முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Fairman 2023 06 13

Source: provided

வேதாரண்யம் : மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், மீனவர்களின் படகு இயந்திரங்களை சேதப்படுத்தி அவர்களை விரட்டி அடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்களில் மூவர் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 கண்ணாடியிழைப் படகுகளில் 14 மீனவர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குள் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே இரவு படகை நிறுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இரண்டு இலங்கைப் படகுகளில் வந்த 4 பேர், அவர்களது படகை கொண்டு மீனவர்கள் இருந்த படகை மோதி, இயந்திரங்களை சேதப்படுத்தி தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த மீனவர்கள் விஸ்வநாதன், மூர்த்தி, செல்வராசு ஆகியோர் நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து