எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.28 - முதல்வரின் நல்ல திட்டங்கள் தொகுதி மக்களை சேர வேண்டும் என்பதற்காக முதல்வரை சந்தித்தோம். முதல்வரை சந்திக்க யாருடைய ஒப்புதலும் தேவையில்லை என்று தே.மு.தி.க.- எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.
தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களான பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்பாண்டியன் மற்றும் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் நேற்று (27.10.2012) தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு, தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி விபரம் வருமாறு:-
செய்தியாளர்கள்: முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதன் நோக்கமென்ன?
அருண்பாண்டியன்: எங்களை தேர்ந்தெடுத்து 1 1ஞூ2 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. பேராவூரணி மக்கள் எங்களுக்கு, எனக்கு இவ்வளவு நல்ல வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு கண்டிப்பாக துரோகம் செய்யக்கூடாது. நிச்சயமாக அவர்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்காகத்தான் இந்த நடவடிக்கை. முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக பார்த்து எங்களுடைய தொகுதி பிரச்சினையை சொன்னோம். ஒவ்வொரு பிரச்சினையையும் சொன்னோம். எங்க தொகுதியிலே ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. அந்த மாதிரி பிரச்சினை இருக்கிறது. தொகுதி கிட்டத்தட்ட 2 லட்சத்து 52 ஆயிரம் பேர். அவங்களுடைய பிரச்சினை எனக்கு நல்லாவே தெரியும். ஏனென்றால் அந்த ஊருக்கு அதிகமாக போகல. ஆனா மொத்த தொகுதியையும் டிஜிட்டலைசேஷன் பண்ணிட்டு என்னுடைய கையில் இருக்கு. ஒரு பின்-னிலிருந்து, ஒரு ஊசி நூலிலிருந்து மலை வரைக்கும் எப்படியிருக்குமுனு எனக்கு தெரியும். பிரச்சினைகள் நிறைய இருக்கு. முதல்வர் ஜெயலலிதா பல திட்டங்கள் வைத்துள்ளார். அந்தத் திட்டங்கள் எல்லாம் நேரடியாக எங்கள் தொகுதி மக்களுக்கு போகணும். பேராவூரணி தொகுதியை தவிர வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை. அதற்காகத்தான் முதல்வர் ஜெயலலிதாவை வந்து பார்த்தோம். அவங்க வைத்துள்ள திட்டங்கள் நல்ல நல்ல திட்டங்கள் இவையெல்லாம் மக்களுக்கு வந்து சேரணும். இந்த ஒரே காரணத்திற்காகத்தான் முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக வந்து பார்த்து எங்களுடைய மனுவை கொடுத்திருக்கிறோம்.
மைக்கேல் ராயப்பன்: என்னுடைய தொகுதி மக்களுக்கு நிறைய கோரிக்கைகள் இருக்கின்றது. ஏற்கனவே சட்டமன்றத்திலே இதுபற்றி நிறைய நான் கோரிக்கைகள் வைத்திருந்தேன். அவையெல்லாம் நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காக நிறைய திட்டங்கள் அறிவித்து நல்லமுறையில் செயல்படுத்தி வருகின்றார். அதனாலே என்னுடைய தொகுதிக்கும் இது மாதிரி மக்களுக்கு தேவைப்படுகின்ற இந்த திட்டங்களையெல்லாம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை மனு கொடுத்திருக்கிறேன். அதைப் பார்த்து கனிவோடு நிறைவேற்றித் தருவேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கின்றார். கண்டிப்பாக அவர் எனது தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளையெல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றித் தருவார் என்று நான் நம்புகிறேன்.
செய்தியாளர்கள்: கடந்த 1 1ஞூ2 ஆண்டுகளாக உங்களது கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லையா? அதனால்தான் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தீர்களா?
மைக்கேல் ராயப்பன்: அந்த மாதிரியெல்லாம் முதல்வர் ஜெயலலிதா ஒன்றும் சொல்லவில்லை. கண்டிப்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்றைக்குத்தான் கோரிக்கைகள் போய் சேர்ந்துள்ளது. கரெக்டா, முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பாக நிறைவேற்றித் தருவார். அதிகாரிகள் கூட எங்கள் கோரிக்கைகளை கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதிகாரிகள் மட்டத்திலிருந்து வராமலும் இருந்திருக்கலாம்.
செய்தியாளர்கள்: முதலமைச்சரை சந்திப்பதற்கு உங்கள் கட்சித் தலைவரிடம் அனுமதி பெற்று வந்தீர்களா?
மைக்கேல் ராயப்பன்: மக்கள் கோரிக்கையை வைப்பதற்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை என்று நினைத்து முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தேன்.
செய்தியாளர்கள்: சட்டமன்றத்திலே உங்களுடைய செயல்பாடு எப்படியிருக்கும்?
மைக்கேல் ராயப்பன்: கண்டிப்பாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை சட்டமன்றத்திலே வைத்து, அவற்றை நிறைவேற்றித்தர வேண்டுமென்று முதலமைச்சரை வலியுறுத்துவோம்.
செய்தியாளர்கள்: உங்களுடைய கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று முதலமைச்சரை சந்தித்தார்கள். இன்று நீங்கள் இருவரும் சந்தித்துள்ளீர்கள். உங்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா?
மைக்கேல் ராயப்பன்: என்னுடைய தொகுதி கோரிக்கைகளைத்தான் நான் இன்றைக்கு கொண்டு வந்துள்ளேன். நேற்று நடந்த விஷயத்திற்கு எதற்கு, ஏன் என்று நான் பதில் சொல்ல முடியாது. மக்கள் கோரிக்கைக்காக வேண்டி, மக்கள் எதற்காக நம்மை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதை அறிந்து அவங்களுக்கு நல்லது பண்ண வேண்டி நான் வந்திருக்கிறேன். அதனால் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.
செய்தியாளர்கள்: கடந்த 1 1ஞூ2 வருடமாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையா? தொகுதியில் ஏதும் நிறைவேற்றப்படவில்லையா?
மைக்கேல் ராயப்பன்: தொகுதி மக்களின் கோரிக்கையை இப்போதுதான் நேரடியாக வைத்துள்ளேன். கடந்த வருடங்களில் கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருந்தோம். தொகுதி மக்களுக்காக முதலமைச்சரை நேரடியாக சந்திக்க வேண்டுமென்று வாய்ப்பு கேட்டோம். முதலமைச்சர் நேரம் ஒதுக்கி கொடுத்தார். இப்போது அவரை நேரடியாக பார்த்து மக்கள் கோரிக்கைகளை கொடுத்திருக்கிறோம்.
செய்தியாளர்கள்: சட்டமன்றத்தில் யாருடைய தலைமையின் கீழ் இனி செயல்படுவீர்கள்?
மைக்கேல் ராயப்பன்: இப்போது தொகுதி மக்களின் கோரிக்கைகளை வைத்துள்ளோம். மற்றவைகளை பிறகு பேசிக் கொள்வோம்.
இவ்வாறு அவர்கள் பேட்டியின்போது கூறினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
29 Dec 2025திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
29 Dec 2025சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமரிமலையில் இன்று முதல் நடை திறக்கப்படுகிறது.
-
வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
29 Dec 2025திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
அன்புமணி புதிய கட்சி தொடங்கட்டும்: பா.ம.க.வின் செயல் தலைவர் பேச்சு
29 Dec 2025சேலம், அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சி தொடங்கட்டும் என்று ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
-
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு
29 Dec 2025கோவை, தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக நேற்று கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
வார தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
29 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
29 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை கனிமொழி எம்.பி. திட்டவட்டம்
29 Dec 2025சென்னை, இண்டியா கூட்டணி உடையும் என்று நயினார் நாகேந்திரன் கனவு காண்கிறார் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை
-
அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் - ராமதாஸ்
29 Dec 2025சேலம், அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் என்று ராமதாஸ் கூறினார்.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்..!
29 Dec 2025சேலம், சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
29 Dec 2025சேலம், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
வரும் ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி: பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கிறார்
29 Dec 2025திருவனந்தபுரம், வரும் ஜனவரி மாதம் கேரளா வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
3 மீனவர்கள் கைது எதிரொலி: மண்டபத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
29 Dec 2025ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்
29 Dec 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ . அலுவலகத்தில் த.வெ.க. துணை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூ ஆஜராகினர்.
-
4-வது நாளாக தொடர்ந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் கைது
29 Dec 2025சென்னை, சென்னையில் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம்: முந்தைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்..!
29 Dec 2025புதுடெல்லி, ஆரவல்லி மலைத்தொடர் விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகிறார்: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
29 Dec 2025ராமேசுவரம், துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களுடன்தான் கூட்டணி : செங்கோட்டையன் திட்டவட்டம்
29 Dec 2025கோவை, த.வெ.க தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள த.வெ.க.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025 -
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.



