எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் பயன்களை முழுமையாக அறியாமல் விண்ணப்பிக்காமல் இருப்பதால், இது குறித்து வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தந்து அவர்கள் இந்த திட்டத்தில் அனைத்து பயன்களையும் பெற வழி செய்ய வேண்டும் என கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவுறுத்தினார்.
மகளிர் விவசாயிகள்
கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜ கண்டிகை பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, நிர்வாகிகள் சி.எம்.ஆர்.முரளி, ரமேஷ்குமார், எஸ்.டி.டி.ரவி, இமையம் மனோஜ், திருப்பதி முன்னிலை வகித்தனர்.
கோட்டாட்சியர் முத்துசாமி வரவேற்றார். நிகழ்வில் வருவாய் துறை, சமூக நலத்துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, தோட்டக்கலை , வேளாண்மை துறை, மக்கள் செய்தி தொடர்பு துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், தேசிய காசநோய் தடுப்பு திட்டம், சுகாதார துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சித்த மருத்துவம், கல்வி துறை, கால்நடை பராமரிப்பு துறை, மகளிர் விவசாயிகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட துறை சார்ந்த கண்காட்சிகள் அமைக்கப்பட்டதை ஆட்சியர் பார்வையிட்டதோடு முகாமில் அதிகாரிகள் துறை சார்ந்த அரசு திட்டங்களையும் மக்கள் இத்திட்டங்களில் இருந்து பயன் பெறும் முறை குறித்தும் எடுத்துரைத்தனர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பேசுகையில் சித்தராஜகண்டிகை, சிறுபுழல்பேட்டை, புது கும்மிடிப்பூண்டி, பாத்தபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் சிப்காட் தொழிற்பேட்டைக்குள் இருப்பதால் இங்குள்ள தொழிற்சாலைகளால் காற்று மாசு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவும், சிப்காட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் அதிக அளவு வட இந்தியர்களே வேலை செய்து வரும் நிலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாதம் ஓரு முறை மாவட்டத்தில் ஒரு பகுதியிலும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுவதோடு, அந்தந்த வட்டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது என்றும், மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் டெங்கு காய்ச்சல் வெகுவாக தடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் தேவையற்ற பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொள்ள கூடாதென்றும், மாவட்டத்தில் இது வரை சுகாதார சீர்கேட்டுடன் டெங்கு பரவும் வகையில் வீடுகளை வைத்திருந்த 2900 பேரிடம் இருந்து 12லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசியவர் திருவள்ளூர் மாவட்டத்தை பிப்ரவரி-2018க்குள் 100 சதவீத தனிநபர் இல்ல கழிவறையை பயன்படுத்துவோர் உள்ள மாவட்டமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும்,பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து முழுமையாக தெரியாத சூழலில் இது குறித்து வருவாய் துறையினர் மக்களுக்கு தெரிவித்து அவர்கள் திட்டத்தின் பயன்களை பெற வழிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் 286 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள்,100 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர், விதவை உதவித் தொகைக்கான ஆணைகளும், 75 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் அட்டைகளும், 50க்கும் மேற்பட்டோருக்கு வேளாண் துறை மூலம் மரக்கன்றுகள், விவசாய பொருள்கள், விவசாய கருவிகள் வழங்கப்பட்டது.
மேலும் முகாமில் சுகாதார துறை சார்பாக பொது மருத்துவ சிகிச்சை, கண் பரிசோதனை, சக்கரை, ரத்த அழுத்த பரிசோதனை நடத்தப்பட்டது. மக்கள் தொடர்பு முகாமின் முடிவில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் நன்றி கூறினார். இந்த முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், வேளாண் துறை உதவி இயக்குனர் தேவேந்திர சிங் பரிதார், வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
ஆஸி.யை 225 ரன்களில் சுருட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி..!
13 Jul 2025கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.