எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா கும்பாபிஷேக்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 7500 போலீசார் ஈடுபடவுள்ளனர். அனுமதி சீட்டு வைத்திருப்போர் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்க ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாகும்பாபிஷேகம் வரும் 6ந் தேதி காலை 9.05 மணிமுதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது. 15ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த விழாவில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாலை மாவட்ட ஆட்சியரகத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ரங்கராஜன், ராஜேந்திரன், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா, கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, கோவில் இணை ஆணையர் ஹரிபிரியா, தாசில்தார் சி.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் ரூ. 7.19 கோடி செலவில் 97 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒருசில பணிகள் விரைவில் முடிக்கப்படும் என கோவில் இணை ஆணையர் தெரிவித்தார். மேலும் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண நேரடி ஒளிபரப்புக்கு வசதியாக 25 இடங்களில் எல்இடி அகன்ற திரையமைக்கப்படுவதாகவும் அவர் தெரிவிததார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு செய்தார். அப்போது கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் 7500 போலீஸார் ஈடுபடுவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் மற்றும் போலீசாரால் வழங்கப்படும் அனுமதிச்சீட்டு வைத்திருப்போர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அனுமதி சீட்டு இல்லாத பக்தர்கள் அனைவரும் கோவிலுக்கு வெளியே மாடவீதி, வடக்கு மற்றும் தெற்கு, ஒத்தவாடை தெருஆகிய பகுதிகளிலிருந்து கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தி.மு.க.வுடன் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
19 Feb 2026சென்னை, தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடையாக தி.மு.க.வுடன் கூட்டணி என தெரிவிக்கிறோம்.
-
மகாராஷ்டிராவில் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்திற்குள் தே.ஜ.கூ. வந்தால் அனைவரின் இடஒதுக்கீடும் காலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
19 Feb 2026சென்னை, தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?
-
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.: தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு
19 Feb 2026சென்னை, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது இதற்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
-
வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய புயல் சின்னம்: வரும் 22-ம் தேதி 3 மாவட்டங்களில் மழை
19 Feb 2026சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் உறுதி
19 Feb 2026சென்னை, வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணநை்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தே.மு.தி.க.
-
அ.தி.மு.க. அரசு செய்த சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்வதா? தி.மு.க அரசுக்கு மீது இ.பி.எஸ் கேள்வி
19 Feb 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- என்ன தான் ஆச்சு இந்த முதல்வருக்கு?


