எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் மதுரையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளையும் புரத சத்துமிக்க அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் பலரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பசியை தாங்கிக் கொள்ளும் சக்தி பெரியதுதான். ஆனால் அதை விடப் பெரியது பசி உள்ள ஒருவருக்கு உணவளிப்பது தான். ராமாயணத்தில் அன்னதான மகிமையை குறித்து இடம் பெற்றுள்ளதாவது, வசிஷ்டர் சொன்னதின் பேரில் ரிஷயசிருங்க முனிவரை வைத்து புத்திர பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகத்தை தசரத மகா சக்கரவர்த்தி செய்கிறார்.
ஆனால் யாகம் பூர்த்தியாகாமல் இருந்து வந்த நிலையில் அப்போது வயதான ஒரு முதியவர் கடும் பசியால் தசரத மக்களிடம் ஐயா நான் பசியுடன் உள்ளேன். எனக்கு உணவு தாருங்கள் என்று கேட்ட போது அப்போது தனக்கு இருந்த உணவை கொடுத்து அவரை பசியார செய்தார். அப்பொழுது அந்த முதியவர் ஐயா எனது வயிறு நிரம்பி விட்டது உன் எண்ணம் ஈடேறுக என்று கூறினார்.
இதை பார்த்த வசிஷ்டர் மன்னனைப் பார்த்து புன்னகையுடன் மன்னா இந்த யாகத்தால் உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்காவிட்டாலும் நீ செய்த அன்னதானத்தால் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார். வசிஷ்ட முனிவரே அன்னதான பலனை பற்றி அப்போதைய கூறியுள்ளார். சங்க இலக்கியங்களில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று கூறுவார்கள். இதன் உண்மையான பழமொழி என்றால் மற்றொருவருக்கு உணவு அளிக்க முந்த வேண்டும். தனக்கு உணவு படைக்க பிந்த வேண்டும் என்ற அர்த்தமாகும். எம்.ஜி.ஆர். முதல் அம்மா வரை தற்போது தமிழக மக்களை காத்து வரும் நமது முதல்வரும் அன்னதானங்களை வழங்கி எளிய, ஏழை மக்களின் இதயங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
அதிலும் தற்போது உள்ள இந்த தொற்றுநோய் காலத்திலும் அம்மா உணவகங்கள் மூலம் நாள்தோறும் 7 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்குவது மட்டுமல்லாது, தற்போது கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் தமிழகம் முழுவதும் உணவு வழங்கி வரும் அதே வேளையில் அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் ஒரு முன்மாதிரியாய் அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கு மூன்று வேளையும் சுடச்சுட ஆரோக்கியமான முறையில் புரதம் நிறைந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்த திட்டத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழரசன், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி, அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் யு.பிரியதர்ஷினி இயக்குனர் யு.தனலட்சுமி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
மதுரை மாவட்டத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனை,தோப்பூர் அரசு மருத்துவமனை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை விவசாய கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நான்கு இடங்களிலும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவுகளும், அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு பழச்சாறுடன் பாசிபருப்பு மாலை 4 மணிக்கு சூப் வகைகளுடன் சுண்டல் ஆகியவை இந்த கொரோனா தொற்றுநோய் முடியும்வரை வழங்கப்படுகிறது.
தற்பொழுது அம்மா பேரவையுடன், அம்மா சேரிடபில் டிரஸ்ட் இணைந்து கொரோனா தொற்று நோய் சிகிச்சை பெறுவோருக்கு மூன்று வேளையும் சரியான நேரத்தில் சுகாதாரத்துடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு உணவு கூடத்தில் 50 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். மூன்று வேளைகளும் கிருமிநாசினி தெளிக்கப்படும். அதேபோல் அவர்களுக்கு தலையில் அணியும் உறை, முகக் கவசங்கள், கையுறை ஆகியவை வழங்கப்படுகின்றன.
கொரானாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பாதுகாப்பு அரண் மைத்து பல்வேறு சீரிய நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். முதல்வரின் நடவடிக்கையால் தான் தமிழகத்தில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூலை மாதம் வரை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க தாயுள்ளத்தோடு முதல்வர் உத்தரவு வழங்கியுள்ளார். மதுரையில் 21 தனிமைப்படுத்துதல் முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் கொரானாவுக்கு சிகிச்சையளிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக மக்களின் நம்பிக்கையை முதல்வர் பெற்று வருகிறார். அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் உழைத்து வருகிறோம் என்று கூறினார்.
கொரானா வார்டில் பணிபுரியும் மருத்துவர் கூறியதாவது; பொதுவாக ஒரு நோயாளி அதிக அளவில் மருந்துகள் உட்கொள்ளும் போது சரியான முறையில் உணவு எடுத்துக் கொண்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தற்போது முதலமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை நாங்களும் சோதனை செய்தோம். மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார்.
ரமேஷ் என்பவர் கூறியதாவது, நான் தோப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சுடச்சுட உணவு தக்க நேரத்தில் வழங்குகிறார்கள். குறிப்பாக முதல்வர் ஆணைக்கிணங்க அம்மா பேரவை சார்பில் வழங்கப்படும் உணவு மிகவும் ருசியாக எங்கள் இல்லங்களில் சமைப்பது போல் உள்ளது.
உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதைப்போல் இன்றைக்கு தக்க மருத்துவ வசதிகள் செய்து கொடுத்து உயிரை காப்பாற்றி, வயிற்றுக்கு வயிறார உணவையும் வழங்கி வரும் தாயுமானவராக திகழ்ந்து வரும் முதல்வருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்
ராணி என்ற பெண்மணி கூறியதாவது நான் அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரானா சிகிச்சை பெற்று வருகிறேன். வெளியில் சமைக்கும் உணவு எனக்கு ஒவ்வாமை ஏற்படும். தற்போது முதல்வர் ஆணைக்கிணங்க வீட்டு சமையலை போல் மூன்று வேளையும் சுடச்சுட உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காலையில் பழச்சாறுகளும், மாலையில் காய்கறி சூப் வகைகளும் இத்துடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. எங்களைப்போன்ற ஏழை, எளிய மக்களுக்கு இதுபோன்ற உபசரிப்பு வரப்பிரசாதமாகும். எங்களின் ரத்த உறவுகளை போல் பாசத்துடன் எங்களை காத்து வரும் முதல்வருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.