முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் மேம்பாலத்தில் ரயில் கவிழ்ந்து கார் மீது விழுந்ததில் 6 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சீட்டில் நகரில் இருந்து ஓரிகன் மாகாணம் போர்ட்லேண்டுக்கு ஆம்ட்ராக் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. அதில் 78 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் பயணம் செய்தனர்.

அந்த ரயில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் மாலை 3.40 மணியளவில் வாஷிங்டன் மாகாணத்தில் டோகோமா- ஒலிம்பியா இடையே சென்ற போது மேம்பாலத்தில் திடீரென தடம்புரண்டு கவிழ்ந்தது. இதனால் பல ரயில் பெட்டிகள் மேம்பாலத்தில் இருந்து ரோட்டில் சென்ற கார்கள் மீது விழுந்தன. அதில் ஏராளமான கார்கள் நொறுங்கின.

இந்த விபத்தில் ரயில் மற்றும் கார்களில் பயணம் செய்த 6 பேர் அதே இடத்தில் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்தனர். ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டது. விபத்தில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து