முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நோய் அறியா நகரம்

வட பாகிஸ்தானில் ஹூஞ்குட்ஸ் எனுமிடத்தில் அலக்ஸாண்டர் தி கிரேட்-ன் வழிதோன்றல்கள் என கருதப்படும் ஹூஞ்சா எனும் மக்கள் வாழும் இடம்தான் ஹூன்சா பள்ளதாக்கு. இங்குள்ளவர்கள் 70 வயது வரையிலும் இளமை, ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கின்றனர். பெண்கள் 65 வயதிலும் கருத்தரிக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் இயற்கை உணவே.

துணிவே துணை

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த லிசா பிலேயர் என்ற பெண் தன்னம் தனியாக, ஆர்ப்பரிக்கும் அலைகளை உடைய பெருங்கடலில் 1,600 கடல் மைல் தூரத்தை 100 நாட்களில் பயணம் செய்து அண்டார்டிகா கண்டத்தை எட்டி சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன், 102 நாட்களில் பயணம் செய்த்ததே சாதனையாக இருந்தது.

மாதுளை நன்மை

இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை எளிதில் ஜீரணமாகும் பழம். இதன் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் ஏற்படும் சோர்வு நீங்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இது இருக்கிறது. ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.

புதிய வசதி

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் 600 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு போட்டோ மட்டுமே இதுவரை அனுப்ப முடியும். ஆனால் தற்போது பல புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் புதிய வசதி அப்டேட் ஆகியுள்ளது.

கடலுக்கு ஆபத்து

2050-ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. 1964-ம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு, 2014-ம் ஆண்டில் 311 மில்லியன் டன் (31 கோடி டன்) ஆகிவிட்டது. தற்போது, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கடலில் கலக்கின்றன. இது தொடருமானால், வருகிற 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் அதிக அளவில் மீண்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 14 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதை 70 சதவீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முகத்தை பராமரிக்க

ஒரு நாளைக்கு 2 முறை மட்டும் முகத்திற்கு சோப்பு போட்டு குளித்தால் நல்லது. இல்லையெனில், தோலில் வறட்சி ஏற்படும். மேலும், சூடாகவோஅல்லது அதிக குளிரான நீரைக்கொண்டு முகத்தை கழுவுவதால் முகப்பொலிவு ஏற்படாது. முகம் கழுவுவதற்கு முன்னால் நம் கைகளும், முகத்தை துடைக்க பயன்படுத்தும் துண்டையும் சுத்தமானதாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago