எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை - சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் அரசுப் பொருட்காட்சியை மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்கள் திறந்து வைத்து 27 பயனாளிகளுக்கு இலவச பட்டா மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியினை வழங்கினார்.
கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது,
அரசுப் பொருட்காட்சி மாநில அரசின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவ்வாறு அரசால் நடத்தப்படும் பொருட்காட்சி மக்களுக்கு பொழுதுபோக்காக அமைவதுடன் மட்டுமல்லாமல் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. ஆண்டு ஒன்றிற்கு 10 அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பொருட்காட்சி கோயம்புத்தூர், மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மேலும், அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் 4 மாவட்டங்களில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இப்பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள் அரங்கம் அமைப்பதற்கு ஏதுவாக துறை ஒன்றிற்கு ரூ.66,000ஃ- வழங்கப்பட்டு வந்த நிதி தற்போது உயர்த்தப்பட்டு ரூ.70,000ஃ- ஆக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் இதற்கு முன்னர் 14.09.1994 அன்று அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது. காரைக்குடியில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சி 187-வது பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறை அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு திட்டங்களை பெறுவதற்கு வழிமுறைகளை அறிய எளிமையாக அமையும் எனத் தெரிவித்தார்.
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
காரைக்குடியில் இன்று அரசுப் பொருட்காட்சி 187-வது அரசுப் பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சியின் நோக்கம் என்னவென்றால், சிவகங்கை மாவட்டம் பலதரப்பட்ட சிறப்புகள் வாய்ந்த மாவட்டமாகும். சிவகங்கை மாவட்டம் 17-ஆம் நூற்றாண்டுகளில் இராமநாதபுரம் சமஸ்தானம் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. 1984-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தினை பிரித்து 15.03.1985 முதல் தனி மாவட்டமாக செயல்படத் தொடங்கியது. இங்கு காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், குன்றக்குடி முருகன் கோவில் ஆகியத் திருக்கோவில்கள் பிரசித்துப் பெற்றவை. காரைக்குடி செட்டிநாடு என்று அழைக்கப்படும் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட காரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியம் மிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காரைக்குடி செட்டிநாடு சமையலுக்கு புகழ் பெற்றது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் அமையப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களுக்கு நினைவுக்கூறும் விதமாக திருப்பத்தூர் சுவிடிஸ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி கண்ட முதல் பெண்மணி ராணி வீரமங்கை வேலுநாச்சியார். அவரது நினைவாக சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலிக்கு நினைவுச் சின்னமும் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள்.
கவியரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் காரைக்குடியில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குன்றக்குடியில் தெற்கு ரத வீதியில் ஆன்மீகத்தை போற்றும் வகையில் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள், 2 அரசு சார்பு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட 13 கடைகள் இடம் பெறுகின்றன. நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15ஃ-ம், சிறியவர்களுக்கு ரூ.10ஃ-ம், மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5ஃ-மாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற 184 அரசுப் பொருட்காட்சியின் வாயிலாக அரசுக்கு ரூ.37 கோடியே 65 லட்சத்து 18 ஆயிரம் நிகர வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் 14.09.1994 அன்று அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது. தற்போது 187-வது அரசுப் பொருட்காட்சியாக 23 ஆண்டுகள் கழித்து சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறுகிறது. இப்பொருட்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் அரசுத் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் வாயிலாக நலத்திட்டங்களை பெறுவது குறித்து விவரங்களை நன்கு அறிந்து பயனடைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பிஆர்.செந்தில்நாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) திரு.உல.ரவீந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.து.இளங்கோ, மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஊடகப் பிரிவினர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
சாலை விபத்தில் ஆசிரியை பலி: குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
20 Sep 2025விழுப்புரம், விழுப்புரத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
காசாவில் தீவிரமடையும் போர்: இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்..!
20 Sep 2025வாஷிங்டன், காசாவில் தீவிரமடையும் போரை தொடர்ந்து இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை ட்ரம்ப் நிர்வாகம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.