எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை, : ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
26 பேர் உயிரிழப்பு...
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2008 ஆம் ஆண்டு மும்பையில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டது. மேலும், சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி விளையாட மறுத்ததால், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயில் நடத்தப்பட்டன.
ஒரே குழுவில்...
இந்த நிலையில், பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஐ.சி.சி.க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு போட்டிகளில் விளையாடாவிட்டாலும், இரு அணிகளும் ஐ.சி.சி. தொடர்களில் ஒரே குழுவில் தான் விளையாடுகின்றன. இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்களிடம் அதிக ஆதரவும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இனி நடக்கவிருக்கும் ஐ.சி.சி. தொடர்களில் இரு அணிகளையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி. தரப்பில் எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025