எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.- 15 - நான் நடித்த சிவாஜி 3டி படத்தை பார்த்து பிரமித்து விட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். ஏவிஎம் தயாரிப்பில் 5 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த படம் சிவாஜி. இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார் ஷங்கர். கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். இந்த படம் திரைக்கு வந்து அப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது சிவாஜி படத்தை ஏவிஎம் நிறுவனமும், பிரசாத் ஸ்டூடியோவும் இணைந்து 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி உள்ளனர். சுமார் 400 பேர் பணியாற்றி கடந்த ஒரு வருஷமாக தயாரித்திருக்கிறார்கள். சிவாஜி 3டி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிவாஜி 3டி படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த், ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், சாய்பிரசாத், அருணா குகன், அபர்ணா குகன், எஸ்.பி.முத்துராமன் என பலர் கலந்து கொண்டனர். பின்னர் ரஜினி கூறியதாவது:- சிவாஜி 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் விஷயம் எனக்கு தெரியாது. சில தினங்களுக்கு முன்பு ஒரு விழாவுக்கு வர வேண்டும் என்று சரவணன் சார் கூறினார். என்ன என்று கேட்டேன். சர்ப்ரைசாக இருக்கட்டும் என்றார். சரி என்று கூறி, வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது சிவாஜி படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருப்பது. படத்தை பார்த்து என்னை மறந்து கைதட்டி விட்டேன். 3 முறை பார்த்து பிரமித்தேன். ஆண்டவன் என்னோடு இருப்பதை உணர்கிறேன். நான் என் வாழ்க்கையில் எதுவும் செய்யவில்லை. என்னை ஆண்டவன் தான் செயல்படுத்துகிறார்.
என்னோட கோச்சடையான் படம் 3டி-யில் உருவாகி வருகிறது. அதற்கு முன்பு இந்த படம் 3டி-யில் உருவாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு படம் 3டி-யில் உருவாக வேண்டுமானால் அது பிரமாண்டமான படமாக வந்திருக்க வேண்டும். அந்த வகையில் சிவாஜி இப்போது 3டி-யில் உருவாகி இருக்கிறது. அடுத்து இதுபோல 3டி-யில் நான் நடித்த படங்களை உருவாக்க வேண்டுமானால் எந்திரன், படையப்பா படங்களை உருவாக்கலாம். ஹாலிவுட் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு நம் சினிமாவின் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் பாடல் காட்சியை பார்த்த உங்களுக்கே பிடித்திருக்கிறது என்றால் நிச்சயம் என் ரசிகர்களுக்கும் அதிகம் பிடிக்கும். கருப்பு- வெள்ளை சினிமா, கலர் சினிமா, இப்போது டிஜிட்டல் சினிமாவில் இருப்பது ஆண்டவன் கருணையால் நான் செய்த பாக்கியமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை கருப்பு கண்ணாடி அணிந்து நிருபர்களுடன் அமர்ந்து ரஜினி கண்டு களித்தார். 2 மணி 17 நிமிடம் சிவாஜி 3டி படம் திரையில் ஓடக்கூடிய வகையில் உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க்ச்ச்சி டூச்சிடீ
சிவாஜி 3டி படத்தை ரஜினி பார்த்தபோது எடுத்தபடம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
பாரதிய ஜனதா கூட்டணிக்கு த.வெ.க. வர வாய்ப்புள்ளதா? / மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம்
12 Jul 2025புதுடெல்லி : நாங்கள் பல கட்சிகளை ஒரே கூட்டணியில் கொண்டு வர முயற்சிக்கிறோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
-
சீனா செல்கிறார் ஜெய்சங்கர்
12 Jul 2025புதுடெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாதது ஏன் ? - பும்ரா விளக்கம்
12 Jul 2025லண்டன் : முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதை கொண்டாடாததற்கான காரணம் குறித்து பும்ரா விளக்கமளித்துள்ளார்.
-
நான் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை : ஜஸ்ப்ரிட் பும்ரா பதில்
12 Jul 2025லண்டன் : எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கி, போட்டிக்கான கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படுவதை விரும்பவில்லை என பும்ரா தெரிவித்துள்ளார்.
-
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்
12 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர், இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் அல்கராஸுக்கு இடையேயான போ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து
13 Jul 2025திருவள்ளூர் : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்: கொடைக்கானலில் அதிகரித்த சுற்றுலாப்பயணிகள் வருகை..!
13 Jul 2025திண்டுக்கல் : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வார விடுமுறை தினத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
-
பீகார் வாக்காளர் பட்டியலில் ஏராளமான வெளிநாட்டினர்: தேர்தல் கமிஷன் தகவல்
13 Jul 2025புதுடில்லி: பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில், வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த
-
மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: பீகாரில் ஒரே வாரத்தில் 2-வது பா.ஜ., தலைவர் சுட்டுக்கொலை
13 Jul 2025பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் பா.ஜ., தலைவர் சுரேந்திர கேவத் (52) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' தொடக்கம்:முதல்வர் ஸ்டாலின் இன்று ரயிலில் சிதம்பரம் பயணம்
13 Jul 2025சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ரயில் மூலம் சிதம்பரம் செல்கிறார்.
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: பிரதமர் மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடில்லி: 4 பேருக்கு நியமன எம்.பி., பதவியை ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்து உள்ளார்.
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நாம் கடினமாக உழைக்க வேண்டும் தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
13 Jul 2025சென்னை: மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது.