முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா மரபணு ஆய்வில் பகீர் தகவல்

Image Unavailable

சார்லஸ் டார்வின் என்பவரை பற்றி தெரியாவர்கள் இருக்க முடியாது. இந்த உலகில் புழு, பூச்சி தொடங்கி மனித இனம் வரை அனைத்தும் எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கு விடை காண முயன்றவர். அவர் உருவாக்கிய தியரியே.. அதாவது கோட்பாடே பரிணாம கொள்கை. இதன் மூலம் ஒரு செல்லிலிருந்து பிரிந்த புதிய உயிரினம் படிப்படியாக பல்கி பெருகி, தாவரங்கள், பூச்சிகள், தவளைகள், மீன்கள், பறவைகள், விலங்குகள், குரங்கின் வழியாக மனித இனம் தோன்றின என்கிறார். ஆனால் இன்றைய நவீன வீஞ்ஞானம் செல்லை மட்டுமின்றி அதனுள் புதைந்திருக்கும் கோடிக்கணக்கான மரபணுக்கள், அவை உருவாக காரணமாக டிஎன்ஏ, ஆர்என்ஏக்கள் என தனது பயணத்தை மிகவும் மைக்ரோ, நேனோ லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. அதில்தான் முக்கிய திருப்பம் நடந்துள்ளது. கடந்த 2015 இல் கேம்பிரிட்ஜ் பல்கலை நடத்திய ஆய்வில் தாவரங்களில் இருந்து வந்த மரபணுக்கள் வாயிலாக மனித இனம் தோன்றியிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி சுமார் 1 சதவீத மனித மரபணுக்கள் தாவரங்களிலிருந்து பெறப்பட்டவைதான் என அடித்து சொல்கின்றன. என்ன ஆச்சரியம் பாருங்கள்.. இப்போ சொல்லுங்கள் நாம் குரங்கிலிருந்து வந்தோமா, தாவரத்திலிருந்து வந்தோமா...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்