எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை - சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் அரசுப் பொருட்காட்சியை மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்கள் திறந்து வைத்து 27 பயனாளிகளுக்கு இலவச பட்டா மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியினை வழங்கினார்.
கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது,
அரசுப் பொருட்காட்சி மாநில அரசின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவ்வாறு அரசால் நடத்தப்படும் பொருட்காட்சி மக்களுக்கு பொழுதுபோக்காக அமைவதுடன் மட்டுமல்லாமல் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. ஆண்டு ஒன்றிற்கு 10 அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பொருட்காட்சி கோயம்புத்தூர், மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மேலும், அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் 4 மாவட்டங்களில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இப்பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள் அரங்கம் அமைப்பதற்கு ஏதுவாக துறை ஒன்றிற்கு ரூ.66,000ஃ- வழங்கப்பட்டு வந்த நிதி தற்போது உயர்த்தப்பட்டு ரூ.70,000ஃ- ஆக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் இதற்கு முன்னர் 14.09.1994 அன்று அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது. காரைக்குடியில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சி 187-வது பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறை அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு திட்டங்களை பெறுவதற்கு வழிமுறைகளை அறிய எளிமையாக அமையும் எனத் தெரிவித்தார்.
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
காரைக்குடியில் இன்று அரசுப் பொருட்காட்சி 187-வது அரசுப் பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சியின் நோக்கம் என்னவென்றால், சிவகங்கை மாவட்டம் பலதரப்பட்ட சிறப்புகள் வாய்ந்த மாவட்டமாகும். சிவகங்கை மாவட்டம் 17-ஆம் நூற்றாண்டுகளில் இராமநாதபுரம் சமஸ்தானம் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. 1984-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தினை பிரித்து 15.03.1985 முதல் தனி மாவட்டமாக செயல்படத் தொடங்கியது. இங்கு காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், குன்றக்குடி முருகன் கோவில் ஆகியத் திருக்கோவில்கள் பிரசித்துப் பெற்றவை. காரைக்குடி செட்டிநாடு என்று அழைக்கப்படும் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட காரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியம் மிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காரைக்குடி செட்டிநாடு சமையலுக்கு புகழ் பெற்றது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் அமையப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களுக்கு நினைவுக்கூறும் விதமாக திருப்பத்தூர் சுவிடிஸ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி கண்ட முதல் பெண்மணி ராணி வீரமங்கை வேலுநாச்சியார். அவரது நினைவாக சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலிக்கு நினைவுச் சின்னமும் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள்.
கவியரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் காரைக்குடியில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குன்றக்குடியில் தெற்கு ரத வீதியில் ஆன்மீகத்தை போற்றும் வகையில் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள், 2 அரசு சார்பு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட 13 கடைகள் இடம் பெறுகின்றன. நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15ஃ-ம், சிறியவர்களுக்கு ரூ.10ஃ-ம், மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5ஃ-மாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற 184 அரசுப் பொருட்காட்சியின் வாயிலாக அரசுக்கு ரூ.37 கோடியே 65 லட்சத்து 18 ஆயிரம் நிகர வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் 14.09.1994 அன்று அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது. தற்போது 187-வது அரசுப் பொருட்காட்சியாக 23 ஆண்டுகள் கழித்து சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறுகிறது. இப்பொருட்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் அரசுத் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் வாயிலாக நலத்திட்டங்களை பெறுவது குறித்து விவரங்களை நன்கு அறிந்து பயனடைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பிஆர்.செந்தில்நாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) திரு.உல.ரவீந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.து.இளங்கோ, மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஊடகப் பிரிவினர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஊழல், மோசடிகளை தோலுரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு பாராட்டு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
16 Nov 2025சென்னை : ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும் என்றும், தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும
-
பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்ட உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் : பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
16 Nov 2025பாட்னா : உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
10-வது முறையாக பீகார் முதல்வராக 19-ம் தேதி பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
16 Nov 2025பாட்னா : 10-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 19-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியானது
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
-
அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு: சபரிமலைக்கு பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
16 Nov 2025திருவனந்தபுரம் : அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
பீகாரில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க இன்று தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவாரா?
16 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று
-
வரும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங். கூட்டணி உறுதி : செல்வபெருந்தகை திட்டவட்டம்
16 Nov 2025சென்னை : தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. த.வெ.க. பக்கம் காங்கிரஸ் செல்லும் என கூறப்பட்ட நிலையில் தி.மு.க.
-
மகிளா வங்கியை மூடிய பா.ஜ.க. அரசு: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
16 Nov 2025சென்னை : பெண்கள் பொருளாதார வலிமை பெற, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை மத்திய பா.ஜ.க.
-
விருதுநகரில் அ.தி.மு.க.தான் போட்டி: ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்
16 Nov 2025விருதுநகர் : விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க.தான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக த.வெ.க. ஆர்ப்பாட்டம்
16 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
-
நமது தேசத்தை பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
16 Nov 2025லக்னோ : நாட்டையும், மதத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை.
-
சபரிமலை கோவில் சன்னிதானத்தில் கேமரா, செல்போன்களுக்கு தடை : இந்த ஆண்டு முதல் அமல்
16 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு முகாம்
16 Nov 2025சென்னை : சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
-
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று கொடியேற்றம்
16 Nov 2025திருச்சானூர் : திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது.
-
விவசாயப்பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்த அதிபர் ட்ரம்ப்
16 Nov 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை வித
-
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: பெண் டாக்டர் உட்பட மேலும் 3 பேர் கைது
16 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணியா? - துணை செயலாளர் நிர்மல் விளக்கம்
16 Nov 2025சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருபோதும் த.வெ.க. இணையாது என்று கட்சியின் துணை செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயமடைந்தவர்களிடம் 7-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை
16 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
-
தமிழ் பட பாடலை பாடிய பீகாரின் இளம் எம்.எல்ஏ.
16 Nov 2025பாட்னா : பீகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர் நடிகர் அஜித் படத்தின் பாடலைப் பாடியுள்ளார்.
-
சமூக நல விடுதியில் மாணவரை தாக்கிய சக மாணவர்கள் விடுதியில் இருந்து நீக்கம்: கலெக்டர் உத்தரவு
16 Nov 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
யுனிசெப் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
16 Nov 2025சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மெக்சிகோவில் அரசுக்கு எதிராக ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
16 Nov 2025மெக்சிகோ-சிட்டி : மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
-
சத்தீஷ்கர் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண் : முதல்வர் விஷ்ணு தியோ சாய் தகவல்
16 Nov 2025ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.


