எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காத்மாண்டு : தெற்காசிய விளையாட்டில் இந்தியா 100 தங்கப் பதக்கங்களை வேட்டையாடி உள்ளது.
நேபாளத்தில் நடைபெற்று வரும் இந்த விளையாட்டில் 5-வது நாளான நேற்று முன்தினம் மட்டும் 29 தங்கம் உட்பட 49 பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர். நீச்சலில் இந்தியாவுக்கு 7 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஹரி நட்ராஜ் (100 மீட்டர் பேக்ஸ்டிரோக்), ரிச்சா மிஸ்ரா (800 மீட்டர் பிரீஸ்டைல்), சிவா (400 மீட்டர் தனிநபர் மெட்லே), மானா படேல் (100 மீட்டர் பேக்ஸ்டிரோக்), சாஹத் அரோரா (50 மீட்டர் பேக்ஸ்டிரோக்), லிகித் (50 மீட்டர் பிரீஸ்ட் ஸ்டிரோக்), ருஜுதா பாத் (50 மீட்டர் பிரீஸ்டைல்) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
ஜெயவீனா (50 மீட்டர் பிரீஸ்ட்ஸ்டிரோக்) வெள்ளிப் பதக்கமும், ரிதிமான வீரேந்திர குமார் (100 மீட்டர் பேக் ஸ்டிரோக்) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். நீச்சலில் மட்டும் இதுவரை இந்தியாவுக்கு 30 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தது. ஆடவருக்கான 97 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைலில் சத்யவர்த் கதியான், 125 கிலோ எடைப் பிரிவு பிரீஸ்டைலில் சுமித் மாலிக் ஆகியோரும் மகளிருக்கான 76 கிலோ எடைப் பிரிவில் குர்ஷன்பிரீத் கவுர், 57 கிலோ எடைப் பிரிவில் சரிதா மோர் ஆகியோரும் தங்கப் பதக்கம் வென்றனர். துப்பாக்கி சுடுதலில் இந்தியா 3 தங்கம் கைப்பற்றியது. ஆடவருக்கான 25 மீட்டர் ராப்பிடு பையர் பிஸ்டலில் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார். இதே பிரிவில் அனிஷ் பன்வாலா, பாபேஷ் சேகாவத், ஆதார்ஷ் சிங் ஆகியோரை உள்ளிடக்கிய இந் திய அணி தங்கப் பதக்கம் வென்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் மெஹுலி கோஷ், யாஷ் வர்தன் ஜோடி தங்கம் வென்று அசத்தியது.
பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப் பதக்கம் கிடைத்தது. மகளிருக்கான 87 கிலோ எடைப் பிரிவில் அனுராதா பவுன்ராஜ் ஒட்டுமொத்தமாக 200 கிலோ எடையை (90+110) தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். 27 வயதான பவுன்ராஜ் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
81 கிலோ எடைப் பிரிவில் ஷர்ஸ்தி சிங் 190 கிலோ எடையை (82+108) தூக்கி தங்கம் வென்றார். தடகளத்தில் கடைசி நாளான நேற்று முன்தினம் இந்தியாவுக்கு மேலும் 8 பதக்கங்கள் கிடைத்தது. மகளிருக்கான ஈட்டி எறிதலில் குமாரி ஷர்மிளா (53.64 மீட்டர்) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதேபோன்று மகளிருக்கான 800 மீட்டர் ஆட்டத்தில் லில்லி தாஸ் (2:08.97) வெண்கலப் பதக்கம் பெற்றார். ஆடவருக்கான ஈட்டி எறிதலில் சிவ்பால் சிங் (84.16 ) வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஜீவன், சந்தோஷ் குமார், அங்ரெஜ் சிங், ஜபிர் மதரி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:08.21 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.
ஆடவருக்கான மராத்தானில் ரஷ்பால் சிங் (2:21:57) வெள்ளிப் பதக்கமும், ஷெர் சிங் (2:22:07) வெண்கலப் பதக்கம் பெற்றனர். அதேவேளையில் மகளிருக்கான மராத்தானில் ஜோதி கவாதே (2:52:44) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் மொகமது அஃப்ஸல் (1:51.25) வெள்ளிப் பதக்கம் வென்றார். தடகளத்தில் மட்டும் ஓட்டுமொத்தமாக இந்தியா 12 தங்கம், 20 வெள்ளி, 15 வெண்கலம் என 47 பதக்கம் கைப்பற்றியது.
மகளிருக்கான கால்பந்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் 18-வது நிமிடத்தில் பாலா தேவி கோல் அடித்து அசத்தினார். இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியால் ரவுண்ட் ராபின் சுற்றில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. இன்று நடை பெறும் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் நேபாளத்துடன் மோதுகிறது.
6-வது நாளின் முடிவில் இந்தியா 110 தங்கம், 69 வெள்ளி, 35 வெண் கலம் என 214 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது. நேபாளம் 43 தங்கம், 34 வெள்ளி, 65 வெண்கலம் என 142 பதக்கங்களுடன் 2-வது இடம் வகிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
கண்ணன் ரவியுடன் இணையும் கவுதம் கார்த்திக்
22 Sep 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்களன்று தொடங்கியது.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.