முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கில் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, செப். 6 - 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியான ஏ.கே. ஸ்ரீவஸ்தவாவிடம் வரும் 10 ம் தேதி முதல் குறுக்கு விசாரணை நடத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

முன்னதாக தொலை தொடர்பு துறையின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் ஏ.கே. ஸ்ரீவஸ்தவாவிடம் குறுக்கு விசாரணை நடத்த தன்னை அனுமதிக்க வேண்டும் என ஆ. ராசா விடுத்த வேண்டுகோளை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும் தனது வழக்கறிஞர் சுஷில்குமார் இந்த வாரம் டெல்லியில் இருக்க மாட்டார் என்றும், எனவே அதற்கேற்றபடி குறுக்கு விசாரணைக்கான தேதியை நிர்ணயிக்குமாறும் ஆ. ராசா கேட்டுக் கொண்டார். அதன்படி வரும் 10 ம் தேதி முதல் குறுக்கு விசாரணை மேற்கொள்ள ராசாவுக்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்