Idhayam Matrimony

மனைவி - மகன்களைச் சுட்டுக் கொன்ற அமெரிக்க இந்தியர்

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

அட்லான்டா, பிப். 7 - அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களைச் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். 

அமெரிக்காவின் அட்லாண்டாவில் வசித்து வந்தவர் சிவேந்தர் சிங் குரோவர். 52 வயதான இவரது மனைவி பெயர் தமஞ்சித் கெளர் குரோவர், இவருக்கு 47 வயதாகிறது. இந்தத் தம்பதிக்கு 5 வயதில் குர்தேஜ் சிங் குரோவர் மற்றும் 12 வயதில் சர்தாஜ் சிங் குரோவர் என இரு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் இவர்கள் ஐந்து பேரும் தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் பிணமாகக் கிடந்தனர். குரோவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களையும் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குரோவர் தனது மனைவியை தலையில் சுட்டும், மகன்களை கழுத்தில் சுட்டும் கொன்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்