முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனில் பாம்பு தீவு மீது ரஷ்ய விமானங்கள் குண்டுமழை

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      உலகம்
Ukraine 2022 07 02

Source: provided

கீவ் : பாம்பு தீவு மீது நேற்று ரஷ்ய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுமழை பொழிந்தன. ராணுவ தளவாடங்களை அழிக்க ரஷ்யா தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 5-வது மாதத்தை நெருங்கியுள்ளது. தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய படைகள் கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் உக்ரைனின் பாம்பு தீவை ரஷ்ய படைகள் சமீபத்தில் கைப்பற்றியது. அந்த தீவை மீட்க உக்ரைன் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியது. 

இந்த நிலையில் பாம்பு தீவு மீது நேற்று ரஷ்ய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியது. சுகோய்-30 ரக போர் விமானம் மூலம் பாம்பு தீவு மீது பாஸ்பரஸ் ரக குண்டுகள் வீசப்பட்டன. இது குறித்து உக்ரைன் ராணுவம் கூறும் போது, 

ரஷ்ய விமானப் படையின் சுகோய்-30 விமானங்கள், பாம்பு தீவில் இரண்டு முறை பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியது என்று தெரிவித்தது. பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் விலகினாலும், அங்குள்ள அதிநவீன ராணுவ தளவாடங்களை திரும்ப கொண்டு செல்ல முடியவில்லை.

எனவே ராணுவ தளவாடங்களை அழிக்க ரஷ்யா தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் ஓடேசா நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து