எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டு துவக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.
மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள மதுரை சமூக அறிவியல் கல்லூரி ஒரு தன்னாட்சி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமாகும். இந்த கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது. இந்திய தேசிய தரக்கட்டுபாடு நிறுவனத்தால் (நாக் கமிட்டி) முதல்தரம் ஏ கிரேடு பெற்ற கல்லூரியாகும். இந்த கல்லூரி 1969 ம் ஆண்டு காந்திஜெயந்தி தினமான அக்டோபர் 2 ம் தேதி டாக்டர் கேப்டன் டி.வி.பி.ராஜா என்பவரால் தொடங்கப்பட்டது. உலக அமைதி முன்னேற்றத்தை உறுதிபடுத்தவும், மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கல்லூரி தொடங்கப்பட்டது.
சமூகத்தின் கீழ்நிலையில் உள்ள மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இந்த சமூக அறிவியல் கல்லூரி உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ம் தேதி முன்னாள் மாணவர்கள் இந்த கல்லூரியில் ஒன்றுகூடி தற்போது படித்துகொண்டிருக்கும் மாணவர்களுடன் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்தாண்டு மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டு துவக்கவிழா, கல்லூரி நிறுவனர் நாள் விழா, முன்னாள் மாணவர்கள் சங்க ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நேற்று காந்திஜெயந்தி அன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எம்.லெட்சுமணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டி.ஜேனட்வசந்த குமாரி வரவேற்று பேசினார். கல்லூரியின் நிறுவனர் கேப்டன் டி.வி.பி.ராஜா கல்லூரியன் பொன்விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது கல்லூரியின் 50 ஆண்டு கால வளர்ச்சியையும், அதற்காக தான் எதிர்கொண்ட சிரமங்களையும் அவர் எடுத்துகூறினார்.
இந்த முப்பெரும் விழாவில் மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் படித்து முதுகலை பட்டம் (எம்.எஸ்.டபிள்யூ) பெற்ற கல்லூரியின் முன்னாள் மாணவரும், தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தன்னோடு படித்த முன்னாள் மாணவர்களையும், தற்போது படித்து கொண்டிருக்கும் மாணவர்களையும் சந்தித்து தனது மலரும் நினைவுகளை கல்லூரியில் படித்த நாட்களில் நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறி அவர்களோடு பகிர்ந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.கே.தமிழரசன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சமூக அறிவியல் கல்லூரியில் படித்து பல்வேறு உயர்ந்த நிலைகளில் பணியாற்றி வரும் மாணவர்களும், முன்னாள், இன்னாள் மாணவர்களும், கல்லூரி நிறுவனர் கேப்டன் டி.வி.பி.ராஜாவிற்கு 81 வது பிறந்த நாளை முன்னிட்டு சால்வை அணிவித்து அவரிடம் ஆசிபெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் எஸ்.முருகேசன் தலைமையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். விழா முடிவில் கல்லூரியின் செயலாளர் டி.வி.தர்மசிங் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ராகுல் நாளை சென்னை வருகை
19 Feb 2026சென்னை, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நாளை (பிப். 21) சென்னை வரவுள்ளதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியா எண்ணெய் வாங்குகிறதா? ரஷ்யா தரப்பில் விளக்கம்
19 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் முக்கிய பரிந்துரைகள்
19 Feb 2026சென்னை, பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக்கூடாது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையில்
-
அசாம், காமாக்யா கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு
19 Feb 2026டெல்லி, காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி காமாக்யா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
-
சீனாவில் பட்டாசு கடையில் திடீர் தீவிபத்து - 12 பேர் பலி
19 Feb 2026பெய்ஜிங், சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோக நிகழ்வாக பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
-
தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தி.மு.க.வுடன் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
19 Feb 2026சென்னை, தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடையாக தி.மு.க.வுடன் கூட்டணி என தெரிவிக்கிறோம்.
-
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.: தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு
19 Feb 2026சென்னை, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது இதற்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
-
மகாராஷ்டிராவில் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்திற்குள் தே.ஜ.கூ. வந்தால் அனைவரின் இடஒதுக்கீடும் காலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
19 Feb 2026சென்னை, தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?
-
வருகிற மார்ச் 12-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டம் ரத்து
19 Feb 2026திருச்சி, திருச்சியில் வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் பங்கேற்க விருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் உறுதி
19 Feb 2026சென்னை, வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணநை்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தே.மு.தி.க.
-
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்: பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் சகோதரர் ஆண்ட்ரூ கைது
19 Feb 2026லண்டன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க என்ற பெயரில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடக்கம்
19 Feb 2026சென்னை, எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கினார்.
-
வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய புயல் சின்னம்: வரும் 22-ம் தேதி 3 மாவட்டங்களில் மழை
19 Feb 2026சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
'தி கேரளா ஸ்டோரி - 2' திரைப்படத்தை தடை செய்ய கேரள முதல்வர் வலியுறுத்தல்
19 Feb 2026திருவனந்தபுரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரிக்கு எதிராக தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
-
உலகின் பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்கிறது: ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
19 Feb 2026சென்னை, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
-
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சித் தொடங்குகிறார்
19 Feb 2026ஐதராபாத், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அரசு செய்த சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்வதா? தி.மு.க அரசுக்கு மீது இ.பி.எஸ் கேள்வி
19 Feb 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- என்ன தான் ஆச்சு இந்த முதல்வருக்கு?
-
இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
19 Feb 2026புதுடெல்லி, தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் என்று இலவசங்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்கேள்வி எழுப்பியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
19 Feb 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் விழா தொடக்கம், அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை.
- ஸ்ரீசைலம், திருவைக்காவூர் கோவில்களில் சிவபெருமான் வீதி உலா.
- திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழ
-
இன்றைய நாள் எப்படி?
19 Feb 2026


