எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, நவ. - 6 - சுவாமி விவேகானந்தரையும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டு பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நிதின் கட்காரியையும் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்பையும் ஏன் ஒப்பிட்டு பேசக் கூடாது என்கிறது காங்கிரஸ் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்காரி, சுவாமி விவேகானந்தருக்கும், தாவூத் இப்ராகிமுக்கும் அறிவு என்பது ஒரே மாதிரியானதுதான். ஆனால் அவர்கள் அதை பயன்படுத்திய விதம் வெவ்வேறானது. ஒருவர் சமூக மேம்பாட்டுக்காக அந்த அறிவை பயன்படுத்தினார். மற்றொருவரோ சமூகத்தை சீர்குலைக்கவும் ்இரக்கமற்ற பயங்கரவாதத்தை பரப்புவதற்கும் பயன்படுத்தினார் என்று கூறியிருந்தார். நிதின் கட்காரியின் இந்த பேச்சு பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. சுவாமி விவேகானந்தர் பெயரில் அண்மையில் யாத்திரையெல்லாம் நடத்திய மோடியையும் அவரது ஆதரவாளர்களையும் இந்த விவகாரத்தில் பதில் சொல்லுமாறு ட்விட்டரில் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங். இதேபோல் நாடு போற்றும் ஆன்மீக தலைவரை குற்றவாளி ஒருவருடன் எப்படி இணைத்து பேசலாம் என்று மணிஷ் திவாரி விமர்சித்திருக்கிறார். காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவரான ஜகதாம்பிகா பாலோ இன்னும் ஒருபடி மேலே போய் காட்டமாக, கட்காரியையும் கசாப்பையும் ஒப்பிட்டுப் பேசினா பா.ஜ.க என்ன பதில் சொல்லும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனிடையே தாம் விவேகானந்தரையும் தாவூத் இப்ராகிமையும் ஒப்பிட்டுப் பேசவில்லை என்றும் சிலர் நல்ல செயல்களுக்காக தங்களது அறிவை பயன்படுத்துகின்றனர். சிலர் தவறான நடத்தைகளுக்காக பயன்படுத்துகின்றனர் என்பதற்காக சுட்டிக் காட்டிப் பேசினேன் என்று கட்காரி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


