முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எடியூரப்பா வரவேற்றார். 

கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது.

அதேவேளையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிச.5ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன் எனவும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் என எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து