முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கவனம் தேவை

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்சனை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பு இதனால் அதிகமாகும்,  மேலும், இது சுகாதாரமானது கிடையாது. பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது.

‘வெஸ்ட்-4’ ரோபோ

தேளில் இருந்து வி‌ஷம் பிரித்து எடுக்கும் புதிய ‘ரோபோ’: விஞ்ஞானிகள் தயாரித்தனர். தேளின் வி‌ஷத்தில் மருத்துவ குணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது உயிர்காக்கும் மருந்துகளில் கலக்கப்படுகிறது. தற்போது, தேள்களிடம் இருந்து வி‌ஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’க்களை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது மிகவும் எடை குறைவானது. சிறிய அளவிலும் உள்ளது. இந்த ‘ரோபோ’ தேளில் இருந்து விரைவாகவும், பாதுகாப்பாகவும் வி‌ஷத்தை பிரித்து எடுக்கின்றன.தேளிடம் இருந்து வி‌ஷத்தை பிரித்து எடுப்பது மிகவும் கஷ்டமானது. இறந்த தேள்களின் கொடுக்குகளில் இருந்து மின்சார அதிர்ச்சி மூலம் வி‌ஷம் பிரித்தெடுக்கப்படுகிறது. தேளில் இருந்து வி‌ஷத்தை பிரித்து எடுக்கும் ‘ரோபோ’வை விஞ்ஞானி மொயுத் மிகாமல் கண்டு பிடித்துள்ளார். அதற்கு ‘வெஸ்ட்-4’ என பெயரிட்டுள்ளார். இந்த ரோபோ மிக சிறியதாக இருப்பதால் ஆய்வகம் அல்லது வெளியிடங்களில் வைத்து பணியாற்ற முடியும்.

குச்சி ஐஸை கண்டுபிடித்தது ஒரு சிறுவன் என்றால் நம்ப முடிகிறதா?

குழந்தைகள் முதல் குச்சி ஊன்றி நடக்கும் கிழவர்கள் வரை குச்சி ஐஸ் விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். இன்று உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் குச்சி ஐஸ் செய்முறையை கண்டுபிடித்தது, வெறும் 11 வயது சிறுவன்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தை சேர்ந்த ஃபிராங்க் எப்பர்சன் என்ற 11 வயது சிறுவன் எதேச்சையாக கண்டுபிடித்ததுதான் குச்சி ஐஸ். ஒருநாள், அவனுடைய வீட்டுக்கு வெளியே, சோடா பவுடர், நீர் மற்றும் அவற்றை கிளறும் குச்சி ஆகியவற்றை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான் ஒருகட்டத்தில், அவற்றை அங்கேயே மறந்து விட்டு, தூங்கப் போய்விட்டான். அடுத்த நாள் காலை, அங்கு வந்த பார்த்த போது, அவனுக்கு ஒரே ஆச்சர்யம். அவன் வைத்துவிட்டு போன சோடா தண்ணீர் அப்படியே உறைந்து போய் கிடந்தது. அதை சுவைத்து பார்த்த அவன் அதன் சுவையில் மயங்கிப் போனான். தொடர்ந்து சோடா நீரை உறைய வைத்து தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அதை அறிமுகம் செய்தான் எப்பர்சன். பின்னர் அதற்கு உரிய காப்புரிமை பெற்று ஒரு ஐஸ் கம்பெனியை தொடங்கினான். அன்றைக்கு அங்கு தொடங்கிய குச்சி ஐஸ் இன்றைக்கு உலகையே ஆட்டி படைத்து வருகிறது.

முதல் காரை உருவாக்கியவர்

இன்றைய நவீன பெட்ரோல் கார்களுக்கான அடித்தளம் 1886ல் தான் உருவானது. ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் பென்ஸ் என்பவர், பெட்ரோலில் இயங்கும் முதல் காரைக் கண்டுபிடித்தார். நம்மூர் ரிக்ஷாக்களைப் போல் மூன்று சக்கரங்கள் கொண்டதாக முதல் கார் இருந்தது. இதை, பேட்டன்ட் மோட்டார் கார் என்று கார்ல் பென்ஸ் பெயரிட்டு அழைத்தார். இவர்தான், முதல் கார் தொழிற்சாலை உருவாக்கி, கார்களை பொதுவிற்பனைக்கு கொண்டு வந்த பெருமைக்கு உரியவர் ஆவார். அந்த காரில் பாதுகாப்பு அம்சங்கள், மேற்கூரை ஆகியன கிடையாது, ஸ்டேரிங், 2 இருக்கைகள் மட்டுமே இருந்தன. துணியிலிருந்து அழுக்கைப் போக்கும் ‘லிக்ராய்’ என்றழைக்கப்பட்ட பென்சின் திரவம் தான் எரிபொருளாகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்/ பைக்குகளுக்கு நைட்ரஜன் நிரப்பலாமா

நமது பைக் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு டயர்களில் ஏர் நிரப்புவது வழக்கம். அவை பொதுவான காற்றுதான். ஆனால் தற்போது புதிதாக சில பெட்ரோல் நிலையங்களில் நைட்ரஜன் வாயு நிரப்புகின்றனர். இவை வாகனங்களுக்கு நல்லதா... கொஞ்சம் பார்க்கலாமா...இந்த வகையான காற்று தான் ரேஸ் கார்/பைக் டயர்களில் நிரப்பப்படுகிறது. இந்த நைட்ரஜன் காற்றை நம் டயரில் அடைப்பது மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. வாகனங்களில் நைட்ரஜன் ஏர் அடைக்கப்படுவதால் டயர் ஏர் பிரஷர் குறையாது. மேலும் பிரஷர் அளவை துல்லியமாக கணக்கிடும் எந்திரங்கள் தற்போது வந்துள்ளதால் டயருக்கு தேவையான துல்லியமான பிரஷர் கிடைக்கும். முழுமையாக நைட்ரஜன் ஏர் இருப்பதால் அது இரும்புடன் சேர்ந்து ரியாக்ட் ஆகாமல் இருக்கும். இதனால் துரு பிடிக்காது. பஞ்சர் ஏற்பட்டாலும் காற்று வெளியேற சாதாரண டயரை விட சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் டயரின் வாழ்நாள் அதிகரிக்கும். ஆகவே இனிமேல் உங்கள் சாய்ஸ்...நைட்ரஜன் தானே.

3 டன் எடை கொண்டது

சீனாவில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறவையின் புதைப்படிவம் ஒன்று கனான் என்ற பகுதியில் கிடைத்துள்ளது. படிமத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த பறவை 3 ஆயிரம் கிலோ எடையும், 8 மீட்டர் உயரமும் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்தப் பறவைக்கு பெய்பிலாங் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பறவை மிகப்பெரிய பெரிய அளவில் கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 40 செ.மீ. உயரம், 5 கிலோ எடை கொண்ட ராட்சத பழங்கால முட்டைகளின் படிமங்கள் ஏராளமான கிடைத்தன. அந்த முட்டைகள் இந்த பறவையினத்தின் முட்டைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பறவைகள் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago