எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம், ஜூலை. 28 - இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா பிரதமரை வலியுறுத்தியதால் மீனவர்கள் 23 பேரையும் நேற்று இலங்கை அரசு விடுதலை செய்தது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21 ம் தேதி படகுகளில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மோட்சம், செல்லதுரை, முருகன், ஜஸ்டின் ஆகியோருக்கு சொந்தமான 5 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் படகில் இருந்த மீனவர்கள் ராஜூ, சூலியான்ஸ், விவால்டன், எஸ்ரோம், கிறிஸ்டோபர், பாலமுருகன், மாரி, பஞ்சவர்ணம், முருகன், சுப்பிரமணி, முருகேசன், திருமுருகன், முனியசாமி, மாயமுருகன், நம்புராஜன், முத்துமாணிக்கம், அண்ணாமலை, முருகன், அந்தோணி சிலுவை, கருப்பையா, நசீர், கோவிந்தன் உள்ளிட்ட 23 பேரையும் கைது செய்து தலைமன்னார் போலீசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
இதன் பின்னர் கடந்த 22 ம் தேதி மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி வரை அனுராதபுரம் சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மீனவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கை தொடர்ந்து வலியுறுத்தியும், கடிதமும் எழுதினார். அதன்படி மீனவர்களை விடுதலை செய்யும்படி மத்திய அரசு இலங்கை அரசை கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில் நேற்று மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்ற நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன் உத்தரவிட்டார். இம்மீனவர்கள் 5 படகுடன் ஓரிரு தினங்களில் இந்திய கடலோர காவல் படை மூலம் பாதுகாப்புடன் ராமேஸ்வரம் கரைக்கு திரும்ப உள்ளதாகவும், மீனவர்கள் 23 பேரும் வெகு விரைவில் விடுதலை செயப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவுதான் காரணம். அதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா முயற்சி வெற்றி:
முதல்வர் ஜெயலலிதா எடுத்த தொடர் முயற்சிகளை அடுத்து தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
21.7.2012 அன்று மீன்பிடிப்பதற்காக ஐந்து படகுகளில் புறப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 22.7.2012 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சார்ந்த 23 மீனவர்களையும், 5 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், தங்களது வாழ்வாதாரத்திற்காக இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை சிறைபிடிக்கக் கூடாது என இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்துமாறு இலங்கை அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் 23.7.2012 நாளிட்ட கடிதத்தில் பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டார்.
மேலும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு சிறையிடப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவினையடுத்து, தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் சிறை பிடிக்கப்பட்ட 23 மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து முயற்சி எடுத்தனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடனடி நடவடிக்கையினையடுத்து, 22.07.2012 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் மன்னார் குற்றவியல் நடுவர் திமன்றத்தால் நேற்று (27.7.2012) விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம்: 19-ம் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
06 Dec 2025சென்னை, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் டிசம்பர் 19-ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டத்தை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டால
-
இத்தாலியில் அமைக்கிறது புதிய டால்பின் சரணாலயம்
06 Dec 2025ரோம், இத்தாலியில் முதல் முறையாக டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
-
முருங்கை சாறு, பாதாம் அல்வா: இந்திய ஜனாதிபதி மாளிகையில் அதிபர் புதினுக்கு சிறப்பு விருந்து
06 Dec 2025புதுடெல்லி, ரஷ்ய அதிபர் புதினுக்கு அளிக்கப்பட்ட விருந்து மெனு கார்டு வைரலாகியுள்ளது. அதில், தென்னிந்திய உணவான `முருங்கை இலை சாறு’ முதலிடம் பிடித்துள்ளது.
-
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக போராடியவர்: அம்பேத்கருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
06 Dec 2025சென்னை, அம்பேத்கர் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து
-
அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
06 Dec 2025சென்னை, அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதம்: நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட்; 'டிரா' செய்தது வெஸ்ட் இண்டீஸ்
06 Dec 2025கிறிஸ்ட்சர்ச் : ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதத்தால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணி டிரா செய்தது.


