முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மணப்பெண் ரோபோ

சீனாவில் பொறியாளர் ஒருவர் பெண் தேடித் கிடைக்காததால் ரோபோவை மணமுடித்துள்ளார். ஹவாய் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியாளரான ஜெங் ஜியாஜியா என்பவர் யிங்யிங் எனும் பெண் ரோபோவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண நிகழ்ச்சியில் அவரின் தாய் மற்றும் நண்பர்களும் கலந்து கொண்டனர். திருமணத்தில் யிங்யிங் ரோபோவின் மீது பாரம்பரிய சிவப்பு துப்பட்டா கொண்டு அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. 35 வருடங்களுக்கு பிறகு ரோபோவை மனிதர்கள் மணமுடிப்பது இயல்பாகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் ரோபோவை கரம்பிடித்த நிகழ்வு சீன ம‌க்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நாசாவை முந்தும்

நாசாவுக்குத் தேவையான விண்கலங்களைத் தயாரித்து வழங்கி வந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சந்திரனுக்கு மனிதர்களை அழைத்து செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 384,400 கிலோ மீட்டர் தூரம் உள்ள சந்திரனுக்கு 2018 -ம் ஆண்டு 2 மனிதர்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் கன ராக்கெட் மூலம் அழைத்து செல்கிறதாம்.

வரிக்குதிரையை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

உடலில் கருப்பு வெள்ளை கோடுகளை கொண்டுள்ளதால் இதை வரிக்குதிரை என்கிறார்கள். இவை சுமார் 30 ஆண்டுகள் உயிர் வாழும் பாலூட்டிகள். மனிதர்களுக்கு கை ரேகை போல இவற்றுக்கு வரிக்கோடுகள் ஒவ்வொரு குதிரைக்கும் மாறுபட்டே காணப்படும். இவை நின்றபடியே உறங்கக் கூடியவை. ஒரு வரிக்குதிரையின் கழுத்தின் மீது, மற்றொன்று தன்னுடைய கழுத்தை சாய்த்தபடி நின்று தூங்கும். சுமார் 2 மீ உயரம், 3 மீட்டர் நீளம், 250 முதல் 500 கிலோ எடையுடையதாக இவை காணப்படும். மணிக்கு 55 கிமீ வேகத்தில் ஓடும். நாள் ஒன்றுக்கு சுமார் 80 கிமீ வரை நடக்கும். இவை கூட்டமாகத்தான் வாழும். இவற்றை தனியே பார்க்க இயலாது. இதன் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்றால் வரிக்குதிரையை பழக்க முடியாது என்பதுதான். அதற்கான பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக விலங்கியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இது மிகவும் ஆச்சரியமானது தானே...

ஆய்வாளர்களின் விருப்பம்

ஹரியானாவில் உள்ள ராக்கிகர்ஹி ஓவுறு தொல்பொருள் ஆய்வாளர்களின் கனவாகும். இதை 1963-ம் ஆண்டு சிந்து சமவெளியில் மிக பெரிய நகரம் என கண்டுபிடித்தனர். மொஹெஞ்சோடரோ மற்றும் ஹாரப்பாவில் உள்ள தளங்களைவிட இது பெரிது என்று கூறப்படுகிறது. தற்போது அதில் இருந்த பொக்கிஷங்கள் களவாடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் ஒரு விநோத கிராமம்

அமெரிக்கா என்றாலே எல்லோருக்கும் வானளாவிய கட்டிடங்கள், மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வசதிகள், செழிப்பு மிக்க நாடு என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் அங்கும் கூட சற்று கூட வளர்ச்சியடையாத கிராமம் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா... நம்பித்தான் ஆக வேண்டும். அரிசோனா மாகாணத்தில் கிராண்ட் கேன்யோன் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள சுபாய் என்ற கிராமம்தான் இன்னும் வளர்ச்சியடையாத கிராமம். வளர்ச்சியடையாத என்றால் அந்த கிராமத்துக்கு சாலை வசதி, ரயில் போக்குவரத்து வசதி கூட கிடையாது. சுமார் 300 பேர் மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்துக்கு நடந்தோ அல்லது 2 பேர் செல்லக் கூடிய சிறிய விமானத்திலோதான் செல்ல முடியும். அங்கு முழுக்க முழுக்க அமெரிக்காவின் அசலான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இருந்த போதிலும் அந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் 2 சர்ச்சுகள், விடுதிகள், ஆரம்ப பள்ளிகள், பலசரக்கு கடை மற்றும் தபால் நிலையம் உள்ளது. அங்குள்ள மக்கள் ஹவாசுபாய் மொழியை பேசுகின்றனர். விவசாயம்தான் பிரதான தொழில். விவசாய பணிகளை கழுதை அல்லது குதிரையை வைத்து மேற்கொள்கின்றனர். விவசாய பொருள்களை அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த அதிசய கிராமத்தை பார்வையிட வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காகத்தான் அங்கு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு செல்வதற்கு பழங்குடியின பாதுகாப்பு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பது கூடுதல் தகவல். அமெரிக்கா என்பது ஒரு கனவுதான் என்பது இப்போதாவது புரிந்தால் சரி..

வீட்டில் சீனித்துளசி வளர்த்தால் சர்க்கரைக்கு குட்பை சொல்லி விடலாம்

ஸ்டிவியா (Stevia) என்று சொல்லப்படும் ‘இனிப்புத் துளசி அல்லது சீனித்துளசி’ மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம் பராகுவே. ஜப்பான், கொரியா, சீனா மற்றும் கனடாவிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. சீனாதான் அதிகம் ஏற்றுமதி செய்கிறது. கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நாட்டுச் சர்க்கரையை விட, வெள்ளைச் சர்க்கரை மனிதனை அதிக நோய்களுக்கு ஆளாக்குகிறது. நாட்டுச் சர்க்கரை வாங்க முடியாதவர்கள் சீனித்துளசி செடிகளை வளர்க்கலாம். நான்கு பேர் அருந்த நான்கு இலைகளை சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இதனால் வெள்ளைச் சர்க்கரை வாங்கவும் தேவையில்லை, நோய்வாய்ப்பு ஏற்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இந்தச் செடிகளை எளிதாக வீட்டில் வளர்க்கலாம். மற்ற செடிகளைப் போல இதற்கும் கவனிப்பு இருந்தாலே போதுமானது. கரும்பின் சர்க்கரையை விட 20 சதவிகிதத்துக்கும் மேல், இனிப்புச் சுவை அதிகமாக உள்ளது. மேலும், இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளன. சீனித்துளசி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை. இதனால் சர்க்கரை நோயாளிகளும் இனிப்பு துளசியின் பொடியை தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றில் கலந்து பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பு. அப்புறம் என்ன...இப்போதே நர்சரிக்கு சென்று சீனித்துளசிக்கு ஆர்டர் செய்து விடுங்கள். என்ன சரிதானா..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago