எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜன.- 18 - உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 500 -க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன. அடக்க முயன்ற வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தை முதல் தினத்தன்று கடந்த 15- ம்தேதி அவனியாபுரத்திலும் 16 -ம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று காலை தொடங்கியது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியும், மாவட்ட நிர்வாகம் மற்றும் விலங்குகள் நல வாரியத்தின் நேரடி கண்காணிப்பிலும் அலங்காநல்லூர் கோட்டை முனிசாமி திடல் முன்பு ஜல்லிக்கட்டு தொடங்கியது. மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 559 காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன. அதுபோல மாடுகளை பிடிக்க 500 -க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர். அனைத்து காளைகளும் கால்நடை டாக்டர்களின் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன. அதுபோல மாடுபிடி வீரர்களுக்கும் டாக்டர்கள் உடல் பரிசோதனை நடத்திய பின்னர் அனுமதிக்கப்பட்டனர். முதலில் சாமி மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பின்னர் முரட்டுக்காளைகள் சீவிய கொம்புகளுடனும் மணிமாலையுடனும் வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று காளைகளை அடக்க முயன்றனர். சில காளைகளின் உயர்ந்த திமில்களை பிடித்து வீர இளைஞர்கள் அடக்கினார்கள். அவர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. சில காளைகள் பிடிக்க வந்த இளைஞர்களை தூக்கி பந்தாடிச் சொன்றன. வாடிவாசல் முன்பு மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் காயம் ஏதும் ஏற்படாமல் இருக்க தென்னைநார்கள் பரப்பப்பட்டு இருந்தது. சுமார் 600 மீட்டர் நீளத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது ஒரு அடுக்கு இரும்பு கம்பி தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டு விளையாட்டை காண பார்வையாளர்கள் அமர கேலரிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு பார்வையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இலவசமாக கேலரியில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து பார்வையாளர்கள் அதிகாலை முதலே கேலரியில் இருக்க போட்டி போட்டு இடம் பிடித்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டை கண்டு ரசித்தனர்.
சீறிவந்த காளைகளை பிடித்த மூவேந்தன், ரஞ்சித் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அலங்காநல்லூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசுகள், கட்டில் பீரோ, செல்போன், சுவர் கடிகாரம், அண்டா, சைக்கிள், அயன் பாக்ஸ், குத்து விளக்குகள், புத்தாடைகள் பரிசாக வழங்கப்பட்டன.
போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டையொட்டி டாக்டர்கள் குழுவினருடன் ஆம்புலன்சுகள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
இந்த விழாவில் கலெக்டர் சகாயம், எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, ஆர்.சாமி, முத்துராமலிங்கம், தமிழரசன், ராமசாமி, வீரவிளையாட்டுக்குழு தலைவர் ராஜசேகரன், அலங்காநல்லூர் யூனியன் தலைவர் கீதாரவிச்சந்திரன், துணைத்தலைவர் முத்துமாரிபாண்டியன், பேரூராட்சித் தலைவர் கீதா பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் : துணை முதல்வர் உதயநிதி நம்பிக்கை
06 Dec 2025சென்னை : வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து
-
இத்தாலியில் அமைக்கிறது புதிய டால்பின் சரணாலயம்
06 Dec 2025ரோம், இத்தாலியில் முதல் முறையாக டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
-
சாலை விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் : சென்னை கோர்ட் தீர்ப்பு
06 Dec 2025சென்னை, சாலை விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வேண்டும் என்று சென்னை கோர்ட் தீர்ப்பளித்தது.


