முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு: மன்னிப்பு கோரினார் ஜாகீர் நாயக்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

கோலாலம்பூர் : சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய விவகாரத்தில் ஜாகீர் நாயக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.

இந்தியாவில் தனது வெறுக்கத்தக்க பேச்சுகளின் மூலம் தீவிரவாதத்தை தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக் மூன்று ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்துமாறு இந்திய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை கடந்த ஆண்டு மலேசிய அரசாங்கம் நிராகரித்தது.

சமீபத்தில், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரை விட தென்கிழக்கு ஆசிய நாட்டில் இந்துக்களுக்கு 100 மடங்கு அதிக உரிமைகள் இருப்பதாக ஜாகீர் நாயக் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியது. மேலும் சீனர்கள் குறித்து, அவர்கள் மலேசியாவின் பழைய விருந்தாளிகள் என்று கூறியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஜாகீர் நாயக் மீது கடும் விமர்சனம் எழுந்த நிலையில், மலேசியாவின் 7 மாநிலங்களில் அவர் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது பொது இடங்களில் ஜாகீர் நாயக் கூட்டம் நடத்துவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. மேலும் அவர் கூறிய கருத்து தொடர்பாக மலேசிய போலீசார் ஜாகீர் நாயக்கிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து தனது கருத்து முற்றிலுமாக திரித்து கூறப்பட்டுள்ளதாக ஜாகீர் நாயக் கூறியுள்ளார். இது குறித்து மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்த பேச்சுகளால் என்னை இனவாதியாக நினைக்க கூடிய நிலை வந்தது குறித்து நான் வருந்துகிறேன். எனது முந்தைய பேச்சுகளை கேட்காதவர்கள் தற்போது என் மீது தவறான எண்ணம் கொண்டிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நான் கூறிய கருத்துகள் சில பேரால் திரித்து கூறப்பட்டுள்ளது. எந்த ஒரு சமூகத்தினரையோ அல்லது தனி நபரையோ இழிவாக பேச வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. இருப்பினும் இந்த சம்பவத்தின் மூலம் யார் மனதாவது புண்பட்டிருக்குமானால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து