எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் காலம் முடிந்து விட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக டோனியின் பேட்டிங் பார்ம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஆடிய அவரின் பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இடம் பெறாமல் டோனி தானாகவே விலகிக் கொண்டார். இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே நடந்து வரும் டி20 தொடரிலும் டோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் டோனியின் காலம் இந்திய அணியில் முடிவுக்கு வருகிறதோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் டோனி குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசியதாவது:
மகேந்திரசிங் டோனியின் காலம் முடிந்து விட்டது. இனி மேல் டோனிக்கு அடுத்த இடத்தில் யாரைக் கொண்டு வருவது குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும். என்னுடைய கருத்து அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ரிஷப் பந்தை தயார் செய்ய வேண்டும். ரிஷப் பந்த் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். அவருக்கே என்னுடைய முன்னுரிமை இருக்கும். அடுத்து நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் கூட டோனியைத் தேர்வு செய்யக் கூடாது என்பது என்னுடைய கருத்து. அவருகுப் பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பளிக்கலாம்.
ஒருவேளை ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம். சஞ்சு சாம்ஸன் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன். 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணியை இளைஞர்கள்தான் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய கருத்து. டோனி இந்திய அணிக்கு ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
ஆனால், இப்போது அவரை சற்று ஒதுக்கி வைத்து அடுத்த வீரரைத் தேர்வு் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. டோனியை வலுக்கட்டாயமாக அனுப்பாமல் , அவராகவே சென்று விடுவார் என்று நினைக்கிறேன்.
பேட்டிங் வரிசையில் ரிஷப் பந்த் 5 அல்லது 6-வது வரிசையில் களமிறங்குவது சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். அவரின் பேட்டிங் இடம் எது என்பது அனைவருக்கும் விரைவில் தெரியவரும். டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை இன்னும் நாம் பட்டை தீட்ட வேண்டும். அவரின் தவறுகளை நாம் அடிக்கடி சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக்கொள்வார். இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.
உலகக்கோப்பை போட்டிக்குப் பின் அணியில் இடம் பெறாமல் டோனி இருக்கிறார். தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் டோனியை இந்திய அணி தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை. இதனால் டோனி ஓய்வை அறிவிப்பாரா அல்லது அணியில் தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதே சமயம் டோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக கொண்டுவரப்பட்டுள்ள ரிஷப் பந்த் பேட்டிங்கில் பொறுப்பற்ற தனமாக செயல்படுவது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. பேட்டிங்கில் அவசரப்பட்டு ஷாட்களை ஆடுவதும், விரைவாக விக்கெட்டுகளை இழப்பதும் அணியின் பேட்டிங் வரிசையை ஸ்திரம் இழக்க வைக்கிறது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட் பதிவாளரை சேர்க்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
12 Dec 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
-
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் விரிவாக்க திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி
-
மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Dec 2025சென்னை, மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளஆர்.
-
ஓய்வு முடிவை திரும்ப பெற்ற வினேஷ் போகத் மீண்டும் களம் காண்கிறார்
12 Dec 2025மும்பை, ஓய்வு முடிவை மாற்றிவிட்டு மீண்டும் ஒலிம்பிக் களத்துக்குத் திரும்பவிருப்பதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்திருக்கிறார்.
-
வெலிங்டன் 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி
12 Dec 2025வெலிங்டன், வெலிங்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
-
ரத்தாகும் விமானங்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்தும் ஏர் இந்தியா
12 Dec 2025சென்னை, பனிமூட்டம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் கட்டணத்தை திருப்பி செலுத்தியது ஏர் இந்தியா நிறுவனம்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: டிக்கெட் விற்பனை துவக்கம்: குறைந்தபட்ச விலை ரூ.100-ஆக நிர்ணயம்
12 Dec 2025துபாய், டி-20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச விலை ரூ.100-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்: செங்கோட்டையன் அழைப்பு
12 Dec 2025ஈரோடு, விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்று செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
-
தீவிரமடையும் காற்று மாசு விவகாரம்: விவாதம் நடத்த ராகுல் விடுத்த அழைப்பை ஏற்றது மத்திய அரசு
12 Dec 2025டெல்லி, காற்று மாசு விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை விடுத்த ராகுல் காந்தியின் அழைப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 13-12-2025
13 Dec 2025 -
வாரராசிபலன்
13 Dec 2025


