மற்றொரு பறவையின் கூட்டில் தனது முட்டைகளை இட்டு, மற்ற பறவைகள் மூலம் தனது சந்ததியை பாதுகாக்கும் பறவைகளை `பாராசிடிக் பறவைகள்’ என்று அறிவியல் துறையில் அழைக்கின்றனர். அதேபோல, பறவைகளில் இளம் குஞ்சுகளைப் பராமரித்து, வளர்க்கும் வேலையை இன்னொரு பறவையிடம் விட்டுவிடுவனவற்றை Parasitic bird என்றும் அவை சார்ந்து வாழ்கின்ற பறவையை Host bird என்றும் அழைக்கின்றனர். அதற்கு நம் கண்முன்னே இருக்கின்ற சிறந்த உதாரணம் காக்கையும் குயிலும். குயில் காக்கையின் கூட்டில் முட்டையிட்டு விடுகின்றது. முட்டையுடைய நிறம் மற்றும் வடிவத்தில், காகத்தின் முட்டையோடு குயிலுடையதும் ஒத்திருக்கும். அதே போல அக்கா குயில் (common hawk cuckoo) என்றழைக்கப்படும் ஒருவகைக் குயில் இனம், தவிட்டுக் குருவியின் கூட்டில் முட்டையிடும்.சுடலைக் குயில் (pied cuckoo) என்றழைக்கப்படும் ஒருவகைக் குயில் இனம், சின்னான் வகையைச் சேர்ந்த கேப் புல்புல் (cape bulbul) என்ற பறவையின் கூட்டில் முட்டையிடும். ஆனால், அதன் முட்டையும் சின்னானுடைய முட்டையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இருந்தாலும், அதைச் சின்னான் தவிர்க்காமல், அடைகாத்து தன்னுடைய குஞ்சுகளைப் போலவே கவனித்துக் கொள்கின்றன.இப்படி, தன் இனத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக குயில்கள் காகங்களைச் சார்ந்திருக்கின்றன. அவற்றிடமிருந்து தன் முட்டைகளைக் காப்பாற்ற, காக்கைகள் குயில்களிடம் போராடுகின்றன. இரண்டின் போராட்டத்திற்கும் வெற்றி கிடைக்கின்றது. இறுதியில் இரண்டுமே தம் இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
தற்போது கோவிட் - 19 என்ற வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக உருப்பெற்றுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கானோர் இதற்கு பலியாயினர். உயிரை காப்பாற்றிய சின்ட்ரோம் கே நோய் குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இரண்டாம் உலக போரின் போது நாஸி படையினர் யூதர்களை கொத்து கொத்தாக குறிவைத்து கொலை செய்தனர். அதனால் அவர்களை காப்பாற்றுவதற்காக சின்ட்ரோம் கே என்ற போலியான நோய் ஒன்று இருப்பதாக இத்தாலி டாக்டர்கள் பரப்பினர். இதன் மூலம் மருத்துவமனைக்கு வந்த யூதர்களை அவர்கள் நாஸிக்களிடமிருந்து காப்பாற்றினர். இதனால் யூதர்களை அங்கு தனிமைப்படுத்தி டாக்டர்கள் பாதுகாத்தனர். அவர்களை தொடர்பு கொண்டால் அந்த கொடிய நோயால் நாமும் மரணித்து விடுவோம் என உண்மையாகவே நாஸிக்கள் அஞ்சி யூதர்களை நெருங்கவில்லை.
கூகுள் மேப்பில் ஜி.பி.எஸ் மூலம், குரல் வழிகாட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கூகுள் மேப்பில் கேம்கள் விளையாடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப் மூலம் இப்போது 'சி' கேம் விளையாட முடியும். கூகுள் மேப்பில் உள்ள மஞ்சள் நிற குறியீட்டை தொட்டால், இந்த கூல் கேமின் திரை திறக்கும்.
செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நீண்ட நாட்களாகவே அதிக முன்னுரிமை பட்டியலில் வைத்துள்ளது நாசா. ஆய்வுகள் தொடர்ந்துவரும் நிலையில் தற்போது அதிர்ச்சி தகவலாக, முன்னர் எண்ணியதை விடவும் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும்போது புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் இரு மடங்கு காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மாதிரி அமைப்பு ஒன்றினை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக அண்டவெளியிலுள்ள கதிர் வீச்சுக்கள் நேரடியாக செவ்வாய் கிரகத்தினை சென்றடைவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தஞ்சை இருப்பது போல, கேரளத்தின் நெற்களஞ்சியமாக உள்ள குட்டநாட்டில், அலைகள் எழாத 'backwaters' எனப்படும் உப்பங்கழி நீரோடைகள் இருக்கின்றன. ஆழப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த குட்டநாடு, கடல் மட்டத்தில் இருந்து 4-10 அடிகள் வரை கீழ் உள்ளது. உலகிலேயே அதிகளவு கடல்மட்டத்திற்கு கீழ் விவசாயம் செய்யப்படும் பகுதி இதுவே. ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும் இங்கு, நெல், வாழை ஆகியன முதன்மையாக பயிரிடப்படுகின்றன. பம்பை ஆறு, மீனச்சிலாறு, அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு ஆகிய நான்கு பெரிய ஆறுகள் குட்டநாட்டில் பாய்கின்றன. குட்டநாட்டில் படகுகளே பிரதான போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.
இனு, உப்பை ஒதுக்காமல் அழகிற்காக பயன்படுத்தலாம். மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பதால், கன்னத்தின் அழகு அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் உப்பை சேர்த்து உடலை நன்கு தேய்த்து கழுவ சருமம் அழகாகவும், பொலிவோடும் காணப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வருங்கால வளர்ச்சிக்கு தேவையானதும், அவசியமான மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை, மதுரை நகரங்களுக்கு நிச்சயம் கொண்டு வருவோம் : மத்திய அரசு நிராகரித்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
19 Nov 2025சென்னை : கோவை, மதுரை மெட்ரோ திட்ட மத்திய அரசு நிராகரித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டாட்சிக் கருத்தியலை சிதைப்பதை சுயமரியாதைமிக்க மண்ணான
-
மராட்டிய அரசியலில் பரபரப்பு: பா.ஜனதா- சிவசேனா திடீர் மோதல்
19 Nov 2025மும்பை : பா.ஜனதா- சிவசேனா இடையே திடீர் மோதலில் அமைச்சரவை கூட்டத்தை சிவசேனா மந்திரிகள் புறக்கணித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
-
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு கோவையில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
19 Nov 2025கோவை : பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
-
விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றம்: அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை?
19 Nov 2025சென்னை : விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றம் ஏற்படும் என்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
-
ஆலங்குளம், கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
19 Nov 2025சென்னை : ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை
19 Nov 2025புதுடெல்லி : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடையை விதித்துள்ளது.
-
சிங்கள ஆட்சியாளர்களுக்கு திருமாவளவன் கண்டனம்
19 Nov 2025சென்னை : இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமையின்கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது என்று தெரிவித்துள் வி.சி.க.
-
பாரதிய ஜனதாவில் இணைந்த பிரபல நடிகை ஊர்மிளா உன்னி
19 Nov 2025திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகை ஊர்மிளா உன்னி பா.ஜனதாவில் இணைந்தார்.
-
தென்னாப்பிரிக்காவுக்கு 150 பாலஸ்தீனியர்கள் நாடு கடத்தல்
19 Nov 2025ஜோகன்னஸ்பெர்க் : தனி விமானம் மூலம் சட்டவிரோதமாக தென்னாப்பிரிக்காவுக்கு 150 பாலஸ்தீனியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
-
கனமழை எதிரொலி; குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக தடை நீட்டிப்பு
19 Nov 2025தென்காசி : கனமழை எதிரொலி காரணமாக குற்றாலத்தில் வெள்ளபெறுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கூகுள் மேப்பில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்
19 Nov 2025வாஷிங்டன் : கூகுள் மேப்பில் 10 புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
-
ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை இந்தியா வருகை
19 Nov 2025டெல்லி : ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் இந்தியா வந்துள்ளார்.
-
கோவை பயணம் குறித்து தமிழில் பதிவிட்ட பிரதமர்
19 Nov 2025புதுடெல்லி : கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்றது குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
-
ரஷ்ய அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: முக்கிய விசயங்கள் பற்றி ஆலோசனை
19 Nov 2025மாஸ்கோ : ரஷ்ய அதிபருடன் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
பாட்னா, காந்தி மைதானத்தில் விழா: பீகார் முதல்வராக இன்று நிதிஷ்குமார் பதவியேற்பு : பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு
19 Nov 2025பாட்னா : தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பீகாரின் முதல்வராக நிதிஷ்குமார்10-வது முறையாக இன்று பதவியேற்கவுள்ளார்.
-
ஏ.ஐ.யை நம்பாதீர்கள்: சுந்தர் பிச்சை
19 Nov 2025வாஷிங்டன் : ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
-
பிரதமர் மோடியிடம் இ.பி.எஸ். வைத்த முக்கிய கோரிக்கைகள்
19 Nov 2025கோவை : கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.
-
ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரயில் கால அட்டவணை வெளியீடு
19 Nov 2025மதுரை : ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
19 Nov 2025சென்னை : அ.தி.மு.க., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
-
லெபனானில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு
19 Nov 2025சிடோன் : லெபனானில் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்தி வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பீகார் காற்று தமிழகத்திலும் வீசுகிறது: கோவை வேளாண் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
19 Nov 2025கோவை : பீகார் காற்று தமிழகத்திலும் வீசுகிறது என்று கோவை வேளாண் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
நவ.24-ல் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு : தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்
19 Nov 2025சென்னை : வங்கக்கடலில் வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-11-2025.
20 Nov 2025 -
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை
20 Nov 2025திண்டுக்கல், திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை: பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு
20 Nov 2025சென்னை, தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை என்று பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு கூறினார்.


