முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்தில் இன்று கோத்தபய ராஜபக்சே தஞ்சமடைகிறாரா?

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      உலகம்
Gothapaya 2022-08-10

Source: provided

கொழும்பு : இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து இன்று  தாய்லாந்தில் தஞ்சமடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் பல மாதங்களாக நீடித்து வருகிறது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த சூழலில், கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த ஜூலை 13-ம் தேதி ராணுவ விமானத்தில் தப்பி சென்றார். அதன்பின் மாலத்தீவில் இருந்தபடியே அவர் சிங்கப்பூருக்கு சென்றார். கோத்தபயாவின் விசா காலம் இன்று 11-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, அவர் சிங்கப்பூரை விட்டு புறப்பட வேண்டும். 

கோத்தபய ராஜபக்சேவை சிங்கப்பூரிலேயே சிறிது காலம் தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசு அனுமதி கோரியுள்ளது. இந்த நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து இன்று தாய்லாந்தில் தற்காலிகமாக தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து