முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      தமிழகம்
Mandose 2022-12-08

Source: provided

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டா - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு மிக அதி கனமழைக்கான ரெல் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல்

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் இரவு புயலாக (மாண்டஸ்) வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது. நேற்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, காரைக்காலிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே 390 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திர கடற்கரையில் மாமல்லபுரம் அருகே டிசம்பர் 9-ம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் (ரெட் அலர்ட்) பெய்யக்கூடும். மேலும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்,  வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் நேற்று மாலை தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. மாண்டஸ் புயல் தீவிரப் புயலாகவே இன்று காலை வரை நீடிக்கும், பிறகு மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலு குறைந்து இன்று நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. புயல் எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்தியில், வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே டிசம்பர் 9ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கும். மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 65 - 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடப்பதால் வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யும். டிசம்பர் 10ஆம் தேதியும் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து