பெருவில் புதிய பல்லி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அதன் தேசிய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய பல்லி இனம் லியோலேமஸ் வார்ஜண்டே(Liolaemus warjantay) என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இது அந்நாட்டு மலையான பெருவியன் ஆண்டிஸில் 4,500 மீட்டர் அதாவது 14,700 அடி உயரத்தில் வாழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பெருவின் அரேக்விபாவில் உள்ள கோட்டாஹுவாசி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை பல்லியான லியோலெமஸ் வர்ஜண்டே, லியோலெமஸ் இனத்தைச் சேர்ந்தவை. இதில் 280 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனப் பிரிவுகள் உள்ளன. இப்பல்லி கண்டுபிடிக்கப்பட்ட பகுதி 4, 90,550 ஹெக்டேர் பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை கொண்டதாகும்.. பல்லிக்கு பின்னால் இத்தனை பெரிய விஷயமா... அடேங்கப்பா..
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
அண்மையில் நம்ம தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ேபாது, மீட்பு படையினர் முதலில் தேடியது கருப்பு பெட்டியைத்தான். விமானங்கள் விபத்துக்குள்ளானால் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டியைத்தான். இந்த கருப்பு பெட்டி என்பது விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பாக அதனுள் நடந்த அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்து வைத்திருக்கும் பெட்டகம். இதன் மூலம் விபத்துக்கான காரணத்தை டக்கென்று கண்டுபிடித்து விடலாம். அதே போல பூமிக்கும் ஏதேனும் கருப்பு பெட்டி இருக்கா... என்று கேட்டால். இப்போதைக்கு இல்லை. ஆனால் விரைவில் அப்படி ஒரு முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.பூமியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பதிவு செய்யக்கூடிய டிசாஸ்டர் ரெக்கார்டர் என்ற ஒரு சாதனம் இந்த ஆண்டு நிறுவப்பட உள்ளது. பூமியின் கருப்புப் பெட்டி என்று அழைக்கப்படும் இத் திட்டம் நமது கிரகத்தின் அழிவுக்கான பாதையின் ஒவ்வொரு அடியையும் துல்லியமாக பதிவு செய்யும். சூரிய சக்தியால் இயங்கும் இந்த பெட்டகம் சராசரியாக ஒரு பள்ளிப் பேருந்தின் நீளம் இருக்கும்.இது எந்தவகையான இயற்கை பேரிடரையும் தாங்கிக் கொண்டு பூமியின் மீது நடக்கும் அனைத்து தரவுகளை சேமிக்க வல்லது. இது 7.5 செமீ தடிமனான எஃகு தகடுகளை கொண்டு மூடப்பட்டிருக்கும். பூமியில் உள்ள மிகவும் பாதுகாப்பான இடத்தில் இப்பெட்டி வைக்கப்படும்.இதில் வைக்கப்படும் ஹார்ட் டிரைவ்கள் காலநிலை தொடர்பான தகவல்களை பதிவுசெய்து சேமித்து வைக்கும். கிளெமெங்கர் பிபிடிஓ எனப்படும் தகவல் தொடர்பு நிறுவனம் மற்றும் க்ளூ சொசைட்டி ஆகியவை சேர்ந்து இதை மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னெஸ்ஸி என்ற இடத்தில் உள்ள மிருககாட்சி சாலையில் கோமோடோ டிராகன் எனப்படும் ராட்சத பல்லி இன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் மிகப் பெரிய அதிசயம் என்னவென்றால் பெண் பல்லிகள் ஆண் துணை இல்லாமலேயே தானே கருவுற்று குட்டிகளை ஈனுகின்றன. ஆனால் மிகவும் அரிதாகவே இவை நடந்ததாக சொல்லப்படுகிறது.
நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். இவரது ஆய்வில், மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயன பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிய வந்துள்ளதையடுத்து, புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காதலர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கண்டு ரசிக்க வேண்டிய அழகிய, அதிசய சுரங்கப் பாதை எங்குள்ளது தெரியுமா...உக்ரைன் நாடு. ரஷ்யாவுக்கு அருகில் உள்ள ஒரு குட்டி நாடு. நாடுதான் குட்டி, ஆனால் ஐரோப்பாவிலேயே அதிகமான அழகிய கட்டிடங்கள், சுற்றுலா தளங்கள், சாகச விளையாட்டு தளங்கள், பாரம்பரிய சந்தைகள் என பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான 2 ஆவது மிகப் பெரிய நாடாகும். இங்குதான் இயற்கை எழில் கொஞ்சும் காதலர் பசுமை சுரங்கப்பாதை அமைந்துள்ளது. சுமார் 3 கிமீ நீளம் கொண்ட இந்த பாதை ஒரு கைவிடப்பட்ட ரயில் தடமாகும். ஒரு காலத்தில் அருகில் உள்ள மர ஆலையிலிருந்து தினமும் மரங்களை சுமந்து கொண்டு ரயில் இந்த தடத்தில் சென்று வந்துள்ளது. தற்போது இந்த தண்டவாளத்தை பசுமை போர்த்திய சுரங்கம் போல இயற்கை அற்புதமானதாக மாற்றியுள்ளது. உலகில் உள்ள காதலர்கள் எல்லாம் இதை நோக்கி தினம் தினம் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.அத்தனை அற்புதமான இடமாகும். இதில் நடந்து செல்வதே மிகவும் பரவசமளிக்கும் அனுபவமாக அமையும். அந்நாட்டில் உள்ள Kleven நகரில் கார்பெந்தியன் மலைத் தொடர் காடுகளுக்கு மத்தியில் இந்த வழித்தடம் அமைந்துள்ளது.
ஜோதிடத்திலும், மக்கள் பேச்சு வழக்கிலும் சனிக்கு நல்ல பெயர் கிடையாது. மக்கள் வாயில் அதிகமாக வசைபாடப்படும் ஒரு கிரகம் சனி. ஆனால் அறிவியலில் ஆச்சரியம் மிகுந்தது மட்டுமல்ல, மிகுந்த வளம் மிக்கதும் கூட. அண்மையில் வெளியான ஆய்வில் வெளிவந்த உண்மையை கேட்டால் அப்படியே ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பீர்கள்... ஆம், நாம் அன்றாடம் வசை பாடும் சனி கிரகத்தில் ஆண்டுதோறும் வைர மழை பொழியுமாம்.. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், சனி, யுரேனஸ், நெப்டியூன் கிரகங்களில் காணப்படும் அதிக அழுத்தம் காரணமாக கார்பன் அணுக்கள் அப்படியே படிகங்களாக மாறி விடுமாம். கார்பன் அணு படிகம் என்பது வைரமன்றி வேறில்லை என்பது விபரமறிந்தவர்களுக்கு தெரியும். இதை ஒரு குட்டி ஆய்வகத்தில் வைத்து பரிசோதித்தும் பார்த்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சனி கிரகத்தில் அழுத்ததில் ஏற்படும் மாற்றம் காரணமாக இது போல எக்கச்சக்கமான வைர மழை பொழியுமாம். அதாவது சுமார் 2.2 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமானவை அவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-11-2025.
21 Nov 2025 -
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
21 Nov 2025சென்னை : கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளதாக அவ
-
இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை: கவுகாத்தியில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் : புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
21 Nov 2025கவுகாத்தி : இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
போலீஸ் அனுமதி மறுப்பு எதிரொலி: விஜய் பொதுக்கூட்டத்தை வேறு ஒரு நாளில் நடத்த த.வெ.க. முடிவு
21 Nov 2025சேலம், விஜய் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வேறு ஒரு நாளில் பொதுக்கூட்டம் நடத்த த.வெ.க.வினர் முடிவு செய்துள்ளனர்.
-
அரசியல் கட்சி பொதுக்கூட்டம், ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்விற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தமிழக அரசு
21 Nov 2025சென்னை : அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மத நிகழ்விற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்ன
-
மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயரால் தமிழக வாக்காளர்கள் மத்தியில் குழப்பம்
21 Nov 2025சென்னை : மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயர் விஜய் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேலும் வரும் தேர்தலில் 3 டி.வி.கே.
-
பாக்.கில் தலிபான் பயங்கரவாதிகள் 23 பேர் சுட்டுக்கொலை
21 Nov 2025இஸ்லாமாபாத், 23 தலிபான் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுகொன்றது.
-
மெக்சிகோவின் பாத்திமா போஷ் மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்வு
21 Nov 2025பாங்காக், மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை மெக்சிகோ பாத்திமா போஷ் வென்றார்.
-
துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி உயிரிழப்பு
21 Nov 2025துபாய் : துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெ
-
கடற்படை ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக உ.பி.யை சேர்ந்த இருவர் கைது
21 Nov 2025பெங்களூரு : கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உ.பி.யை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
21 Nov 2025திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஜனாதிபதி திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
ரூ.89.70 கோடி மதிப்பிலான 584 குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
21 Nov 2025சென்னை : தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.11.2025) சென்னை ஹாரிங்டன் சாலை வேம்புலி அம்மன் திட்டப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும
-
சிறுமி கொலை வழக்கில் அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை : உறுதி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
21 Nov 2025மதுரை : சிறுமி கொலை வழக்கில் அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நாம் அனைவரும் எஸ்.ஐ.ஆர். பணியை ஆதரிக்க வேண்டும் : உள்துறை மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
21 Nov 2025காந்திநகர் : நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர். பணியை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
கா்நாடக அரசியலில் திடீர் குழப்பம்: துணை முதல்வர் சிவகுமார் ஆதரவாளர்கள் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி
21 Nov 2025பெங்களூரு : முதல்வர் சித்தராமையா ஆட்சியில் அமர்ந்து 2.5 ஆண்டுகள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், சித்தராமையாவுக்கு எதிராக ஆளும் காங்கிரசில் துணை முதல்வ
-
டெல்லி கார் வெடிப்பு வழக்கு: மேலும் 4 பேருக்கு என்.ஐ.ஏ. காவல்
21 Nov 2025புதுடெல்லி, டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு நெருக்கடி: சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமார் கைது
21 Nov 2025சபரிமலை : சபரிமலை தங்கம் அபகரிப்பு வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. பத்மகுமாரை போலீசார் கைது செய்தனர்.
-
வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்: 6 பேர் உயிரிழப்பு
21 Nov 2025டாக்கா, வங்காளதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 6 பேர் உயிரிழந்தனர்.
-
ஜி-20 உச்சி மாநாடு: தென்ஆப்பிரிக்க சென்ற பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு
21 Nov 2025புதுடெல்லி, ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க 3 நாள் பயணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
-
மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகிறார்: விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி
21 Nov 2025சென்னை, அடுத்த மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகும் விதமாக விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
-
மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூர், திருவாரூரில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம்
21 Nov 2025சென்னை : மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் வரும் 23, 24-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவை சர்வதேச திரைப்பட விழா: 81 நாடுகளின் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன
21 Nov 2025சென்னை, வருகிற 28-ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட கோவாவில் தொடங்கியது. இவ்விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன.
-
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
21 Nov 2025கிருஷ்ணகிரி : தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார்.
-
அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
21 Nov 2025புதுடெல்லி, அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்துகளை முடக்கியுள்ளதை அடுத்து அமலாக்கத்துறையால் இதுவரை சட்டப்படி முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு, தற்போது ரூ
-
சீனாவுக்கு உளவு பார்த்ததாக புகார்: முன்னாள் பெண் மேயர் உள்பட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை
21 Nov 2025மணிலா, சீனாவுக்கு உளவு பார்த்த புகாரில் பிலிப்பைன்சின் வடக்கு பிராந்தியமான பம்பன் நகர முன்னாள் பெண் மேயர் உள்பட 8 பேருக்கு ஆயுள் விதிக்கப்பட்டுள்ளது.


