முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் மிகவும்நல்லவர் அன்னா ஹசாரே சர்டிபிகேட்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2012      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி, நவ. - 9 - எனது பாதையும், அரவிந்த் கேஜ்ரிவால் பாதையும் வேறு வேறானதுதான். இருந்தாலும் எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம். அவரையும், அவரைப் போன்ற மற்ற நல்லவர்களையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறு மக்களை கேட்டுக் கொள்வேன் என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே. கவுகாத்திக்கு வந்த அன்னா ஹசாரே, கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவர் பேசுகையில், எனது பாதையும், கெஜ்ரிவாலின் பாதையும் வெவ்வேறாக இருந்தாலும், எங்கள் இலக்கு ஒன்றுதான். நாங்கள் எங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள மாட்டோம். அரவிந்த் கெஜ்ரிவாலை நான் ஆதரிக்கிறேன். அவரையும், அவரை போன்ற நல்லவர்களையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறு மக்களை கேட்டுக் கொள்வேன். நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. அரசியலில் நிகழும் தவறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். தேவைப்பட்டால், மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன். ஜனலோக்பால் சட்டம் வரும் வரை ஓயமாட்டேன். இந்த போராட்டம் 20 ஆண்டுகள் கூட நடக்கலாம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்