முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் இரட்டையர் சாம்பியன்: சானியாவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி: விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ள சானியா மிஸ்ராவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியராக உருவெடுத்திருக்கிறார் சானியா மிர்ஸா. இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் சானியா மிர்ஸாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ட்டினா ஹிங்கிஸும், சானியா மிர்ஸாவும் சிறப்பாக ஆடினார்கள். அருமையான, பென்டாஸ்ட்டிக்கான வெற்றியை விம்பிள்டனில் பதிவு செய்துள்ளீர்கள். சானியாவுக்காக நாடு பெருமைப்படுகிறது. மிகவும் மகிழ்ச்சி என்று மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சானியா மிர்ஸா, மார்ட்டினா ஹிங்கிஸ் ஆகிய இருவருக்கும் பட்டம் வென்றமைக்காக இதயப்பூர்வமான வாழ்த்துகள். சானியாவின் சாதனை இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று வாழ்த்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து