எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜன.- 18 - உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 500 -க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. அடக்க முயன்ற வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தை முதல் தினத்தன்று கடந்த 15- ம்தேதி அவனியாபுரத்திலும் 16 -ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று காலை தொடங்கியது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியும், மாவட்ட நிர்வாகம் மற்றும் விலங்குகள் நல வாரியத்தின் நேரடி கண்காணிப்பிலும் அலங்காநல்லூர் கோட்டை முனிசாமி திடல் முன்பு ஜல்லிக்கட்டு தொடங்கியது. மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 559 காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன. அதுபோல மாடுகளை பிடிக்க 500 -க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர். அனைத்து காளைகளும் கால்நடை டாக்டர்களின் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன. அதுபோல மாடுபிடி வீரர்களுக்கும் டாக்டர்கள் உடல் பரிசோதனை நடத்திய பின்னர் அனுமதிக்கப்பட்டனர். முதலில் சாமி மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பின்னர் முரட்டுக்காளைகள் சீவிய கொம்புகளுடனும் மணிமாலையுடனும் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று காளைகளை அடக்க முயன்றனர். சில காளைகளின் உயர்ந்த திமில்களை பிடித்து வீர இளைஞர்கள் அடக்கினார்கள். அவர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. சில காளைகள் பிடிக்க வந்த இளைஞர்களை தூக்கி பந்தாடிச் சொன்றன. வாடிவாசல் முன்பு மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க தென்னைநார்கள் பரப்பப்பட்டு இருந்தது. சுமார் 600 மீட்டர் நீளத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது ஒரு அடுக்கு இரும்பு கம்பி தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டு விளையாட்டை காண பார்வையாளர்கள் அமர கேலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு பார்வையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இலவசமாக கேலரியில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பார்வையாளர்கள் அதிகாலை முதலே கேலரியில் இருக்க போட்டி போட்டு இடம் பிடித்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டை கண்டு ரசித்தனர்.
சீறிவந்த காளைகளை பிடித்த மூவேந்தன், ரஞ்சித் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அலங்காநல்லூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசுகள், கட்டில் பீரோ, செல்போன், சுவர் கடிகாரம், அண்டா, சைக்கிள், அயன் பாக்ஸ், குத்து விளக்குகள், புத்தாடைகள் பரிசாக வழங்கப்பட்டன.
போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டையொட்டி டாக்டர்கள் குழுவினருடன் ஆம்புலன்சுகள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
இந்த விழாவில் கலெக்டர் சகாயம், எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, ஆர்.சாமி, முத்துராமலிங்கம், தமிழரசன், ராமசாமி, வீரவிளையாட்டுக்குழு தலைவர் ராஜசேகரன், அலங்காநல்லூர் யூனியன் தலைவர் கீதாரவிச்சந்திரன், துணைத்தலைவர் முத்துமாரிபாண்டியன், பேரூராட்சித் தலைவர் கீதா பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


