முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்: தம்பியை சுத்தியலால் அடித்து கொன்ற அண்ணன்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

பெங்களூரு : செல்போனை கொடுக்காததால் ஆத்திரமடைந்த அண்ணன் தம்பியை சுத்தியலால் அடித்து  கொன்ற சம்பவம் பெங்களூரில் அரங்கேறி உள்ளது. 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவரது மனைவி சன்னம்மா. இந்த தம்பதிக்கு சிவக்குமார் (18) மற்றும் பிரானேஷ் (14) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த தம்பதி கூலி வேலை செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தனர். 

சிவக்குமார் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு பெற்றோருடன் கூலி வேலை செய்து வந்தார். அதே சமயம் அவரது சகோதரர் பிரானேஷ், ஆந்திராவில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தான். இதற்கிடையே கோடை விடுமுறை என்பதால் பிரானேஷ், பெற்றோரை பார்க்க வந்தான். 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறநகர் பகுதியில் தலை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயங்களுடன் பிரானேஷ் பிணமாக கிடந்தான். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் சர்ஜாப்புரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரானேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

போலீசாரின் விசாரணையில், ஆயுதத்தால் தாக்கி சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. ஆனால் கொலைக்கான காரணம் முதலில் தெரியவில்லை. அப்போது பிரானேசின் சகோதரர் சிவக்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் சிவக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது சிவக்குமாருக்கு செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. இதற்கிடையே சிவக்குமாரின் செல்போனை சகோதரன் பிரானேஷ் வாங்கி விளையாடி வந்துள்ளான். செல்போனை கொடுக்கும்படி சிவக்குமார் தம்பியை எச்சரித்துள்ளார். ஆனால் பிரானேஷ் செல்போனை கொடுக்கவில்லை என தெரிகிறது. 

செல்போன் கொடுக்க மறுத்ததால் சகோதரரை தீர்த்து கட்டுவதற்கு சிவக்குமார் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது தனது சகோதரரை அருகில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிவக்குமார் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்கு வைத்து தான் எடுத்து வந்த சுத்தியலால் பிரானேசை தலை, வயிற்றில் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தலை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு பிரானேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையில் தான் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து