எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க்: ஏப், - 28 - உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் சென்ற அந்த மாநில அமைச்சர் ஆஸம் கான் விசாரணைக்காக அந்த நாட்டு அதிகாரிகளால் தனியாக அழைத்துச் செல்லப்பட்டார். இஸ்லாமியர் என்பதால் அவரை தனியே அழைத்துச் சென்ற அதிகாரிகள் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தனர். இதையடுத்து அவருக்கும் விசாரணை நடத்திய பெண் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் விரைந்து வந்து ஆஸம் கானை விடுவித்து நிலைமை சமாளித்தனர். இந்த சம்பவத்தையடுத்து தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பப் போவதாக அஸாம் கான் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் இந்தியத் தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது. அமெரிக்க விமான நிலையங்களில் இந்தியர்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள் அவமதிக்கப்படுவது புதிதல்ல. நாட்டின் தலைமகனாக இருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், விப்ரோ அதிபர் ஆஸிம் பிரேம்ஜி ஆகியோரையே சோதனை என்ற பெயரில் கேவலப்படுத்தியுள்ளது அமெரிக்கா. ஆனால், இதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் மத்திய அரசும் மெளனம் காத்துவிட்டது. ஆனால், ஆஸம் கான் ஒரு ஷார்ட் டெம்பர் தலைவர். இதனால் அவர் தன்னை விசாரித்த பெண் அதிகாரியை கடுமையாகத் திட்டியதாகத் தெரிகிறது. கடுப்பான அந்தப் பெண் அதிகாரி, நான் என் கடமையைச் செய்கிறேன். அதைத் தடுக்க முயன்றால் கேஸ் போடுவேன் என்று மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தையும் மத்திய அரசும் அமெரிக்கத் தூதரகமும் மூடி மறைக்க முயன்றிருக்கும். ஆனால், உடனடியாக இந்தியத் தூதரகம் தலையிட்டு இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளதற்குக் காரணம், அடுத்த ஆண்டு நடக்கப் போகும் மக்களவைத் தேர்தல் தான். சும்மாவே உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு சரிந்து போய் கரைந்து கொண்டிருக்கிறது காங்கிரஸ். வழக்கமாக காங்கிரஸ் வாக்கு வங்கியாக இருந்த முஸ்லீம்கள் சமாஜ்வாடி கட்சி பக்கம் போய்விட்டனர். இந் நிலையில் அந்தக் கட்சியின் இஸ்லாமியத் தலைவருக்கு அமெரிக்காவில் நடந்த இந்த அவமதிப்பை அந்தக் கட்சி அரசியல்ரீதியாக பயன்படுத்த எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இதைத் தவிர்க்கவே மத்திய அரசும் வழக்கமாக இது போன்ற விவகாரங்களில் மெளனம் காக்கும் அமெரிக்க இந்தியத் தூதரகமும் உடனடியாக செயல்பட்டுள்ளன. தனிப்பட்ட முறையில் ஆஸம் கான் சென்றிருந்து இது போல நடந்திருந்தால் கூட பரவாயில்லை. இந்தியாவின் ஒரு மாநிலத்தின் முதல்வருடனான குழுவில் வந்துள்ள அவரை வரவேற்க அமெரிக்க அதிகாரிகள் குழுவே பாஸ்டன் விமான நிலையத்துக்கு வந்திருந்தது. அவர்கள் ஒரு பக்கம் இந்தியக் குழுவை வரவேற்றுக் கொண்டிருக்க, ஒரு பெண் அதிகாரி வந்து, ஆஸம் கானை உங்களிடம் தனியே பேச வேண்டும் என்று கூறி ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று நீங்கள் யார், உங்கள் அப்பா பெயர் என்ன, எதற்காக அமெரிக்கா வந்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்க ஆரம்பிக்கவே, கடுப்பாகி அந்த அதிகாரியை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துவிட்டார் ஆஸம் கான் என்கிறார்கள். குரலை அதிகாரியும் உயர்த்த, இருவருமே உச்சக் குரலில் கூப்பாடு போடவே அகிலேஷ் யாதவுடன் வந்த அதிகாரிகள் இந்தியத் தூதரகத்திடம் கடுப்பான குரலில் பேச, உடனே தூதரகம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துடன் பேச, மூத்த அதிகாரிகள் வந்து ஆஸம் கானை மீட்டுள்ளனர். பாஸ்டன் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பங்களும் துப்பாக்கிசூடு சம்பவங்களும் நடந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தை முலாயம் சிங் யாதவ் பெரிதாக்குவார் என்று தெரிகிறது. நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனையை சமாஜ்வாடி கட்சி கிளப்பக்கூடும் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தூத்துக்குடியில் மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு
13 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அ
-
கள்ளச்சந்தையில் விற்க சிலிண்டர்கள் பதுக்கல்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
13 Mar 2026மதுரை, மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முத
-
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு: கனிமொழி எம்.பி. தகவல்
13 Mar 2026தூத்துக்குடி, தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி.. தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை.
-
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026சென்னை, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ.
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நாளை நேரில் ஆஜராகுகிறார் விஜய்
13 Mar 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விஜய் நாளை நேரில் ஆஜராகுகிறார்.
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
13 Mar 2026சென்னை, இளைஞர்களே தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சுட்டு வீழ்த்தப்பட்டதா..? ஈராக்கில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க விமானம்-4 பேர் பலி
13 Mar 2026தெஹ்ரான், ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பங்குச்சந்தைகள் 3-ம் நாளாக கடும் வீழ்ச்சி : ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு
13 Mar 2026மும்பை, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
ரூ.581.65 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்
13 Mar 2026புதுடெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு: கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க தடை
13 Mar 2026சென்னை, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத
-
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி.
-
மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்கள் வேலை பறிபோகும்: சுப்ரீம் கோர்ட் கருத்து
13 Mar 2026புதுடெல்லி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும், நிறுவன உரிமையாளர்கள், பெண்களை
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


