எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணைக்கிணங்க பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் ஆகியோர்கள் முன்னிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 1.08 கோடி செலவில் புதிதாக கட்டி முடிக்கபட்ட பொது கிட்டங்கி அறை, பணியாளர்கள் ஓய்வறை , உயர் மின்னழுத்த மின்மாற்றி மற்றும் அதிநவீன ஆவின் பாலகங்களை திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கன்னியாகுமரி கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் ஆகியோர்கள் முன்னிலையில், நாகர்கோவில், ஆவின் பாலக வளாகத்தில் ரூ. 32 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாதாம் உற்பத்தி பிரிவு மற்றும் பணியாளர்கள் ஓய்வறை கட்டிடங்களையும், ரூ. 15 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பொது கிட்டங்கி அறை, ரூ. 30 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயர்மின்னழுத்த மின்மாற்றி, வடசேரி, உழவர் சந்தையில் ரூ. 24 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தையும், குழித்துறை, வெட்டுமணி பகுதியில் ரூ. 7 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தையும் திறந்து வைத்து, பார்வையிட்டார். பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது தெரிவித்ததாவது:-
அம்மா 6-வது முறையாக பதவியேற்றவுடன், ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, முதல் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டு, அதனை உடனடியாக செயல்படுத்த ஆணையிட்டுள்ளார்கள். அதே போன்று, ஒவ்வொரு துறைகளின் வாயிலாக ஏழை, எளிய மக்கள் பயனடைய செய்யும்வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார்கள். அவ்வழியாக செயல்படும் தமிழக அரசு, இத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், அம்மா அவர்களின் நல்லாசியுடன், சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி, தமிழக அரசு பால்வளத்துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் அதிநவீன ஆவின் பாலகங்கள் திறப்புவிழா இன்று நடைபெற்றது.
அம்மா பால்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது, ஆவின்-ன் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் கருணை ஓய்வ+திய திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை அறிவித்து, அவர்களது வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்கள்.
அம்மா எந்தவொரு செய்தாலும் அதில் முழு வெற்றி பெறுவார்கள். ஏனென்றால், ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கு எது தேவை என்பதை, நன்றாக அறிந்து கொண்டு, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக உயர வழிவகை செய்துள்ளார்கள். குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு நோட் புத்தகங்கள், சீருடைகள், இலவச பேரூந்து பயணஅட்டை, மடிக்கணினிகள், மிதிவண்டிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம், அவர்களின் கல்வி உயர வழிவகை செய்துள்ளார்கள். மேலும், சுகாதாரதுறையின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், மகப்பேறு நிதியுதவி திட்டம், அம்மா குழந்தைகள் நலபரிசு பெட்டகம் போன்ற திட்டங்களின் மூலம், என்றும் மக்களின் பாதுகாவலனாக விளங்கிய, ஒரே முதலமைச்சர் அம்மா தான். பெண்களின் கல்வியை உயர்த்துவதற்காக சமூக நலத்துறையின் மூலம், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த தாலிக்கு 4 கிராம் தங்கம்; திட்டத்தை, மீண்டும் உயர்த்தி 8 கிரமாக வழங்க ஆணையிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், அனைத்து மக்களும் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் முழுவதுமாக பெற்று பயனடைய செய்கின்றவகையில், அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா மருந்தகம் போன்ற பல்வேறு திட்டங்களை, ஒவ்வொரு துறைகளின் வாயிலாக அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தியவர்; அம்மா
அம்மா ஜாதி, மதம் என்ற வேறுபாடில்லாமல், இஸ்லாமிய சகோதரர்களுக்கு நோன்பு நேரத்தில், பள்ளி வாசலுக்கு இலவச அரிசி, கிறிஸ்துவர்கள் புனித பயணமான ஜெருசேலம் செல்வதற்கு மானியம் போன்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக அரசு, அனைத்துத்துறைகளிலும் மிகபெரிய வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், பால்வளத்துறை அம்மா அவர்களின் நல்லாசியுடன், தமிழக அரசு எடுத்த பெரும்முயற்சியினால், அதிக லாபத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால், கறவை மாடு வழங்கும் திட்டத்தின்மூலம், ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளார்கள். ஆகவே ஆவின் பால் என்பது, தாய்ப்பாலுக்கு இணையானது. இதில், கலப்படம் எதுவுமில்லை. மிகவும் உண்மையான நம்பிக்கை வாய்ந்த ஒரே நிறுவனம் ஆவின் மட்டும்தான். கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆவின் ஒன்றியம் கடந்த 6 ஆண்டு காலமாக, தொடர்ந்து இலாபத்தில் செயல்பட்டு கொண்டு வருகிறது. குறிப்பாக 2015-16-ம் ஆண்டில் ரூ. 2.20 கோடி இலாபம் ஈட்டியுள்ளது. ஒன்றியம் மூலமாக சங்க உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கால்நடை தீவனம் கிலோ ஒன்றுக்கு மானியமாக ரூ. 4.00 வீதம் மாதம் ஒன்றுக்கு 70 டன் வழங்கப்படுகிறது. தாது உப்பு கலவை 50 சதவீதம் மானியத்தில் மாதம் ஒன்றுக்கு 1000 கிலோ வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றியத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக, சங்கங்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 80 காசுகள் வீதம் நிர்வாக செலவுகளுக்காக கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. மேலும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.00 வீதம் ஊக்கத்தொகையும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. அம்மா ஆவின் மூலம் பணியாற்றி, ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கருணை ஓய்வ+தியம் திட்டத்தினை அறிவித்தார்கள். அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 பணியாளர்களுக்கு கருணை ஓய்வ+தியமாக ரூ. 2.40 இலட்சம் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் ஆவின் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ், 52 பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து, பின்னர் இதற்கு முன்பாக, 20 இலட்சம் லிட்டர் பால்உற்பத்தி இருந்தது. அம்மா அவர்களின் ஆட்சியில் 31 இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் வர்த்தா புயலின் போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து, பொதுமக்களுக்கு மிகவும் இடைய+றாக இருந்தது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஒரு சிறியளவிலான வாகனம் செல்ல முடியாத இடத்திலும், ஆவின் மூலம் பொதுமக்களுக்கு பால் விற்பனை சிறப்பாக செய்யப்பட்டது. இதுபோன்ற பல்வேறு நிலையங்களில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், என்றும் தமிழக அரசு, மக்களுக்காகவே செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு அடையாளமாக இருக்கும். எனவே, எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில், பொதுமக்களாகிய நீங்கள் அ.இ.அ.தி.மு.க கட்சி வெற்றிபெற உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவுத்தலைவர் எம். சேவியர் மனோகரன், மாவட்ட பால்வளத்தலைவர் அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பகவதிபெருமாள், வழக்கறிஞர்கள் ஞானசேகரன், பால ஜனாதிபதி, துணை பதிவாளர் (பால்பளம்) கஸ்தூரிபாய், ஆவின் பொது மேலாளர் சுந்தரமகாலிங்கம், துணை பால் ஆணையாளர் சண்முக ராஜ்குமார், என்.என்.ஸ்ரீஐயப்பன், நாஞ்சில்சந்திரன், ரெஜிஸ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவில் உற்சாக வரவேற்பு: மேளம் கொட்டி உற்சாகம்
09 Jul 2025விந்தோக், நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.