எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லண்டன், ஜூன். 13 - சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது. லண்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கீந்தியத்தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. தொடக்க வீரர் ஷிகர் தவன் 102 ரன்கள் எடுத்தார். ரவிந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா மிக எளிதாக வெற்றி பெற்றது. அரையிறுதியையும் உறுதி செய்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியா 39.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வென்றது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளின் கெயில், சார்லஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே கெயில் அதிரடியாக விளையாட முற்பட்டார். முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசினார். எனினும் புவனேஸ்குமார் வீசிய 5- வது ஓவரில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து கெயில் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்து களில் 21 ரன்கள் எடுத்தார். அடுத்து டேரன் பிராவோ, சார்லஸூடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர். இதனால் 20 வது ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 100 ரன்களை எட்டியது. 55 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த சார்லஸ், ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழ்ந்தார். சார்லஸ் ஆட்டமிழந்தது, இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து வந்த சாமுவேல்ஸ்(1ரன்), சர்வான்
(1ரன்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மேற்கிந்தியத்தீவுகளின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. டேரன் பிராவோ 35 ரன்களிலும் கேப்டன் டேயன் பிராவோ 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். போல்லார்டு 32 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். ஆனால் மறுமுனையில் சமி நிலைத்து நின்றார். பின்வரிசையில் சுநீல் நரேன், ராம்பால் ஆகியோர் தலா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 45.3 ஓவர்களில் மேற்கீந்தியத் தீவுகள் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. சமி அதிரடி : கடைசி விக்கெட்டுக்கு கேமர் ரோச், சமி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் சமி அதிரடியாக விளையாடினார். 35 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளை விளாசி 56 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். மறுமுனையில் ரோச் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தார். சமியின் அதிரடியால் கடைசி 5 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 51 ரன்கள் கிடைத்தது. 200 ரன்களைக் கூட எட்டாது என்று இருந்த நிலை மாறி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது மேற்கிந்தியத்தீவுகள். ஜடேஜா 5 விக்கெட்: இந்திய அணி தரப்பில் ஜடேஜா 10 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். புவனேஸ்குமார், அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இந்தியா பதிலடி : இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். தொடக்க முதலே இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் 16- வது ஓவரில் இந்தியா 100 ரன்களைக் கடந்தது. அதே ஓவரில் முதல் விக்கெட் விழுந்தது. ரோஹித் சர்மா 56 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கோலி 22 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஷிகர் தவனுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடியது. மழையால் தடைபட்டது: இந்திய அணி 35.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்த போது மழை பெய்ததால், ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது ஷிகர் தவான் சிக்ஸர் அடித்து சதத்தை எட்டினார். அவர் 107 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதில் 10 பவுண்டரி ஒரு சிக்ஸர் அடங்கும். 40 - வது ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக், பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 54 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 5 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 15 - ம் தேதி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது. இரண்டாவது சதம்:
இத்தொடரில் ஷிகர் தவன் தொடர்ந்து எடுத்துள்ள 2 - வது சதம் இது. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 94 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025