எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.18 - காவிரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை இந்திய கெஜட்டில் வெளியிட நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பிக் வேண்டும் என பிரதமரை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி நதிநீர்ப் பிரச்சனை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகம் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட நதிநீர் ஆணையம், தனது இறுதி உத்தரவை பிறப்பித்த பிறகும்கூட கர்நாடகம் அதற்கு அடிபணியவில்லை. தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை ஒழுங்காக தருவதும் இல்லை.
இந்தநிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் ஒரு கடிதமும் எழுதினார். அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் 80 சதவீத நீர்ப்பாசனத்திற்கு காவிரி நதிநீர்தான் ஜீவநாடியாக இருந்துவருகிறது. காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால்தான் தமிழக மக்களுக்கு உணவு பாதுகாப்பே கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலம் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் விடத் தவறினால் தமிழகத்தின் விவசாயம் மட்டுமல்ல, பொருளாதாரமும் பாதிக்கப்படும். இரு மாநிலங்களிடையே இந்த பிரச்சனை 1960 ல் வெடித்தது. தமிழகத்தின் சம்மதம் இல்லாமல் கர்நாடக அரசு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது. பிறகு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்திய அரசு 1990 ல் காவிரி நதிநீர் தாவா தொடர்பான தீர்ப்பாயத்தை அமைத்தது. இந்த காவிரி நதிநீர் ஆணையம் தனது இடைக்கால உத்தரவை 25.6.1991 ல் பிறப்பித்தது. அது 10.12.1991 ல் இந்திய அரசால் கெஜட்டில் வெளியிடப்பட்டது. பிறகு காவிரி நதிநீர் ஆணையமானது 5.2.2007 ல் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அப்போது கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு தரப்படவேண்டிய தண்ணீரை ஒதுக்கீடு செய்து நதிநீர் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இதை கர்நாடக அரசும், கேரள அரசும் ஏற்றுக்கொள்ளாமல் இறுதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றன. தமிழகமும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. பின்னர் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசும் தனது கருத்துக்களை எடுத்துவைத்தது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தங்களது மனுக்களை தாக்கல் செய்தன. அவையெல்லாம் தற்போது நிலுவையில் உள்ளன. காவிரி நதிநீர் ஆணையத்தால் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும், அந்த உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை. மேலும் கர்நாடக அரசு இந்த விஷயத்தில் தான் தெரிவித்துள்ள யோசனையை இறுதி உத்தரவுக்கான சம்மதம் என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் இந்திய அரசு நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை அரசு கெஜட்டில் வெளியிடுவதுதான் நல்லது. அப்போதுதான் இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அதற்கு கட்டுப்பட்டு இறுதி உத்தரவை அமுல்படுத்தும். இந்த விஷயம் தொடர்பாக கடந்த 14.6.2011 அன்று தங்களை நேரில் சந்தித்தபோது நான் மனு கொடுத்தேன். அப்போதே காவிரி நதிநீர் ஆணைய இறுதி உத்தரவை கெஜட்டில் வெளியிடுமாறு நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடும்படி நான் கேட்டுக்கொண்டேன். அதே வேண்டுகோளை இப்போதும் முன்வைக்கிறேன். காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை இந்திய கெஜட்டில் வெளியிடுமாறு நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு நீங்கள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்த கடிதத்தின் மூலம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு துரிதமாக நடவடிக்கை எடுத்தால் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
41 பேரை காப்பாற்ற முடியாதவர் 7 கோடி மக்களை எப்படி காப்பாற்றுவார்? விஜய்க்கு அமைச்சர் பெரியசாமி கேள்வி
03 Feb 2026திண்டுக்கல், திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள்: மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 12-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்: 12 முக்கிய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
03 Feb 2026சென்னை, தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
-
தி.மு.க.வை விஜய் விமர்சிப்பது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
03 Feb 2026திருச்சி, த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தி.மு.க.வை விமர்சனம் செய்து விஜய் பேசியுள்ளார் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
-
விஜய்யைப் பார்த்து எங்களுக்கு பயமில்லை: நிர்மலா சீதாராமன்
03 Feb 2026புதுடெல்லி, விஜய்யைப் பார்த்து தி.மு.க.தான் பயப்பட வேண்டும் என்றும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
இந்திய நாட்டின் சட்டங்களை பின்பற்றப்படாவிட்டால் உடனே நாட்டை விட்டு வெளியேறலாம்: மெட்டா நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
03 Feb 2026புதுடெல்லி, தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்றும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் நீங்கள் வெளியேறலாம் என்றும் மெட்டா நிறு
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.


