எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : அம்மா முதல்வராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலை பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழகம்தான் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சேலம், சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, தாரமங்கலம் புதிய புறவழிச் சாலை மற்றும் மேம்பாலங்களை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
நீண்டகாலமாக தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற பொதுமக்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோரின் ஒட்டுமொத்தக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தாரமங்கலம் புறவழிச் சாலையையும், இரண்டு பாலங்களையும் இன்று திறந்து வைக்கின்றேன். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாலை உள்கட்டமைப்பு என்பது மிகமுக்கியமான ஒன்றாகும். எந்தவொரு மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு சிறந்து விளங்குகின்றதோ அந்த மாநிலம் தொழில் வளம் நிறைந்த சிறந்த மாநிலமாக இருக்கும். எனவே, நம்முடைய தமிழ்நாடு சாலை மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கியிருக்கின்றது. சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் என்று சொன்னால் அது தமிழ்நாடு என்று பெயர் சொல்கின்ற அளவிற்கு அம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலைப் பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கின்ற மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டத்தின் சார்பாக சங்ககிரி சட்டமன்றத்திற்கு உட்பட்ட தாரமங்கலத்தில் ரூபாய் 24 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 3.110 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தாரமங்கலம் புதிய புறவழிச் சாலை மக்களின் ஆசியோடும், அம்மாவின் அருளாசியோடும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புறவழிச் சாலை ஓமலூர், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி சாலை கிலோமீட்டர் 9/240 பெரியபட்டியில் துவங்கி, கிலோ மீட்டர் 15/300 தொட்டம்பட்டியில் முடிவடைகின்றது. சேலம் நெடுஞ்சாலைத் துறையின் நபார்டு மற்றும் புறவழிச் சாலை கோட்டத்தின் சார்பில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், கோணசமுத்திரம் ஊராட்சி, வடகரை வாய்க்கால் நரிமேடு சாலை ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டிலும் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், ஓலைப்பட்டி ஊராட்சி, தொலசம்பட்டி சாலை ரூபாய் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூபாய் 5 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய பாலங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், ஓமலூரிலிருந்து மேட்டூர் வரைக்கும் உள்ள ரயில்வே கடவுகளின் இருபுறங்களிலும் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சட்டப்பேரவை உறுப்பினர்களும், பொதுமக்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தொலசம்பட்டியில் ரூபாய் 18.44 கோடியில் ரயில்வே மேம்பாலம், முத்தநாயக்கன்பட்டியில் ரூபாய் 15.94 கோடியில் ஒரு ரயில்வே மேம்பாலம், ஜே.எஸ்.டபுள்.யூ என்ற தொழிற்சாலைக்கு அருகிலே ரூபாய் 19.34 கோடி மதிப்பீட்டில் ஒரு உயர்மட்ட மேம்பாலம், புஞ்சாண்டியூரில் ரயில்வே கடவின் குறுக்கே ஒரு மேம்பாலமும் விரைந்து கட்டிக் கொடுத்து, மக்களுடைய பயன்பாட்டிற்கு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக, திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூர் வரை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தி போக்குவரத்து நெரிசலற்ற சாலையாக உருவாக்கித் தரப்படும். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ஓமலூர் - மேச்சேரி சாலையில் ஓமலூர் முதல் மேச்சேரி வரை 14.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4 வழிச் சாலை அமைப்பதற்கு அம்மாவினுடைய அரசு திட்டமிட்டு அந்தப் பகுதியும் வளர்ச்சியடைவதற்கு விரிவுபடுத்தப்படும். பவானி-மேட்டூர், மேட்டூர் - தொப்பூர் பகுதிகளில் செல்கின்ற வாகனங்கள் தங்கு தடையின்றி செல்வதற்கு அம்மாவின் அரசு அந்த சாலைகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கின்றது.
சாலை அமைக்கும் போது, நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால், மனமுவந்து நிலம் கொடுத்தால் தான் இது போன்ற சாலைகளை அமைத்து, விபத்து, விலைமதிக்க முடியாத உயிர்ச் சேதம், பயண நேரம் ஆகியவற்றை குறைக்க முடியும், எரிபொருளும் மிச்சப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தான் எங்களுடைய லட்சியம். அம்மா காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சாலைகளை சீரமைத்திருக்கின்றோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.