எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.26 - இந்திய குடியரசின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி நேற்றுக்காலையில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி கபாடியா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தனர். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், எல்.கே.அத்வானி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பதவி ஏற்பு விழாவில் ஏ.கே. அந்தோணிக்கு அடுத்துதான் சரத்பவாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி புதிய ஜனாதிபதியாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி அவர் நேற்றுக்காலையில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுக்காலையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பு டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் வீர்பூமிக்கு சென்று ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சக்தி தளத்திற்கு சென்று இந்திரா காந்தி சமாதியிலும் லால் பகதூர் சாஸ்திரி சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார். முகர்ஜியுடன் மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத்தும் உடன் சென்றார். பாராளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த மையமண்டபத்திற்கும் பிரணாப் முகர்ஜிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காரணம் அவர் கடந்த 40 ஆண்டுகளாக எம்.பி.யாக பதவி வகித்தவர். பதவி ஏற்பதற்கு முன்பு ஜனாதிபதி மாளிகையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலும் பிரணாப் முகர்ஜியும் சம்பிரதாயப்படி பாராளுமன்ற மைய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா,துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி, சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் வரவேற்று பாராளுமன்ற மைய மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர். பிரணாப் முகர்ஜி சரியாக நேற்றுக்காலை 11.38 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி கபாடியா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். பதவி ஏற்பின்போது நான் இந்திய குடியரசையும் சட்டத்தையும் பாதுகாத்து காப்பாற்றுவேன். இந்திய மக்களின் நலனுக்காக உழைப்பேன் என்று மனதாகவும் கடவுள் சத்தியமாகவும் உறுதி கூறுகிறேன் என்று பிரணாப் முகர்ஜி கூறினார். அரசியல் சட்டத்தை நான் தொடர்ந்து பின்பற்றுவதோடு மதித்து பாதுகாப்பேன். மக்களின் நலன்களுக்காக என் முழு நேரத்தையும் செலவழிப்பேன் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார். ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்றுக்கொண்டவுடன் பிரதீபா பாட்டிலும் பிரணாப்பும் இருக்கைகளை மாற்றிக்கொண்டனர். அப்போது 21 குண்டுகள் முழங்கின. ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டார். அதன்பின்னர் பிரணாப் உருக்கமாக உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் அரசியல் சட்டத்தை பாதுகாப்பதோடு அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன் என்றும் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்தார். ஆங்கிலத்தில் பேச்சை தொடங்கிய பிரணாப் ஜெயஹிந்த் என்று முடித்தார். பிரணாப் வழக்கமாத ஷூட்ஷ் அல்லது வேஷ்டிதான் அணிந்திருப்பார். ஆனால் நேற்று பதவி ஏற்பு விழாவின்போது கறுப்பு நிற ஷெர்வானியும் வெள்ளைநிற சுரிதாரும் அணிந்திருந்தார்.
பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏ.கே. அந்தோணிக்கு பிறகுதான் சரத்பவாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து ப.சிதம்பரத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பா.ஜ. லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், மாநில கவர்னர்கள், முதல்வர்கள் மற்றும் முக்கிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 76 வயதாகும் பிரணாப் முகர்ஜி, மேற்குவங்கத்தை சேர்ந்தவர். அதனால் அந்த மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு அனுமதி சீட்டு கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.