முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கனவுகள் என்ன நிறத்தில் வருகின்றன என்பது தெரியுமா?

உறங்கும் போது மனிதர்கள் கனவு காண்பது வழக்கம். 12 சதவீதம் பேர் கருப்பு வெள்ளையாகவே கனவு காண்கிறார்கள். பார்வை இல்லாதவர்களாலும் கனவு காண முடியும். நாம் ஏற்கனவே பார்த்தவரின் முகத்தை மட்டுமே கனவில் காண முடியும். விழித்து எழுந்த 5 நிமிடத்தில் 50 சதவீதம் கனவுகள் நமக்கு மறந்து போய் விடும். ஒரு சராசரி மனிதன் ஆயுளில் 6 ஆண்டுகள் கனவிலேயே செலவழிக்கிறான். நீங்கள் எங்கிருந்தாலும் ஒரு இரவில் சராசரியாக 4 முதல் 7 கனவுகள் வரை காண முடியும்.

எந்த மிருகத்தை மனிதனால் பழக்க முடியாது தெரியுமா?

மனிதர்கள் பல்வேறு விலங்குகளையும் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்க்கின்றனர். ஒரு சிலர் சர்க்கஸ் போன்ற இடங்களில் சிங்கம், புலி, கரடி, யானைகளை கூட நம் சொல் கேட்கும்படி வளர்த்து விடுகின்றனர். ஆனால் ஒரே ஒரு விலங்கு மட்டும் விதிவிலக்கு. அது ஹைனா எனப்படும் கழுதைப்புலி தான் அது. கழுதைப்புலியை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். எளிதில் கழுதைப்புலிகளுடன் பழகி அவற்றை நம் பேச்சை கேட்க வைக்க முடியாது. இவற்றை பராமரிப்பதற்கு அதிக செலவாகும். அமெரிக்காவில் கழுதைப்புலியை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம். அதையும் மீறி நாம் நம்முடைய வீட்டில் வளர்த்தால் பக்கத்து வீட்டுக்காரங்களை பதம்பார்த்து விடும். மொத்தத்தில் கழுதைப்புலியை வீட்டில் வளர்ப்பது மிகவும் அபாயகரமானது.

சிறு மூளையுடைய மனிதன்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள 2 இடங்களிலிருந்து சிறு மூளையுடைய மனித இனத்தின் படிமங்களை அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.  இந்த இனம் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது தெரிய வருகிறது. இந்தச் சிறு மூளையுடைய மனித இனம் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன என்று அறிவியலர் நம்பி வந்தனர். ஆனால் இந்தக் குறிப்பிட்ட மனித இனம் 2,36,000 ஆண்டுகளுக்கும் 3,35,000 ஆண்டுகளுக்கும் இடையே வாழ்ந்து வந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மனிதர்களின் நெருங்கிய சகாக்களான சிம்பன்ஸிக்கள், கொரில்லாக்களுக்கு இந்த மனித இனம் அதிக நெருக்கமுடையது. மேலும் இந்த சிறுமூளையுடைய மனித இனம் இறந்தோரை புதைக்கும் வழக்கம் உடையதாக இருந்துள்ளதும் அறிவியலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எதிரியா நண்பனா என கண்டு பிடிக்கும் நீர்யானைகள்

காட்டில் வளரும் நீர் யானைகள் அதிகம் ஒலி எழுப்பக் கூடியவை. அதன் சத்தம் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீண்ட தூரத்துக்கு எதிரொலிக்கும். 'வீஸ் ஹாங்க்ஸ்' என்று அழைக்கப்படும் ஒரு வித ஒலியை, நீர்யானைகள் எதற்கு எழுப்புகின்றன என்று இதுவரை தெரியாமல் இருந்தது. ஆப்ரிக்காவில் நீர்யானைகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், அந்த தனித்துவமான ஒலி, தன் நண்பர்கள் முதல் எதிரிகள் வரை பிரித்துக் கூற பயன்படுவதாகக் கூறுகின்றனர். மேலும் நீர்யானைகள் தங்கள் கூட்டத்தில் உள்ள மற்ற நீர்யானைகளின் குரலைக் கொண்டு, தனித்துவமாக அடையாளம் கண்டு கொள்ளும் எனவும் கூறியுள்ளனர். நீர் யானைகளால் தன் நண்பர்கள், உறவினர்கள், அறிமுகமில்லாத நீர்யானைகளை அதன் குரலோசையைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்கின்றன.

அதிவேகம்

சீனத் தலைநகர் பெய்ஜிங் - தொழில்நகரமான ஷாங்காய் நகரை இணைக்கும் வகையில் 1250 கிலோமீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் உலகின் அதிவேக புல்லட் ரெயில் சேவை சீனாவில் வரும் இந்த மாதம் 21-ம் தேதி தொடங்குகிறது.

விவசாயம் செய்யும் எறும்புகள்

உலகில் மனிதனுக்கு பிறகு தனக்கு தேவையான உணவை தானே விவசாயம் செய்யும் உயிரினம் எது தெரியுமா..அது எறும்புதான்..இந்த எறும்புகள் இலைகளை சின்ன சின்னதாக கத்தரித்து எடுத்து வந்து தனது கூட்டுக்குள் வைத்துவிடும். சில நாட்கள் கழித்து அந்த இலைகளில் ஒருவைகையான பூஞ்சைகள் வளரும். அவற்றை எறும்புகள் உணவாக உண்ணும். இது தான் எறும்புகள் செய்யும் விவசாயம். அந்த இலைகள் காய்ந்த பின் அவற்றை வேலைக்கார எறும்புகள் வெளியே எடுத்து போட்டுவிடும். பிறகு புதிதாக இலைகளை வெட்டி வந்து வைக்கும். அதில் வளரும் பூஞ்சைகளை தான் உண்ணும். இப்படி தனக்கு தேவையான உணவை. தானே விவசாயம் செய்து உண்ணும் உயிரினம் தான் எறும்புகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago