முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது-ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 1 - சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சசிகலாவை முதல்வர் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார். அதையொட்டி வெளியில் தனியாக அவர் இருந்தார். சசிகலா நீக்கத்தையொட்டி அவரின் உறவினர்களையும் கட்சியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். இதன்பின் கடந்த 28-ம் தேதியன்று சசிகலா ஒரு அறிக்கையை வெளியிட்டார். தான் வெளியில் வந்தபின்தான் தனது உறவினர்கள் தனது பெயரைப் பயன்படுத்தி முதல்வருக்கு துரோகம் விளைவித்தது தெரியவந்ததாகவும், அது தனக்கு தெரியவந்தபோது அதிர்ச்சி அடைந்ததாகவும், தனது சகோதரியான முதல்வருக்கு தான் கனவிலும்கூட துரோகம் இழைக்க நினைத்ததில்லை என்றும், தனது பெயரைப் பயன்படுத்தி கட்சிக்கும், ஆட்சிக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக முதல்வருக்கும் துரோகம் இழைத்தவர்களை தான் மன்னிக்கத் தயாராயில்லை என்றும், அவர்களுக்கு தனக்கு எந்த தொடர்பும் இனிமேல் இல்லை என்றும், தனது சகோதரிக்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டதாகவும், சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இப்போது இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வி.கே.சசிகலா எனக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதே பொருள் கொண்ட ஒரு அறிக்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார். வி.கே.சசிகலா அளித்துள்ள விளக்கத்தினை நான் ஏற்றுக் கொள்கிறேன். 19.12.11 அன்று வி.கே.சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அதே சமயத்தில், 19.12.11 அன்று ம.நடராஜன், திவாகர், டி.டி.வி.தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், இராவணன், அடையாறு  மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி ஆகியோர் மீதும், 22.12.11 அன்று கலியபெருமாள், எம்.பழனிவேல் ஆகியோர் மீதும், 26.1.12 அன்று தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தானலட்சுமி சுந்தரவதனம், சுந்தரவதனம் மற்றும் வைஜெயந்தி மாலா ஆகியோர் மீதும் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த நடவடிக்கை அப்படியே தொடரும். எனவே, கட்சியின் உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago