முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் பஞ்சம் வரும் வாய்ப்பு அதிகம்: கஸ்தூரிரங்கன்

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 25 - இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) முன்னாள் தலைவரும் திட்ட கமிஷனின் தற்போதைய உறுப்பினருமான கே.கஸ்தூரிரங்கன் எச்சரித்துள்ளார். 

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது தண்ணீருக்கானதாகத்தான் இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் சவாலாக உருவெடுத்துள்ளது.. மாநிலங்களுக்கு இடையே மோதல் மற்றும் எல்லைப் பிரச்னைகளுக்கு தண்ணீர் ஒரு காரணமாக ஆகிவருகிறது. பருவநிலை மாற்றம், பொய்த்துப்போன பருவமழையால் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் சண்டையிட வேண்டியிருக்கிறது.இந்த நிலையில் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பிருப்பதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரி ரங்கன் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்