முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்காக சந்தித்தோம்: தே.மு.தி.க.- எம்.எல்.ஏ.க்கள் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.28 - முதல்வரின் நல்ல திட்டங்கள் தொகுதி மக்களை சேர வேண்டும் என்பதற்காக முதல்வரை சந்தித்தோம். முதல்வரை சந்திக்க யாருடைய ஒப்புதலும் தேவையில்லை என்று தே.மு.தி.க.- எம்.எல்.ஏ.க்கள் கூறினர். 

தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களான பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்பாண்டியன் மற்றும் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் நேற்று (27.10.2012) தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு, தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி விபரம் வருமாறு:-

செய்தியாளர்கள்: முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதன் நோக்கமென்ன?

அருண்பாண்டியன்: எங்களை தேர்ந்தெடுத்து 1 1ஞூ2 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. பேராவூரணி மக்கள் எங்களுக்கு, எனக்கு இவ்வளவு நல்ல வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு கண்டிப்பாக துரோகம் செய்யக்கூடாது. நிச்சயமாக அவர்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்காகத்தான் இந்த நடவடிக்கை. முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக பார்த்து எங்களுடைய தொகுதி பிரச்சினையை சொன்னோம். ஒவ்வொரு பிரச்சினையையும் சொன்னோம். எங்க தொகுதியிலே ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. அந்த மாதிரி பிரச்சினை இருக்கிறது. தொகுதி கிட்டத்தட்ட 2 லட்சத்து 52 ஆயிரம் பேர். அவங்களுடைய பிரச்சினை எனக்கு நல்லாவே தெரியும். ஏனென்றால் அந்த ஊருக்கு அதிகமாக போகல. ஆனா மொத்த தொகுதியையும் டிஜிட்டலைசேஷன்  பண்ணிட்டு என்னுடைய கையில் இருக்கு. ஒரு பின்-னிலிருந்து, ஒரு ஊசி நூலிலிருந்து மலை வரைக்கும் எப்படியிருக்குமுனு எனக்கு தெரியும். பிரச்சினைகள் நிறைய இருக்கு. முதல்வர் ஜெயலலிதா பல திட்டங்கள் வைத்துள்ளார். அந்தத் திட்டங்கள் எல்லாம் நேரடியாக எங்கள் தொகுதி மக்களுக்கு போகணும். பேராவூரணி தொகுதியை தவிர வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை. அதற்காகத்தான் முதல்வர் ஜெயலலிதாவை வந்து பார்த்தோம். அவங்க வைத்துள்ள திட்டங்கள் நல்ல நல்ல திட்டங்கள் இவையெல்லாம் மக்களுக்கு வந்து சேரணும். இந்த ஒரே காரணத்திற்காகத்தான்  முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக வந்து பார்த்து எங்களுடைய மனுவை கொடுத்திருக்கிறோம். 

மைக்கேல் ராயப்பன்: என்னுடைய தொகுதி மக்களுக்கு நிறைய கோரிக்கைகள் இருக்கின்றது. ஏற்கனவே சட்டமன்றத்திலே இதுபற்றி நிறைய நான் கோரிக்கைகள் வைத்திருந்தேன். அவையெல்லாம் நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காக நிறைய திட்டங்கள் அறிவித்து நல்லமுறையில் செயல்படுத்தி வருகின்றார். அதனாலே என்னுடைய தொகுதிக்கும் இது மாதிரி மக்களுக்கு தேவைப்படுகின்ற இந்த திட்டங்களையெல்லாம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை மனு கொடுத்திருக்கிறேன். அதைப் பார்த்து கனிவோடு நிறைவேற்றித் தருவேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கின்றார். கண்டிப்பாக அவர் எனது தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளையெல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றித் தருவார் என்று நான் நம்புகிறேன். 

செய்தியாளர்கள்: கடந்த 1 1ஞூ2 ஆண்டுகளாக உங்களது கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லையா? அதனால்தான் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தீர்களா? 

மைக்கேல் ராயப்பன்: அந்த மாதிரியெல்லாம் முதல்வர் ஜெயலலிதா ஒன்றும் சொல்லவில்லை. கண்டிப்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்றைக்குத்தான் கோரிக்கைகள் போய் சேர்ந்துள்ளது. கரெக்டா, முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பாக நிறைவேற்றித் தருவார். அதிகாரிகள் கூட எங்கள் கோரிக்கைகளை கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதிகாரிகள் மட்டத்திலிருந்து வராமலும் இருந்திருக்கலாம். 

செய்தியாளர்கள்: முதலமைச்சரை சந்திப்பதற்கு உங்கள் கட்சித் தலைவரிடம் அனுமதி பெற்று வந்தீர்களா? 

மைக்கேல் ராயப்பன்: மக்கள் கோரிக்கையை வைப்பதற்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை என்று நினைத்து முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தேன். 

செய்தியாளர்கள்: சட்டமன்றத்திலே உங்களுடைய செயல்பாடு எப்படியிருக்கும்? 

மைக்கேல் ராயப்பன்: கண்டிப்பாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை சட்டமன்றத்திலே வைத்து, அவற்றை நிறைவேற்றித்தர வேண்டுமென்று முதலமைச்சரை வலியுறுத்துவோம். 

செய்தியாளர்கள்: உங்களுடைய கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று முதலமைச்சரை சந்தித்தார்கள். இன்று நீங்கள் இருவரும் சந்தித்துள்ளீர்கள். உங்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா?

மைக்கேல் ராயப்பன்: என்னுடைய தொகுதி கோரிக்கைகளைத்தான் நான் இன்றைக்கு கொண்டு வந்துள்ளேன். நேற்று நடந்த விஷயத்திற்கு எதற்கு, ஏன் என்று நான் பதில் சொல்ல முடியாது. மக்கள் கோரிக்கைக்காக வேண்டி, மக்கள் எதற்காக நம்மை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதை அறிந்து அவங்களுக்கு நல்லது பண்ண வேண்டி நான் வந்திருக்கிறேன். அதனால் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். 

செய்தியாளர்கள்: கடந்த  1 1ஞூ2 வருடமாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையா? தொகுதியில் ஏதும் நிறைவேற்றப்படவில்லையா?

மைக்கேல் ராயப்பன்: தொகுதி மக்களின் கோரிக்கையை இப்போதுதான் நேரடியாக வைத்துள்ளேன். கடந்த வருடங்களில் கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருந்தோம். தொகுதி மக்களுக்காக முதலமைச்சரை நேரடியாக சந்திக்க வேண்டுமென்று வாய்ப்பு கேட்டோம். முதலமைச்சர் நேரம் ஒதுக்கி கொடுத்தார். இப்போது அவரை நேரடியாக பார்த்து மக்கள் கோரிக்கைகளை கொடுத்திருக்கிறோம். 

செய்தியாளர்கள்: சட்டமன்றத்தில் யாருடைய தலைமையின் கீழ் இனி செயல்படுவீர்கள்? 

மைக்கேல் ராயப்பன்: இப்போது தொகுதி மக்களின் கோரிக்கைகளை வைத்துள்ளோம். மற்றவைகளை பிறகு பேசிக் கொள்வோம். 

இவ்வாறு அவர்கள் பேட்டியின்போது கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago