முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு: நாடு முழுவதும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட 577 குழந்தைகள்: ஸ்மிருதி இராணி

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கடந்த ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பாதிப்பால், தாய், தந்தையை இழந்து நாடுமுழுவதும் 577 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கவலைத் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலையில் மக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறராக்ள். இதில் குழந்தைகளின் நிலை பரிதாபத்துக்குரியது.

கொரோனா வைரஸால் பல மாநிலங்களில் பெற்றோர் இருவரையும் இழத்தல், தாய், தந்தை இருவரில் ஒருவரை இழத்தல் போன்ற பரிதாப நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகின்றனர். கொரோனா வைரஸால் ஏற்கெனவே குழந்தைகளின் கல்விச் சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பச்சூழலும் வேதனைக்குரியதாக மாறி குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்கி உள்ளது. 

குழந்தைகளின் நிலையை உணர்ந்த ஏராளமான தன்னார்வ அமைப்புகள், மாநில அரசுகள் குழந்தைகளின் கல்விச் செலவு, குடும்பத்தில் வருமானம் ஈட்டுவோரை இழந்துவிட்டால் நிவாரண உதவிகளை அளித்து வருகி்ன்றன.

அந்த வகையில்கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இதுவரை நாட்டில் 577 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்து ஆதரவற்றநிலைக்கு கொரோனாவால் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது டுவிட்டரில், 

கடந்த ஏப்ரல் 1-ம்தேதி பிற்பகல் 2 மணியிலிருந்து இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரேதசங்களில் தாய், தந்தை இருவரையும் இழந்து 577 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த குழந்தைகளை காப்பாற்றி, ஆதரவு அளிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து