முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் 'மாதிரி'

சுமார் 49 ஆயிரம் சதுர அடியில் உலகின் மிகப் பெரிய மினியேச்சர் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மினியேச்சரில் ஆசியா உள்ளிட்ட 5 கண்டங்களின் முக்கிய கட்டடங்கள், சுற்றுலாத் தளங்கள் இடம்பெற்றுள்ளன. குலிவேர்ஸ் கேட் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மினியேச்சரில் லண்டனின் பக்கிங்காம் அரண்மனை, பிரான்சின் ஈஃபில் டவர், இந்தியாவின் தாஜ் மஹால், சிங்கப்பூரின் மெரினா பே உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், சுற்றுலாத் தலங்களின் மாதிரிகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 600 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதை உருவாக்கியுள்ளனர். மினியேச்சரை உருவாக்க சுமார் 260 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வரவுள்ளது.

இந்தியாவுக்கு முதல் நோபல் பரிசு

உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுக் கொடுத்தவர் கவிஞர் ரவீந்திராத் தாகூர். இவர் 1861 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தேவேந்திரநாத் தாகூர், சாரதா தம்பதிகளுக்கு கொல்கத்தாவில் பிறந்தார். இளம் பருவத்திலேயே இலக்கியம், ஓவியம், இசை , கவிதை என்று பன்முகத்திறமைக் கொண்டிருந்தார். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றவர் அங்குள்ள கல்விமுறையை அறிந்துகொண்டார். அதன்படி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வங்காளத்தில் 'சாந்தி நிகேதன்' பள்ளியைத் துவங்கினார். இங்கு படித்தவர்தான் புகழ்பெற்ற இந்திய இயக்குநர் சத்யஜித்ரே. ’கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பிற்காக தாகூருக்கு இலக்கியத்திற்காக நோபல் பரிசு கடந்த 1913 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. அப்பரிசை வென்ற  முதல் ஆசியர் என்ற பெருமையும் தாகூருக்கு உள்ளது.

கேட்ஜெட் ஆபத்து

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அதிர்வலை தாக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. குழந்தைகளின் கேட்ஜெட் பயன்பாட்டு நேரம் அதிகரிக்க அதிகரிக்க குழந்தையின் மொழி அறிவுத்திறனில் பாதிப்பு ஏற்படுமாம்.

புற்றுநோயை கண்டுபிடிக்க ...

உயிர் கொல்லி நோயான புற்று நோய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 9 கோடியே 5 லட்சம் பேர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகினர். புற்று நோயை மிக எளிதான பரிசோதனை மூலம் கண்டறியும் முறையாக, சீன விஞ்ஞானிகள் ஒரு துளி ரத்தம் மூலம் புற்று நோயை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர். மனித உடலில் புற்று நோய் இருப்பதை ‘ஹீட் ஷாக் புரோட்டீன்’ (எச்.எஸ்.பி.’) எனப்படும் எச்.எஸ்.பி.90ஏ புரோட்டீன் மூலம் கண்டுபிடிக்க முடியும். இது மனித உடலில் இருந்து எடுக்கப்பட்டு பின்னர் அதை ரத்தத்துடன் கலந்து பரிசோதிக்கப்படுகிறது. தற்போது இது சீனா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மூலம் விஞ்ஞானிகளின் 24 ஆண்டு கால ஆய்வு வெற்றி பெற்றுள்ளது.

அம்பானி வீட்டில் 180 ஆண்டுகள் பழமையான 2 மரங்கள் : விலை ரூ.84 லட்சம்

180 ஆண்டுகள் பழமையான மரங்கள் ஸ்பெயினில் இருந்து ஆந்திராவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு ஆந்திராவில் உள்ள கவுதம் நர்சரியில் வைத்து வளர்க்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் ஜாம்நகர் பங்களாவில் இந்த 2 அரிய வகை ஆலிவ் மரங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. 180 ஆண்டுகள் பழமையான ஆலிவ் மரங்களின் தாவரவியல் பெயர் Olea Europaea.3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினில் இருந்து கௌதமி நர்சரிக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இந்த இரண்டு மரங்களும் நவம்பர் 24 அன்று ஆந்திராவில் இருந்து ஒரே டிரக்கில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. இந்த மரங்கள் குஜராத்தில் இலக்கை அடைய 5 நாட்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரங்களின் விலை விவரங்களை தெரிவிக்க கவுதம் நர்சரி மறுத்து விட்ட போதிலும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ.84 லட்சம் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் அதிகமான சிகரங்களை கொண்ட மலை எது தெரியுமா?

உலகில் அதிகமான சிகரங்களை கொண்ட மலை எது தெரியுமா... அது நமது நாட்டில் உள்ள இமயமலைதான். உலகில் உள்ள உயரமான சிகரங்களில் 30 சதவீதம் இமயமலையிலேயே அமைந்துள்ளன. உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரமும் இமயமலையில்தான் உள்ளது. இதில் ஆண்டு தோறும் சுமார் 1200 பேர் மலையேற்ற பயிற்சி  பெறுகின்றனர். அவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை அடைகின்றனர் என்றால் ஆச்சரியம் தானே.. மேலும்  கடந்த நூற்றாண்டில் எவரெஸ்ட் ஏற முயன்று சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 பேர் இது போன்ற வழிகளில் உயிரிழக்கின்றனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட முடியாமல் இன்னும் பனியிலேயே புதைந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago