எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், மீன்வளத்துறையின் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், குந்துகால் கிராமத்தில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், மீன்வளத் துறை சார்பில் 27 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களையும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் 5 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் பயனுறும் வகையில், பாக் நீரிணை பகுதியில் மீன்பிடி படகுகளின் நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், கடல் மீனவர்கள் தங்களது மீன்பிடி கலன்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், படகு அணையும் தளம், T-ஜெட்டிகள் மற்றும் கடற்கரைச் சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய மீன் இறங்கு தளம் இராமநாதபுரம் மாவட்டம், குந்துகால் மீனவ கிராமத்தில் அமைக்கப்படும் என்று 2017-18ஆம் ஆண்டு மீன்வளத் துறை மானியக் கோரிக்கையில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், குந்துகால் கிராமத்தில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்த மீன்பிடி இறங்கு தளத்தில் 528 மீட்டர் நீளத்திற்கு படகு அணையும் தளங்கள், கடலின் மைய பகுதியில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கட்டிடம் கட்டப்பட்டு, 400 ஆழ்கடல் சூரைமீன் படகுகள், 100 கண்ணாடி நாரிழை படகுகள் பாதுகாப்பாக நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 6050 மீனவர்கள் பயன்பெறுவார்கள்.
சென்னை மாவட்டம், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மீன்பிடி படகு அணையும் தளம் மற்றும் மீன்விற்பனை கூடம், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அண்ணாமலைச்சேரி கிராமத்தில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளம், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகரில் 3 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட தேசிய மீன் பண்ணை மற்றும் பவானிசாகரில் உள்ள புங்கார் மீன் பண்ணையில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தூய மரபின சினை மீன்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு மையம், சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள மீன் பண்ணையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தூய மரபின சினை மீன்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்பு மையம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் - லால்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டம் - அகரம் கிராமத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்ட அரசு மீன் பண்ணை, நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இனவழிக் கால்நடை மூலிகை பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரிய பிராணிகளுக்கான உள்ளிருப்புப் பிரிவுக் கட்டிடம் மற்றும் கால்நடைப் பராமரிப்பாளர் அறை, திருநெல்வேலி, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரிய பிராணிகளுக்கான உள்ளிருப்புப் பிரிவுக் கட்டிடம் மற்றும் கால்நடைப் பராமரிப்பாளர் அறை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி வளாகத்தில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியருக்கான கூடுதல் விடுதிக் கட்டிடம் என மொத்தம் 102 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்வளத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கான கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை கே. ராதாகிருஷ்ணன், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், மீன்வளத் துறை இயக்குநர் டாக்டர் சமீரன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் பாலச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
23 Apr 2024சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையில் சோதனை மேலும் தீவிரம்
23 Apr 2024சென்னை, கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் எல்லைப்பகுதிகளில் மேலும் சோதனையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சென்னை ஏரிகளில் நீர் இருப்பு பாதியாக சரிவு
23 Apr 2024சென்னை, கோடைகாலம் தொடங்கிய நிலையில், சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிந்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது