முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் : தலைமை கழகத்தில் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் நியமிக்க தலைமை கழகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, அரக்கோணகம், ராணிப்பேட்டை, கள்ளகுறிச்சி, தென்காசி ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் கட்சி அமைப்புகளும் புதிய மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகிகளை நியமிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அமைப்பு ரீதியாக புதிய மாவட்டங்களை பிரிப்பது, நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக நேற்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனையின் பேரில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

ஏற்கனவே உள்ள மாவட்டங்களையும் சில இடங்களில் அமைப்பு ரீதியாக பிரித்து புதியவர்களை பெறுப்பில் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து