எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்,ஜூலை.- 3 - மும்பையில் தாக்குல் நடத்த தீவிரவாதிகளுக்கு இந்தியர்கள் 40 பேர் உதவி செய்தார்கள் என்று பாகிஸ்தான் அபாண்டமாக கூறியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினர்களுக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் 300 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான் மற்ற 9 தீவிரவாதிகள் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கசாப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சவூதி அரேபியாவில் அன்சாரி என்ற அபு ஜின்டால் என்ற தீவிரவாதி மறைந்திருப்பது குறித்து இந்திய புலனாய்வு துறைக்கு தெரியவந்தது. உடனே சவூதி அரேபிய நாட்டு அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஜின்டாலை டெல்லிக்கு அனுப்பிவைக்க வைத்தனர். டெல்லி வந்த அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தியதில் காரச்சியில் உள்ள ஒரு அறையில் இருந்து கொண்டு மும்பையை தாக்கிய தீவிரவாதிகளுக்கு கட்டளை பிறப்பித்தது தெரியவந்தது. இதுகுறித்து பாகிஸ்தானிடம் இந்திய தெரிவித்துள்ளதோடு மும்பை தாக்குதல் தொடர்பாக லஷ்கர் தொய்பா தீவிரவாத இயக்க கமாண்டர் ஜகியூர் ரகுமான் லக்வி உள்பட 7 தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா கோரியுள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தான் ஒரு அபாண்ட பழியையும் சுமத்தி உள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது தீவிரவாதிகளுக்கு இந்தியர்கள் 40 பேர் உதவி செய்தனர் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி எக்ஸ்பிரஸ் டிரிபூன் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. அந்த அதிகாரி தன் பெயரை வெளியே கூறிக்கொள்ள விரும்பவில்லை என்றும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் புதுடெல்லியில் சந்தித்து பேச உள்ளனர். அப்போது ஜின்டால் கைது குறித்த விளக்கத்தை இந்திய அதிகாரிகளிடம் கேட்கப்படும். பேச்சுவார்த்தையின்போது ஜின்டால் கைது விவகாரம் முக்கிய இடம் வகிக்கும். கைது குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ளுமாறு இந்திய அதிகாரிகளிடம் கேட்கப்படும். ஜின்டால் கைது குறித்து இதுவரை எந்த தகவலையும் எங்களுக்கு இந்தியா கொடுக்கவில்லை. இந்தியர்கள் உதவி இல்லாமல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம் என்றும் அந்த அதிகாரி கூறியதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் குறித்து முழு விபரத்தையும் எங்களுக்கு கொடுக்க இந்தியா தயங்கி வருகிறது. பாகிஸ்தான் நீதிமன்ற குழு மும்பைக்கு சென்றபோது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கப்படவில்லை. மும்பை தாக்குதல் குறித்த விசாரணை முழுவிபரத்தையும் இந்தியா கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்றும் அந்த அதிகாரி கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



