எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்க்கரை நோய் என்று கூறப்படும் நோயின் பெயர் என்னவோ இனிப்பாக இருந்தாலும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. தென்னிந்திய மக்களை அதிகம் பாதிக்க காரணம், உணவு முறை மாறுபாட்டாலும், உடற்பயிற்சி இல்லாததாலும், பரம்பரை வியாதியாகவும் சர்க்கரை நோய் உள்ளது.
பொதுவாக சர்க்கரை நோய் தாக்கிய சில வருடங்கள் (4&6 வருடங்கள்) பின்னரே அதன் பாதிப்பு முழுமையாக தெரிய வரும். அதாவது கணையத்தில் பீட்டா செல்லின் செயல்பாடு குறைந்து, இன்சுலின் சுரப்பது படிப்படியாக குறையும். இதனால் சிலருக்கு தாமதமாக சர்க்கரை நோய் இருப்பது தெரியவரும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த பரிசோதனை செய்வது அவசியம். சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்) மூன்று வகைப்படும்.
முதலாவது வகை : இன்சுலின் டிபணன்ட் டயாபடிக்ஸ் மெலட்டிஸ். குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், இளம்பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கும். இவர்களுக்கு இன்சுலின் கொண்டு சிகிச்சை அளிக்கவேண்டும்.
இரண்டாவது வகை : டைப்&2 நான் இன்சுலின் டிபணன்ட் டயாபட்டிக்ஸ் மெலிட்டஸ். இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ ஏற்படும். வயதானவருக்கு இது வரும்.
மூன்றாவது வகை : கர்ப்ப கால சர்க்கரை நோய் 2% முதல் 4% பெண்களுக்கு கர்ப்ப காலத்தில்போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும்.
பொதுவாக 35 வயதைக் கடந்தவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. வெறும் வயிற்றில் 110 மில்லிக்கு குறைவாக இருக்க வேண்டும். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 140 மில்லிக்கு குறைவாக இருக்க வேண்டும். குடும்பத்தில் (பரம்பரை) யாருக்காவது இருந்தால் 30 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனைª சய்து கொள்வது அவசியம். நடைபயிற்சி செலவில்லாத சிறந்த மருத்துவம். தினமும் 45 நிமிடங்கள் நடந்தால் சர்க்கரை நோய் வர வாய்ப் பில்லை. (முதல் 10 நிமிடங்கள் வார்ம்அப், கடைசி 10 நிமிடம் கூல்டவுன் இல்லாமல் 45 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
சர்க்கரை நோயின் அறிகுறிகள் : உடல் சோர்வு, அதிக பசி, அடிக்கடி தாகம், மிக வேகமாக எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, கண்பார்வை குறைபாடு, ஆறாத புண், பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல்.
சர்க்கரை நோயினால் உண்டாகும் பாதிப்புகள்
பக்கவாதம், சிறுநீரக நோய் கோளாறு, மாரடைப்பு, கண் நரம்பு பாதிப்பு
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இரண்டு எளிய வழிகள்
மறக்காமல் மருந்து எடுத்துக் கொள்வது, வாழ்க்கை முறை மாற்றம், முறையான, உணவு, உடற்பயிற்சி. எச்பிஏசி & கடந்த 3 மாதங்களாக சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 6% இருந்தால் நார்மல், 6% முதல் 7% வரை நல்ல கன்ட்ரோல், 7% முதல் 8% வரை பேர் கன்ட்ரோல், 8% முதல் 10% வரை அன் சாட்டிஸ்பக்டரி கன்ட்ரோல், 10% அதிகமாக இருந்தால் மோசமான நிலையில் உள்ளது.
காய்கறிகள் தவிர்க்க வேண்டியவை: பீட்ரூட், காரட், வாழைக்காய் மற்றும் கிழங்கு வகைகள். மற்ற காய்கறிகள் அளவோடு சாப்பிட வேண்டும். வெந்தயக் கீரை இரவில் ஊறவைத்து காலையில் மசித்து நீரை குடித்து வர சர்க்கரை நோய் குறையும்.
பழங்கள் தவிர்க்க வேண்டியவை : மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா, பேரிச்சை மற்ற பழங்கள் அளவோடு சாப்பிட வேண்டும். பாதாம் பருப்பு தினமும் 4 சாப்பிட சர்க்கரை நோய் குறையும். ஆளிவிதை, கம்பு, கேழ்வரகு, சாமை, கோதுமை, அதிகமாக சேர்க்கலாம். தினை, குதிரைவாலி அரிசியில் சமைத்து சாப்பிடலாம். இதை ஒரு வேளை சாப்பாட்டில் சேர்க்கலாம்.
கோவக்காய் : கோவக்காயை தினமும் சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். இது நார்ச்சத்து நிரம்பியது. பச்சையாகவும் சாப்பிடலாம். தினமும் 50 கிராம் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று ஆய்வில் கண்டுபி டிக்கப்பட்டுள்ளது.
கறிவேப்பிலை : வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் இரும்புச்சத்து போன்றவை கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையைத் தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெறும் வயிற்சில் 15 இலையை சாப்பிட்டு வந்தால் கொழுப்புகள் கரையும். சர்க்கரை நோய் அளவு சீராக இருக்கும். இதய நோயிலிருந்து காக்கப்படும்.
சோம்பு டீ : தினமும் 1 டம்ளர் நீரை பாத்திரத்தில் ஊற்றி, 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி, சிறிது நேரம் கழித்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தம் குறையும். சிறுநீரக பிரச்சனைகள் வருவதை தடுக்கலாம். தினமும் குடித்துவர சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை நோயால் ஏற்படும் தோள்பட்டை வலி : சர்க்கரை நோயால் தோள்பட்டை வலி பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. அவர்களது அன்றாட வேலையைக் கூட செய்ய முடியாமல் போகிறது. முந்தையமருததுவ முறையின் மூட்டுகள் ஊசியை (ஸ்டீராய்டு) உட்செலுத்தி வலியை குறைப்பார்கள். நாளடைவில் இதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளின் தீவிரம் கண்டு சமீபகாலமாக இயன்முறை மருத்துவரின் சிகிச்சையால் பக்க விளைவு இல்லாமல் குணம் அடைகிறார்கள். நரம்பு சம்பந்தமாக கால்கள் மருத்துப்போதல். உடலின் இயக்கம் அனைத்திற்கும் வாழ்க்கை முறை மாற்றத்திற்கும் அனைத்து விதமான வலிகளுக்கும் இயன்முறை மருத்துவம் ஒரு நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
சர்க்கரை நோயின் மூன்று வகைகளை யும் ஆயுர்வேத மருந்து உட்கொள்வதால் இன்சுலின் போடாமல் மருந்து சாப்பிடுவ தினால் கட்டுக்குள் சர்க்கரை வியாதியை வைக்கலாம். இப்பொழுது மாத்திரை வடிவில் ஆயுர்வேத மருந்து வந்துவிட்டது. எவ்வித சிரமம் இல்லாமல் சாப்பிடலாம்.
90 நாட்களில் நிரந்தர தீர்வு இயன்முறை மருத்துவத்தாலும், ஆயுர்வேத மருந்துகளாலும் பெறலாம். இரண்டுமே பக்க விளைவுகள் இல்லாமல் நமக்கு குணப்படுத்துகிறது. வேரியஸ் வெயின் என்னும் வியாதியைகூட நிச்சயம் 3 மாதத்தில் குணப்படுத்த முடியும்.
டாக்டர் எஸ்.தீபா தங்கம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.