எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : துபாயில் வன விலங்குகள் பராமரிக்கப்படும் சபாரி பூங்கா மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால், அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் மாநகராட்சி சார்பில் 100 கோடி திர்ஹாம் செலவில் அல் வர்கா 5 என்ற பகுதியில் 119 எக்டேர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக வன விலங்குகள் உலாவும் இயற்கை பகுதியாக கடந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட வன உயிரின பூங்கா துபாய் சபாரி பூங்காவாகும். இங்கு காட்டில் வாழும் விலங்குகள், பறவைகள் மற்றும் தண்ணீர் வாழ் உயிரினங்கள் என 2 ஆயிரத்து 500 வன விலங்குகள் இயற்கையான சூழலில் நடமாடி வருகிறது.
இந்த பூங்கா பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி திறக்கப்பட்டது. இதில் சிறப்பம்சம்சமாக அரேபியா, ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளில் உள்ள கிராமங்களின் மாதிரிகள் மிக தத்ரூபமாக சிறந்த உள்கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமான இந்த வளாகத்தை சுற்றி பார்க்க ரயில் வண்டி உள்ளது. இந்த ரயிலில் குடும்பத்துடன் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்டு ரசிக்கலாம்.
மேலும் கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்பட்டு அதிலும் ஹெனா, புலி போன்ற விலங்குகளை கண்டு மகிழலாம். இந்த பூங்காவில் சிங்கம், வெள்ளை சிங்கம், புலி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, பாம்புகள், முதலை, ஆமை, ஓநாய்கள், நெருப்புக்கோழி உள்பட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அந்தந்த விலங்குகளுக்கு ஏற்ப தண்ணீர் நிலைகள், பாறைகள், குகைகள் என அனைத்து வசிக்கும் இடங்களும் மிக இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் பொதுமக்களுக்காக அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவை பார்வையிட பெரியவர்களுக்கு 50 திர்ஹாமும், சிறியவர்களுக்கு 20 திர்ஹாமும் நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு (2 உதவியாளர்கள் உள்பட) அனுமதி இலவசமாகும்.
இலவச அனுமதி பெற அடையாள அட்டை அல்லது ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். இந்த பூங்காவை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். http://www.dubaisafari.ae/ என்ற இணையதளம் மூலமாக, மாநகராட்சியின் செயலியில் பதிவு செய்தும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் துபாய் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
25 Feb 2026சென்னை, முதுபெரும் அரசியல் தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் நேற்று காலமானார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
25 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்துகிறார்.
-
குமரியில் ரூ. 30 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
25 Feb 2026கன்னியாகுமரியில் மினி டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
-
என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன்: தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்: நாகர்கோவில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
25 Feb 2026நாகர்கோவில், என்னுடைய சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இ
-
தனக்கென வாழாமல் பிறர்காகவே வாழ்ந்தவர்: நல்லகண்ணுவுக்கு இ.பி.எஸ். இரங்கல்
25 Feb 2026சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு மறைவுக்கு அ.தி.மு.க.
-
யாருடன் கூட்டணி என்பது குறித்து ராமதாஸ் இன்று முக்கிய முடிவு
25 Feb 2026திண்டிவனம், பா.ம.க. கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று முடிவு செய்கிறார்.
-
மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர்: நல்லகண்ணுவுக்கு விஜய் புகழஞ்சலி
25 Feb 2026சென்னை, மக்களின் உரிமைகளுக்காக பேராடியவர் நல்லகண்ணு என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
25 Feb 2026கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
ராமதாஸ் தொடர்ந்த வழக்கு: அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
25 Feb 2026சென்னை, ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு சார்பில் விழா: ரூ. 858.92 கோடியில் நலத்திட்ட உதவிகள்: 3,12,082 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
25 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், 632 கோடியே 35 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ச
-
தமிழக காவல் துறைக்கு ரூ.124 கோடியில் புதிய மென்பொருள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
25 Feb 2026சென்னை, தமிழக போலீஸ் துறைக்கு ரூ.124.37 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
-
அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கும் தமிழக அரசு
25 Feb 2026சென்னை, அதானி நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு மின்சாரம் வாங்கியது.
-
இலவச வாக்குறுதிகளை தடைசெய்ய கோரி வழக்கு: தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அறிவிப்பு
25 Feb 2026புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அவச
-
போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாக்., பிரதமர் ஷெரீப் இறந்திருப்பார்: அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு
25 Feb 2026நியூயார்க், போரை நான் தடுத்திருக்காவிட்டால் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டு
-
இன்றைய நாள் எப்படி?
25 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
25 Feb 2026- ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவாரம்பம்.
- கோவை கோணியம்மந் கிளி வாகனம்.
- திருச்செந்தூர் முருகன் கோ ரதம், இரவு சுவாமி வெள்ளி சப்பரம். அம்பாள் இந்திர வாகனம்.


