எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் மதுரையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளையும் புரத சத்துமிக்க அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் பலரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பசியை தாங்கிக் கொள்ளும் சக்தி பெரியதுதான். ஆனால் அதை விடப் பெரியது பசி உள்ள ஒருவருக்கு உணவளிப்பது தான். ராமாயணத்தில் அன்னதான மகிமையை குறித்து இடம் பெற்றுள்ளதாவது, வசிஷ்டர் சொன்னதின் பேரில் ரிஷயசிருங்க முனிவரை வைத்து புத்திர பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகத்தை தசரத மகா சக்கரவர்த்தி செய்கிறார்.
ஆனால் யாகம் பூர்த்தியாகாமல் இருந்து வந்த நிலையில் அப்போது வயதான ஒரு முதியவர் கடும் பசியால் தசரத மக்களிடம் ஐயா நான் பசியுடன் உள்ளேன். எனக்கு உணவு தாருங்கள் என்று கேட்ட போது அப்போது தனக்கு இருந்த உணவை கொடுத்து அவரை பசியார செய்தார். அப்பொழுது அந்த முதியவர் ஐயா எனது வயிறு நிரம்பி விட்டது உன் எண்ணம் ஈடேறுக என்று கூறினார்.
இதை பார்த்த வசிஷ்டர் மன்னனைப் பார்த்து புன்னகையுடன் மன்னா இந்த யாகத்தால் உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்காவிட்டாலும் நீ செய்த அன்னதானத்தால் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார். வசிஷ்ட முனிவரே அன்னதான பலனை பற்றி அப்போதைய கூறியுள்ளார். சங்க இலக்கியங்களில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று கூறுவார்கள். இதன் உண்மையான பழமொழி என்றால் மற்றொருவருக்கு உணவு அளிக்க முந்த வேண்டும். தனக்கு உணவு படைக்க பிந்த வேண்டும் என்ற அர்த்தமாகும். எம்.ஜி.ஆர். முதல் அம்மா வரை தற்போது தமிழக மக்களை காத்து வரும் நமது முதல்வரும் அன்னதானங்களை வழங்கி எளிய, ஏழை மக்களின் இதயங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
அதிலும் தற்போது உள்ள இந்த தொற்றுநோய் காலத்திலும் அம்மா உணவகங்கள் மூலம் நாள்தோறும் 7 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்குவது மட்டுமல்லாது, தற்போது கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் தமிழகம் முழுவதும் உணவு வழங்கி வரும் அதே வேளையில் அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் ஒரு முன்மாதிரியாய் அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கு மூன்று வேளையும் சுடச்சுட ஆரோக்கியமான முறையில் புரதம் நிறைந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்த திட்டத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழரசன், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி, அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் யு.பிரியதர்ஷினி இயக்குனர் யு.தனலட்சுமி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
மதுரை மாவட்டத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனை,தோப்பூர் அரசு மருத்துவமனை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை விவசாய கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நான்கு இடங்களிலும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவுகளும், அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு பழச்சாறுடன் பாசிபருப்பு மாலை 4 மணிக்கு சூப் வகைகளுடன் சுண்டல் ஆகியவை இந்த கொரோனா தொற்றுநோய் முடியும்வரை வழங்கப்படுகிறது.
தற்பொழுது அம்மா பேரவையுடன், அம்மா சேரிடபில் டிரஸ்ட் இணைந்து கொரோனா தொற்று நோய் சிகிச்சை பெறுவோருக்கு மூன்று வேளையும் சரியான நேரத்தில் சுகாதாரத்துடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு உணவு கூடத்தில் 50 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். மூன்று வேளைகளும் கிருமிநாசினி தெளிக்கப்படும். அதேபோல் அவர்களுக்கு தலையில் அணியும் உறை, முகக் கவசங்கள், கையுறை ஆகியவை வழங்கப்படுகின்றன.
கொரானாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பாதுகாப்பு அரண் மைத்து பல்வேறு சீரிய நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். முதல்வரின் நடவடிக்கையால் தான் தமிழகத்தில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூலை மாதம் வரை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க தாயுள்ளத்தோடு முதல்வர் உத்தரவு வழங்கியுள்ளார். மதுரையில் 21 தனிமைப்படுத்துதல் முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் கொரானாவுக்கு சிகிச்சையளிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக மக்களின் நம்பிக்கையை முதல்வர் பெற்று வருகிறார். அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் உழைத்து வருகிறோம் என்று கூறினார்.
கொரானா வார்டில் பணிபுரியும் மருத்துவர் கூறியதாவது; பொதுவாக ஒரு நோயாளி அதிக அளவில் மருந்துகள் உட்கொள்ளும் போது சரியான முறையில் உணவு எடுத்துக் கொண்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தற்போது முதலமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை நாங்களும் சோதனை செய்தோம். மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார்.
ரமேஷ் என்பவர் கூறியதாவது, நான் தோப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சுடச்சுட உணவு தக்க நேரத்தில் வழங்குகிறார்கள். குறிப்பாக முதல்வர் ஆணைக்கிணங்க அம்மா பேரவை சார்பில் வழங்கப்படும் உணவு மிகவும் ருசியாக எங்கள் இல்லங்களில் சமைப்பது போல் உள்ளது.
உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதைப்போல் இன்றைக்கு தக்க மருத்துவ வசதிகள் செய்து கொடுத்து உயிரை காப்பாற்றி, வயிற்றுக்கு வயிறார உணவையும் வழங்கி வரும் தாயுமானவராக திகழ்ந்து வரும் முதல்வருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்
ராணி என்ற பெண்மணி கூறியதாவது நான் அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரானா சிகிச்சை பெற்று வருகிறேன். வெளியில் சமைக்கும் உணவு எனக்கு ஒவ்வாமை ஏற்படும். தற்போது முதல்வர் ஆணைக்கிணங்க வீட்டு சமையலை போல் மூன்று வேளையும் சுடச்சுட உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காலையில் பழச்சாறுகளும், மாலையில் காய்கறி சூப் வகைகளும் இத்துடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. எங்களைப்போன்ற ஏழை, எளிய மக்களுக்கு இதுபோன்ற உபசரிப்பு வரப்பிரசாதமாகும். எங்களின் ரத்த உறவுகளை போல் பாசத்துடன் எங்களை காத்து வரும் முதல்வருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
தலைக்கவசங்களுக்கு இனி பி.ஐ.எஸ். தரச்சான்று கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு
06 Jul 2025சென்னை : பி.ஐ.எஸ். தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.