எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் பயன்களை முழுமையாக அறியாமல் விண்ணப்பிக்காமல் இருப்பதால், இது குறித்து வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தந்து அவர்கள் இந்த திட்டத்தில் அனைத்து பயன்களையும் பெற வழி செய்ய வேண்டும் என கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவுறுத்தினார்.
மகளிர் விவசாயிகள்
கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜ கண்டிகை பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, நிர்வாகிகள் சி.எம்.ஆர்.முரளி, ரமேஷ்குமார், எஸ்.டி.டி.ரவி, இமையம் மனோஜ், திருப்பதி முன்னிலை வகித்தனர்.
கோட்டாட்சியர் முத்துசாமி வரவேற்றார். நிகழ்வில் வருவாய் துறை, சமூக நலத்துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, தோட்டக்கலை , வேளாண்மை துறை, மக்கள் செய்தி தொடர்பு துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், தேசிய காசநோய் தடுப்பு திட்டம், சுகாதார துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சித்த மருத்துவம், கல்வி துறை, கால்நடை பராமரிப்பு துறை, மகளிர் விவசாயிகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட துறை சார்ந்த கண்காட்சிகள் அமைக்கப்பட்டதை ஆட்சியர் பார்வையிட்டதோடு முகாமில் அதிகாரிகள் துறை சார்ந்த அரசு திட்டங்களையும் மக்கள் இத்திட்டங்களில் இருந்து பயன் பெறும் முறை குறித்தும் எடுத்துரைத்தனர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பேசுகையில் சித்தராஜகண்டிகை, சிறுபுழல்பேட்டை, புது கும்மிடிப்பூண்டி, பாத்தபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் சிப்காட் தொழிற்பேட்டைக்குள் இருப்பதால் இங்குள்ள தொழிற்சாலைகளால் காற்று மாசு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவும், சிப்காட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் அதிக அளவு வட இந்தியர்களே வேலை செய்து வரும் நிலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாதம் ஓரு முறை மாவட்டத்தில் ஒரு பகுதியிலும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுவதோடு, அந்தந்த வட்டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது என்றும், மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் டெங்கு காய்ச்சல் வெகுவாக தடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் தேவையற்ற பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொள்ள கூடாதென்றும், மாவட்டத்தில் இது வரை சுகாதார சீர்கேட்டுடன் டெங்கு பரவும் வகையில் வீடுகளை வைத்திருந்த 2900 பேரிடம் இருந்து 12லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசியவர் திருவள்ளூர் மாவட்டத்தை பிப்ரவரி-2018க்குள் 100 சதவீத தனிநபர் இல்ல கழிவறையை பயன்படுத்துவோர் உள்ள மாவட்டமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும்,பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து முழுமையாக தெரியாத சூழலில் இது குறித்து வருவாய் துறையினர் மக்களுக்கு தெரிவித்து அவர்கள் திட்டத்தின் பயன்களை பெற வழிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் 286 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள்,100 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர், விதவை உதவித் தொகைக்கான ஆணைகளும், 75 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் அட்டைகளும், 50க்கும் மேற்பட்டோருக்கு வேளாண் துறை மூலம் மரக்கன்றுகள், விவசாய பொருள்கள், விவசாய கருவிகள் வழங்கப்பட்டது.
மேலும் முகாமில் சுகாதார துறை சார்பாக பொது மருத்துவ சிகிச்சை, கண் பரிசோதனை, சக்கரை, ரத்த அழுத்த பரிசோதனை நடத்தப்பட்டது. மக்கள் தொடர்பு முகாமின் முடிவில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் நன்றி கூறினார். இந்த முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், வேளாண் துறை உதவி இயக்குனர் தேவேந்திர சிங் பரிதார், வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.