இன்றைய சூழலலில், ஸ்ட்ரெஸில் இருந்து விடுபட மாத்திரைகள் எடுத்துக் கொள்வோர், பாலியல் பக்க விளைவுகளை சந்திக்கக்கூடம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மன அழுத்த மருந்துகள் எடுத்துக் கொள்வோருக்கு `எதிர்பாலரை பார்த்தாலே ‘பத்திக்கும்’ அடிப்படை வேதியியல் மாற்றம் கூட உண்டாவதில்லை’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
அமெரிக்கா்களிடம் கடந்த சில ஆண்டுகளாக இருதய நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக புரோக்கன் ஹார்ட் சின்ட்ரோம் எனப்படும் நோய் மாரடைப்பு நிகரானதாக மருத்துவ நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.அதிலும் இதனால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்பது கவலைக்குறிய அம்சமாகும். இந்த பாதிப்பானது 50 முதல் 74 வயதினரை தாக்கும் போது நிலைமை இன்னும் விபரீதமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். பெருகி வரும் விவாகரத்துகள், வேலைப்பளு, மாறி வரும் சமூக சூழல் ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தம், சோரவு போன்றவையே இது ஏற்பட காரணம் என்கின்றனர்மருத்துவ வல்லுநர்கள். கடந்த 2006 லிருந்து 2017 வரை இருதய கோளாறு தொடர்பாக இந்த வயது பிரிவினர்கள் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர் என்கிறது அந்நாட்டு புள்ளிவிபரம். அதில் பெரும்பாலோனோர் 50 வயதை கடந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்பீ பிரியர்களுக்காக செல்பி ஸ்டிக்கிற்க்கு பதிலாக மினி ட்ரோன் எனப்படும் பறக்கும் கேமரா அறிமுகமாகியுள்ளது. இந்த மினி ட்ரோனுக்கு செல்ஃப்ளை (SELFLY) என பெயரிட்டுள்ளனர். கைகளுக்கு அடக்கமான இந்த மினி ட்ரோனை, நமது ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு உறையிலேயே வைத்து கொள்ள முடியுமாம்.
2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவை ஆண்டு வந்த ஹூவான் ஹெங் என்ற அரசன் உலகின் முதல் காற்றாடியை பறக்கவிட்டார். பின்னர் மூங்கில், மெல்லிய பட்டுத்துணி, நூலுடன் நல்ல பட்டங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை பட்டங்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
2015-ம் ஆண்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் வருட சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.667 கோடி ஆகும். தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரது சம்பளம் மற்றும் இதர சலுகைகள் உயர்த்தப்பட்டது. இனி இவரது சம்பளம் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக இருக்கும்
ஆடு, மாடுகளை விற்பது போல மனிதர்களை விற்பனை செய்வது உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள ஒன்றாகும். இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் அரிதான வன விலங்குகளை வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றம். ஆனால் நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கனோ மாகாணத்தின் Kaduna நகரில் உள்ள 26 வயதான Aliyu Na Idris என்ற வாலிபர் ஒருவர் தன்னையே விற்பனை செய்வதாக விளம்பரம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதன் மூலம் அந்த செய்தி உலகம் முழுவதும் வைரலானது. இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் விலை என்று போர்டில் எழுதி அதை கையில் பிடித்தபடி படத்துக்கு போஸ் கொடுத்தார். தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் உதவ முடியும் என்று நம்பினார். இதையடுத்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


