மேலும், சாதரணமாகவே நமது சருமம் தன்னை தானே சுத்தம் செய்துக் கொள்ளும் தன்மை கொண்டிருக்கும். மழைக் காலத்தில் தினமும் சுடு நீரில் குளிப்பது சருமத்தை வறட்சியடைய செய்யும். இது தீங்கானது என்கின்றனர். மேலும்  இது, நகங்களின் நலத்திற்கும் கேடு. இதனால் நகங்கள் வலுவிழந்து உடைந்து / விரிசல் அடைந்து போகும்.

பீர் பாட்டில்

செவ்வாயில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை, நாசா விஞ்ஞானிகள் மேற்கொற்கொண்டு வரும் நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தில் மது பாட்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த மது பாட்டில் புகைப்படம், கடந்த 2007-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாம்.

உலகில் தினமும் எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன என தெரியுமா?

சுற்றுச்சூழலுக்கு மிகவும் உயிர் நாடி மரங்களும் தாவரங்களும். அவற்றை மனிதன் நாள்தோறும் அழித்து வருகிறான். இதனால் கொடிய நோய்களால் அழிந்தும் வருகிறான். உலகம் முழுவதும் சுமார் 3.04 டிரில்லியன் மரங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அவற்றில் சுமார் 27 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. அதுவும் எதற்காக, கழிவறை காகிதம் தயாரிப்பதற்காக. அவ்வாறு பார்த்தால் ஆண்டுக்கு 9.8 மில்லியன் மரங்கள் வெட்டப்படுகின்றன. தோராயமாக ஒரு மறுசுழற்சி கொண்ட காகிதத்தில் அச்சடிக்கப்படும் நியூ யார்க் டைம்ஸ் மூலமாக 75 ஆயிரம் மரங்களை காப்பாற்ற முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவின் முதல் ரயில் எங்கு ஓடியது

இந்திய ரயில்வே சுமார் 170 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது சரி இந்தியாவின் முதல் ரயில் எங்கே ஓடத் தொடங்கியது. அப்போது ஏப்ரல் 16, 1853-ம் ஆண்டு பிற்பகல் 3:30 மணியளவில் அது மும்பையில் நடந்தது. என்ன அது. இன்றைக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என மிக பிரமாண்டமாக மிளிரும் அந்த ரயில் நிலையம் அக்காலத்தில் மிகவும் சாதாரணமாக காணப்பட்டது. அதில்தான் இந்தியாவில் அன்றைய தினம் முதல் ரயில் தனது பயணத்தை தொடங்கியது.சரியாக 3.35 மணிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, போரிபந்தர் ரயில் நிலையத்தில் இருந்து தானேவுக்கு ரயில் கிளம்பியது. 32 கிலோ மீட்டர் பயணிக்க, இந்த ரயில் 57 நிமிடம் எடுத்துக்கொண்டது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் போரிபந்தர் மற்றும் தானே இடையே பயணிக்க165 வருடங்கள் கடந்த பிறகும், இப்போதும் ஒரு மெதுவான பயணிகள் ரயில் இந்த தூரத்தை கடக்க அதே நேரம்தான் எடுத்துக் கொள்கிறது.

வாரம் முழுவதும்...

பொதுவாக காதலர் தினம் என்றால் அனைவருக்கும் பிப்ரவரி 14 மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் காதலர் தினமானது பிப்ரவரி 7 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. காதலர் தின வாரத்தின் முதல் நாள் ரோஸ் டேவில் ஆரம்பித்து ப்ரப்போஸ் டே, சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, இறுதியாக கிஸ் டேவில் முடிவடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago