முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல்இ வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டா மாற்றுதிறனாளிகளுக்கு உதவி முதியோர் உதவித் தொகைஇ காவல்துறை பாதுகாப்புஇ மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 414 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இம்மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வேலூர் சேண்பாக்கம் பாறைமேடு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் விழுப்புரம் மாவட்டம் ஈ.சி.ஆர். சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்ததிற்காக அவரது மனைவி தீபா என்பவருக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் சி.அ.ராமன்,வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்