உலகின் 8-வது இயற்கை அதிசயம் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது. இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது ஆகும். இதனால் உலகின் 8-வது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது. ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை. எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
சீனாவில், ஃப்யூக்சிங் என்று பெயரிடப்பட்டுள்ள புல்லெட் ரயில், பயணிகள் நெரிசல் உள்ள, சுமார் 1,318 கி.மீ. கொண்ட பெய்ஜிங்-ஷாங்காய் வழித்தடத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த தூரத்தை புல்லெட் ரயில் 5 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 400 கி.மீ. வேகத்திலும், சராசரியாக மணிக்கு 350 கி.மீ. வேகத்திலும் பயணிக்கும் திறன் பெற்றது. முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் அவசரகாலங்களில் ரயிலின் வேகத்தை தானாகவே குறைக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து புல்லெட் ரயிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் வகையிலான தொழில்நுட்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறபம்சம்.
தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், சென்னை முதலிய பல இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
சென்னை போன்ற பெருநகரங்களில் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த பழத்தையும் விலைக்கு வாங்கலாம். அதிலும் குறிப்பாக ஆப்பிள்கள் விற்காத சூப்பர் மார்க்கெட்களோ, ஸ்டோர்களோ இருக்க முடியாது. ஆனால் அவை பறித்து ஓராண்டு கழித்தே விற்பனைக்கு வருகின்றனவாம். ஆப்பிள்கள் பொதுவாக ஆகஸ்ட் தொடங்கி நவம்பர் மாதங்களில்தான் அறுவடை சீசன். அவை பறிக்கப்பட்டு, வேக்ஸ் தடவி,் சூடான காற்றில் காய வைத்து குளீருட்டப்பட்ட பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர் அவை பேக் செய்யப்பட்டு நம்மூர் சூப்பர் மார்க்கெட்களை அடைய 6 மாதம் முதல் 1 வருடம் வரை கூட ஆகுமாம்.
இன்றைய நவீன உலகத்தில் நீட்டல், முகத்தல், நிறை என அனைத்தும் நவீன கணிதத்தின் மெட்ரிக் முறையிலேயே பயன்படுத்தப்படுகின்றன. நீர் பொருள்களை அளக்க லிட்டர், மில்லி லிட்டர் இப்படி, நீளத்தை அல்லது தூரத்தை அளக்க மில்லி மீட்டர், செமீ, மீட்டர் இப்படி, எடையை அளக்க கிராம், மில்லி கிராம், கிலோ கிராம்... இப்படி. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் உள்ள சுமார் 200 நாடுகள் இந்த முறைகளையே அளவீடுகளுக்கு பயன்படுத்துகின்றன. ஆனால் இதை பயன்படுத்தாத நாடுகளும் உலகில் உள்ளது என்றால் ஆச்சரியமானது தானே.. அவை மியான்மர், லைபீரியா மற்றும் அமெரிக்கா. அண்மையில் லைபீரியாவும், மியான்மரும் மெட்ரிக் அளவீடுகளை ஏற்பதாக அறிவித்தன. ஆனால் அமெரிக்கா மட்டும் விதி விலக்கு. அவை யார்டு, அவுன்சு, பவுண்டு என்று பழைய கணக்கை கொண்டுள்ளது என்றால் ஆச்சரியமானு தானே..
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களைக் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடிப்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் கனவாக இருந்தது. இதற்கு வடிவம் கொடுக்கும் நவீன சென்சார்களைத்தான் ஆப்பிள் நிறுவன பயோமெடிக்கல் என்ஜினியர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


