எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் பயன்களை முழுமையாக அறியாமல் விண்ணப்பிக்காமல் இருப்பதால், இது குறித்து வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தந்து அவர்கள் இந்த திட்டத்தில் அனைத்து பயன்களையும் பெற வழி செய்ய வேண்டும் என கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவுறுத்தினார்.
மகளிர் விவசாயிகள்
கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜ கண்டிகை பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, நிர்வாகிகள் சி.எம்.ஆர்.முரளி, ரமேஷ்குமார், எஸ்.டி.டி.ரவி, இமையம் மனோஜ், திருப்பதி முன்னிலை வகித்தனர்.
கோட்டாட்சியர் முத்துசாமி வரவேற்றார். நிகழ்வில் வருவாய் துறை, சமூக நலத்துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, தோட்டக்கலை , வேளாண்மை துறை, மக்கள் செய்தி தொடர்பு துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், தேசிய காசநோய் தடுப்பு திட்டம், சுகாதார துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சித்த மருத்துவம், கல்வி துறை, கால்நடை பராமரிப்பு துறை, மகளிர் விவசாயிகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட துறை சார்ந்த கண்காட்சிகள் அமைக்கப்பட்டதை ஆட்சியர் பார்வையிட்டதோடு முகாமில் அதிகாரிகள் துறை சார்ந்த அரசு திட்டங்களையும் மக்கள் இத்திட்டங்களில் இருந்து பயன் பெறும் முறை குறித்தும் எடுத்துரைத்தனர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பேசுகையில் சித்தராஜகண்டிகை, சிறுபுழல்பேட்டை, புது கும்மிடிப்பூண்டி, பாத்தபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் சிப்காட் தொழிற்பேட்டைக்குள் இருப்பதால் இங்குள்ள தொழிற்சாலைகளால் காற்று மாசு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவும், சிப்காட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் அதிக அளவு வட இந்தியர்களே வேலை செய்து வரும் நிலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாதம் ஓரு முறை மாவட்டத்தில் ஒரு பகுதியிலும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுவதோடு, அந்தந்த வட்டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது என்றும், மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் டெங்கு காய்ச்சல் வெகுவாக தடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் தேவையற்ற பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொள்ள கூடாதென்றும், மாவட்டத்தில் இது வரை சுகாதார சீர்கேட்டுடன் டெங்கு பரவும் வகையில் வீடுகளை வைத்திருந்த 2900 பேரிடம் இருந்து 12லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசியவர் திருவள்ளூர் மாவட்டத்தை பிப்ரவரி-2018க்குள் 100 சதவீத தனிநபர் இல்ல கழிவறையை பயன்படுத்துவோர் உள்ள மாவட்டமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும்,பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து முழுமையாக தெரியாத சூழலில் இது குறித்து வருவாய் துறையினர் மக்களுக்கு தெரிவித்து அவர்கள் திட்டத்தின் பயன்களை பெற வழிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் 286 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள்,100 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர், விதவை உதவித் தொகைக்கான ஆணைகளும், 75 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் அட்டைகளும், 50க்கும் மேற்பட்டோருக்கு வேளாண் துறை மூலம் மரக்கன்றுகள், விவசாய பொருள்கள், விவசாய கருவிகள் வழங்கப்பட்டது.
மேலும் முகாமில் சுகாதார துறை சார்பாக பொது மருத்துவ சிகிச்சை, கண் பரிசோதனை, சக்கரை, ரத்த அழுத்த பரிசோதனை நடத்தப்பட்டது. மக்கள் தொடர்பு முகாமின் முடிவில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் நன்றி கூறினார். இந்த முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், வேளாண் துறை உதவி இயக்குனர் தேவேந்திர சிங் பரிதார், வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
04 Mar 2026தங்கம் விலை நேற்று 2-வது நாளாக குறைந்து விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600-க்கு விற்பனையானது.
-
அய்யா வைகுண்டர் 194-வது அவதார நாள்: தமிழ்நாடு கவர்னர் ரவி வாழ்த்து
04 Mar 2026சென்னை, அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
-
ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி
04 Mar 2026தஞ்சாவூர், ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
-
தஞ்சையில் விஜய்யை பார்க்க ஆர்வம்: சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
04 Mar 2026தஞ்சாவூர், த.வெ.க. மாநாட்டில் விஜய்யை பார்க்க வந்தவர்களில் 5 பேர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
-
மடப்புரம் காவலாளி கொலை வழக்கு: மாவட்ட நீதிமன்றத்தில் நிகிதா ஆஜர்
04 Mar 2026மதுரை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக, நகை காணாமல் போனதாகப் புகாரளித்த புகார்தாரரான நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்த
-
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து
04 Mar 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று தி.மு.க.
-
தஞ்சை கூட்டத்தில் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்
04 Mar 2026தஞ்சை, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
மிக நீண்ட போருக்கு தயார்: ஈரான்
04 Mar 2026தெஹ்ரான், நாங்கள் மிக நீண்ட போருக்குத் தயாராகிவிட்டோம் என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
போர் பதற்றம் எதிரொலி: 3 - வது நாளாக கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை
04 Mar 2026மும்பை, போர் பதற்றம் காரணமாக நேற்று 3-வது நாளாக இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது.
-
த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம்: தஞ்சை கூட்டத்தில் விஜய் ஆவேசம்
04 Mar 2026தஞ்சை, தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம் என்று தஞ்சையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.
-
ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Mar 2026சென்னை, ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
நாங்குநேரி இரட்டைக்கொலை; காவல்துறை விசாரணை தீவிரம்: இதுவரை 7 பேர் கைது
04 Mar 2026திருநெல்வேலி, நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.
-
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
04 Mar 2026சென்னை, மாநிலங்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
04 Mar 2026சென்னை, சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்டு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
-
மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை போட்டி
04 Mar 2026சென்னை, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.
-
நெல்லையில் இன்று அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு
04 Mar 2026நெல்லை, நெல்லையில் இன்று நடக்கும் அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று சார்பு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
-
சிவகங்கை தொழிற்பேட்டையில் அமைக்கிறது எம்.ஆர்.எப்.-ன் ரூ.5,300 கோடி மதிப்பிலான புதிய டயர் தொழிற்சாலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
04 Mar 2026சென்னை, தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலை அமைப்பதற்கு, அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கொல்லப்படுவார்: இஸ்ரேல் எச்சரிக்கையால் பரபரப்பு
04 Mar 2026ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமேனியின் மகன் மோஜ்தபா கமேனியும் கொல்லப்படுவார் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் பலியான கமேனியின் உடல் சொந்த ஊரான மஷ்ஷாத்தில் விரைவில் அடக்கம்
04 Mar 2026தெஹ்ரான், ஈரானின் உச்சத் தலைவர் மதகுரு அயத்துல்லா அலி கமேனி உடல் அவரின் சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
ஈரான் மீதான தாக்குதலுக்கு உதவ மறுப்பு: ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை துண்டித்த டொனால்ட் ட்ரம்ப்
04 Mar 2026நியூயார்க், ஈரான் மீது தாக்குதல் நடத்த உதவ மறுத்த ஸ்பெயின் உடன் வர்த்தகத்தை தூண்டிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தி பெயரை அகற்ற ஒப்புதல்
04 Mar 2026திருச்சி, திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் எழுந்த நிலையில், பெயரை மாற்ற ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.&nb
-
சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை மாணவியின் பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி: முதல்வர்
04 Mar 2026சென்னை, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், வலையங்குளம் கிராமம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்க
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Mar 2026- கோவை கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
- ஆழ்வார ்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
- காரமடை அரங்கநாதர் சாற்றுமுறை
- காங்கேயம் முருகன் விடயாற்று உற்சவம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Mar 2026


