முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இலையுதிர் காலத்தில் இலையை உதிர்க்காத மரங்கள்

இலையுதிர் காலத்தில் அனைத்து மரங்களின் இலைகளும் நிறம் மாறி உதிர்ந்து கீழே விழும் என்பதல்ல, இதில் சில மரங்கள் மட்டும் விதிவிலக்கு. அவற்றில் சைப்ரஸ் வகை மரங்களும் அடங்கும். Conifer வகையைச் சேர்ந்த மரங்களின் இலைகள் (ஊசி இலைகள்) இவைகளின் நிறம் மாறுவதில்லை அதேபோல் உதிர்ந்து கீழே விழுவதும் இல்லை. Pine tree, cedar, cypress trees, fire, junipers, kauris, larches, redwoods, spruces, yews இவ்வகை மரங்கள் எல்லாம் gymnosperm என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. இவற்றை நாம் கிறிஸ்துமஸ் மரங்கள் என பொதுவாக குறிப்பிடுவோம். டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் அதற்கு உணவாக இவ்வகை மரங்கள் இருந்துள்ளது. இவ்வகை மரங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டாலும் குளிர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது.  நம்மூரில் காணப்படும் அரச மரம், ஆலமரம், வேப்பம் மரம், போன்ற மரங்களை போல அல்லாமல் குளிர் பிரதேச மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்ப்பதில்லை என்பது ஆச்சரியம் தானே..

செல்பி மோகம்

செல்பி மோகத்தால் ஏற்படும் மரணத்தில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். கடந்த ஆண்டு மட்டும் இந்தியா வில் 76 பேரும், பாகிஸ்தானில் 9 பேரும், அமெரிக்காவில் 8 பேரும், ரஷ்யாவில் 6 பேரும், பிலிப்பைன்ஸில் 4 பேரும், சீனாவில் 4 பேரும் இறந்துள்ளனர். இவர்களில் 68% பேர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் 75.5% பேர் ஆண்கள்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

நன்றி உணர்வு

பிரேசில் நாட்டை சேர்ந்த பிகுயிரோடோ, செரினோ என்ற குதிரையை வளர்த்து வந்தார். திடீரென விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கின்போது அங்கு வந்த குதிரை செரினோ உரிமையாளர் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவரை தெரியுமா?

2015-ம் ஆண்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் வருட சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.667 கோடி ஆகும். தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரது சம்பளம் மற்றும் இதர சலுகைகள் உயர்த்தப்பட்டது. இனி இவரது சம்பளம் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக இருக்கும்

அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ள டிஜிட்டல் டைரி

டைரி எனப்படும் நாட்குறிப்பு உலக வரலாற்றில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கிய ஒன்று என்று சொல்லலாம். காகிதங்களின் காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டைரிகளில் தங்களது அன்றாடங்களை யார் இப்போது எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு எழுத விரும்புபவர்களுக்கு வந்து விட்டது டிஜிட்டல் டைரி. டிஜிட்டல் டைரிகளில் நீங்கள் உங்கள் போட்டோ அல்லது வீடியோவையும் இணைக்க இயலும் அதோடு அதை பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்தும் வைக்கவும்  முடியும் இதன் மூலன் நம்மை ஆராய்ச்சு செய்யும் கண்களிடமிருந்து தப்பிக்க இயலும். முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி தானே...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago