முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இதுவும் காரணம்

பூமிக்கு அடியில் செலுத்தப்படும் கழிவுநீரால் நிலத்தட்டுகள் நகரும் நிகழ்வு ஏற்பட்டு, அதன்மூலம் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கழிவுநீரைச் செலுத்த பாதுகாப்பான இடங்கள் குறித்து ’ஸ்ட்ரெஸ் மேப்ஸ்’ என்று அழைக்கப்படும் வரைபடங்களை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

பொதுவாக ஹோலி பண்டிகை என்றாலே வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றுதான் நாம் அனைவரும் கருதுகிறோம். ஆனால் அது தவறு.. ஹோலி பண்டிகை இந்தியா முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுவதுடன் பிற ஆசிய நாடுகளிலும், தற்போது உலக நாடுகளிலும் கூட ஹோலி கொண்டாடப்படுகிறது. ஹோலியின் போது வண்ணப் பொடிகளை தூவி கொண்டாடுவது வடநாட்டு ஸ்டைல். மஞ்சள் குளித்து கொண்டாடுவது கேரள ஸ்டைல், பால்குடம் எடுத்து பங்குனி உத்திரம் என கொண்டாடுவது தமிழகத்து ஸ்டைல். எப்படியானாலும் குளிர்காலம் முடிந்து வசந்தம் தொடங்குவதை அறிவிக்கும் விதமாக பங்குனி (அல்லது பால்குன) மாதத்தின் பவுர்ணமி தினத்தன்று கொண்டாடுவதுதான் ஹோலி. மேலும் இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. ரண்ய கசிபுவை விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் வந்து வெற்றி கொண்ட நாளாகவும் ஒரு தரப்பினரால் கொண்டாடப்படுகிறது.

செலவு குறைவு

தற்போது ஒளி மூலம் பிரிண்ட் எடுக்கும் செலவு குறைவான புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பயன்படுத்தப்படும் சிறப்பு பேப்பரில் உள்ள பிரஸ்ஷியன் நீலம், டைட்டேனியம் டை ஆக்சைடு என்ற வேதி கலவை மீது எலக்ட்ரான்களை செலுத்தும் போது தாளில் உள்ள எழுத்துக்கள் வெளிவந்து பிரதிபலிக்கிறது. இதன் மூலம் பேப்பரில் உள்ள எழுத்துகள் நீல வடிவில் பிரிண்ட் ஆகிறது.

தாகம் தீர்க்க

கோடை வெயில் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலருக்கும் தாகம் அதிகமாக இருக்கும். என்ன தான் தண்ணீரை குடித்தாலும், தாகம் அடங்காமலேயே இருக்கும். எனவே உடலில் நீர்ச்சத்தை சீரான அளவில் பராமரிக்க, நீரை அதிகம் குடிப்பதோடு, ஒருசில உணவுப் பொருட்களையும் அதிகம் சாப்பிட வேண்டும். வருடம் முழுவதும் கிடைக்கும் ஓர் பழம் தான் ஆப்பிள். இந்த ஆப்பிளை கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிடுவதன் மூலம், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம்.

சென்னை மாநகராட்சி எப்போது தொடங்கப்பட்டது

சென்னைக்கென ஒரு நகர நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி 1687 செப்டம்பர் 28 ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த அதிகாரிகளுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் ஜோசையா சைல்ட். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜோசையா சைல்டும் துணை ஆளுநர் ஒருவரும் இங்கிலாந்து சென்று மன்னர் இரண்டாம் ஜேம்சைச் சந்தித்து இது குறித்து விவாதித்தனர். முடிவில், அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சென்னையை மாநகராட்சியாக அறிவித்து, அரச பிரகடனத்தை வெளியிட்டார் இரண்டாம் ஜேம்ஸ். அதை தொடர்ந்து 1688 செப்டம்பர் 29ஆம் தேதி மன்னரின் ஆணை அமலுக்கு வந்தது. ஒரு மேயர், ஆல்டர்மென் எனப்படும் 12 கவுன்சிலர்கள், பர்ஜெஸ் எனப்படும் பிரதிநிதிகள் (60 முதல் 100 பேர்வரை) ஆகியோருடன் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. ஆல்டர்மென் எனப்படும் கவுன்சிலர்கள் பிரிட்டிஷ், பிரெஞ்ச், இந்திய வர்த்தக சமூகத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு மேயரால் நியமிக்கப்பட்டனர். நத்தேனியல் ஹிக்கின்சன் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நியமிக்கப்பட்டார்.

கொட்டாவி அறியாதது

ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago