எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவி வழங்குங்கள் என்று சென்னையில் நடைபெற்ற அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.
அம்மா பேரவை கூட்டம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நேற்று மாநில அம்மா பேரவையால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசியதாவது:
மறைந்த முதல்வர் அம்மாவின் 72 - வது பிறந்த நாள் விழாவை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்பதற்காக கழக அம்மா பேரவையின் சார்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற எழுச்சிமிகு சிறப்பான நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தலைமையுரையாற்றிய அமைச்சர், அருமை சகோதரர் ஆர்.பி. உதயகுமார் அவர்களே, எனக்குப் பின்னாலே சிறப்பான கருத்துக்களை வழங்க இருக்கின்ற கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர் துணை முதலமைச்சர் மரியாதைக்குரிய ஓ.பன்னீர்செல்வம் அவர்களே மற்றும் அனைவருக்கும் வணக்கம்,
ஏழைகளுக்கு உதவுங்கள்
அம்மா அவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவி. தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு உழைத்து மக்களிடத்திலே, இதயத்திலே குடியிருந்த தலைவி என்று சொன்னால் அது அம்மா என்று சொல்வார்கள். இன்றைக்கு பெற்ற அம்மாவை அம்மா என்று சொல்லுகின்றோமோ, இல்லையோ, ஆனால் அம்மா என்று சொன்னால் அம்மாவைத் தான் குறிக்கும். அந்த அளவுக்கு அவர்கள் வாழ்ந்த காலம் முழுவதும் மக்களுக்காக உழைத்து, தன் உடலில் ஏற்பட்ட நோயைக்கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவி அம்மா. அம்மாவினுடைய பிறந்த நாள் விழா எழுச்சியோடும், சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
வருவாய்த் துறை அமைச்சர், கழக அம்மா பேரவையினுடைய செயலாளர் இங்கே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றார். அம்மா இருக்கின்றபொழுது குறிப்பிடுவார்கள். நீங்கள் ஏதாவது ஏழைகளுக்கு செய்யுங்கள், அது எனக்கு மகிழ்ச்சியை தரும் என்று சொல்வார்கள். அதேபோல, வருகை தந்திருக்கின்ற நிர்வாகிகள் நம்முடைய ஒன்றிய, நகர, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் இருக்கின்ற அத்தனை பேரவையினுடைய நிர்வாகிகளும் ஒத்துழைப்போடு இன்றைக்கு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள். உங்களுடைய வசதிக்கேற்றவாறு ஏதாவது ஒரு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். பெரிய அளவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினால் தான் அந்த விழா என்று நினைத்து விடாதீர்கள், மனம் இருந்தால் போதும். அம்மா என்ற தெய்வம் நம் உள்ளத்திலே இருக்கின்றார் என்பதை அந்தப் பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு எடுத்துக்காட்டுகின்ற விதமாக, தங்களால் இயன்ற அளவிற்கு ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். இங்கே இருக்கின்ற முதியவர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை கொடுங்கள், அன்னதானம் வழங்குங்கள், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்குங்கள், அவர்களுக்கு இனிப்பு வழங்குங்கள். மருத்துவமனையில் இருக்கின்ற நோயாளிகளுக்கு நம்மால் இயன்ற அளவிற்கு பழங்கள், பால், ரொட்டி போன்றவற்றை வழங்கலாம். மேலும் வசதி இருந்தால், அந்த மருத்துவமனைக்குத் தேவையான பொருட்களை வழங்கலாம், படுக்கை வழங்கலாம், கட்டில் வழங்கலாம் அந்தப் பகுதியில் இருக்கின்ற நிர்வாகிகள் தங்களது நிதி வசதிக்கேற்றவாறு இப்படி ஏதாவது உதவிகள் செய்தால், அது அம்மாவுக்கு செய்கின்ற நன்றி என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். புரட்சித் தலைவர் மறைவிற்குப் பிறகு, அம்மா அவர்கள் கட்சியை இமை காப்பதைப் போல காத்தார்கள். அதனால்தான் இன்றைக்கு நாம் வளர்ந்து இந்த இடத்தில் குழுமியிருக்கின்றோம் என்று சொன்னால், அம்மாவினுடைய உழைப்பால் இன்றைக்கு நிமிர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை நாம் அடைந்திருக்கிறோம். அந்த வகையிலே, நாம் அத்தனை பேரும் அம்மாவின் அன்பைப் பெற்றவர்கள். அதற்கு நன்றிக் கடனாக அம்மா மீது பற்றுள்ள மக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுமென்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
திட்டங்களை சொல்லுங்கள்
இங்கே வருகை தந்திருக்கின்ற நிர்வாகிகள், அரசாங்கம் போடுகின்ற திட்டங்களை முழுமையாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஏராளமான திட்டங்களை நாம் மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம். ஆனால், நாம் போட்ட திட்டங்கள், இன்னும் முழுமையாக கிராமத்திலிருந்து நகரம் வரை உள்ள மக்களுக்கு போய் சேரவில்லை. ஏனென்றால், திட்டம் போய் சேர்ந்திருக்கின்றது, ஆனால் நாம் போட்ட திட்டங்களை மக்களுக்குப் புரிய வைக்கவில்லை. அதை, நம்முடைய பேரவை நிர்வாகிகள் புரிய வைக்க வேண்டும். ஏனென்றால், பேரவை நிர்வாகிகள் இந்த இயக்கத்திற்கு இதயம் போன்றவர்கள். அப்படி நீங்கள் இருக்கின்ற காரணத்தினாலே தன்னலம் இல்லாமல் சேவை செய்வதற்குத்தான் அம்மாவினுடைய பேரவை அப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது. நான் 1985-ஆம் ஆண்டில் பேரவையில் இருந்தவன் என்ற முறையிலே நான் சொல்கின்றேன், பேரவையிலே சிறந்த முறையில் உழைத்த காரணத்தினாலே நாங்கள் உயர்வில் இருக்கின்றோம். அதேபோல, நீங்களும் பேரவையிலே தன்னலமற்று சேவை புரிகின்றபொழுது உயர்ந்த இடத்திற்கு எதிர்காலத்தில் வருவீர்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, அம்மாவினுடைய 72-வது வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக, எழுச்சியாக, அனைத்து மக்களும் போற்றுகின்ற அளவிற்கு, பாராட்டுகின்ற அளவிற்கு உங்கள் பணிகள் அமைய வேண்டும் என்று வாழ்த்தி, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
13 Dec 2025சென்னை, இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல்-2 பேர் பலி
13 Dec 2025கீவ், உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் விமானப்படை அதிகாரி கைது
13 Dec 2025திஸ்பூர், பாகிஸ்தானுக்கு ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக உளவு பார்த்த முன்னாள் இந்திய விமான படைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
-
வன்னியர்களுக்கு 13 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அமைச்சர் பெரியசாமி பேச்சு
13 Dec 2025திண்டுக்கல், வன்னியர்களுக்கு 13 சதவீரம் இடஓதுக்கீடு வழங்கியது தி.மு.க.தான் என்று அமைச்சர் பெரியசாமி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 13-12-2025
13 Dec 2025 -
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
13 Dec 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
-
முதல்கட்டமாக திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது: தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு: முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
13 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் இன்று முதற்கட்டமாக தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க.
-
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
13 Dec 2025மதுரை, வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத
-
முதியவர்களை குறிவைத்து மோசடி: அமெரிக்காவில் இந்தியருக்கு சிறை
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் முதியவர்களை குறிவைத்து ரூ.62 கோடி மோசடி செய்த இந்தியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி ரேஷன் கடை விவகாரம்: விஜய் பேசியது குறித்து த.வெ.க. நிர்வாகி விளக்கம்
13 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் த.வெ.க.
-
தமிழ்நாட்டில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்: வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
13 Dec 2025சென்னை, தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
-
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் டிச. 31க்குள் அமல்படுத்தப்படும் டாஸ்மாக் திட்டவட்டம்
13 Dec 2025சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வருகிற 31-ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் உத்தரவாதம் அளித்துள்ளது.
-
மேகதாது அணை விவகாரத்தில் மறுசீராய்வு மனு: தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
13 Dec 2025சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
-
16 சதவீதம் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Dec 2025சென்னை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவு இல்லாமல் ஜி.எஸ்.டி.பி.
-
கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார் மெஸ்சி
13 Dec 2025கொல்கத்தா, கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள தனது முழுவுருவச்சிலையை மெஸ்சி நேற்று திறந்து வைத்தார்.
-
மதுரையில் வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Dec 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
13 Dec 2025டெல்லி, பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரிய
-
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் சூர்யவன்ஷி புதிய சாதனை
13 Dec 2025துபாய், இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை இந்தியாவின் இளம் வீரர் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
8 அணிகள்...
-
திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
13 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
திருவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற பா.ஜ.க.: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
13 Dec 2025திருவனந்தபுரம், திவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பா.ஜ.க.வுக்கு பெற்று தந்த கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
-
'சால்ட் லேக்' மைதானத்தில் சில நிமிடங்கள் இருந்த மெஸ்சி: கோபத்தில் ரசிகர்கள் கலவரம்
13 Dec 2025அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார்.
-
மெஸ்ஸியுடன் ஷாருக்கான் சந்திப்பு
13 Dec 2025கொல்கத்தாவில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துள்ளார்.
-
கேரள மாநில உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். பெரும்பாலான இடங்களில் வெற்றி
13 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
-
டெல்லியில் காற்று மாசுபாடு: மக்களின் உடல்நலம் பாதிப்பு
13 Dec 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்கள் நாட்டுக்கே செல்ல வேண்டும்: அதிபர் ட்ரம்ப்
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம் என அமெரிக்க அதிபர் கொனால்டு ட்ரம்ப் தெரிவித


