எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், ஜூன். 13 - சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது. லண்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கீந்தியத்தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. தொடக்க வீரர் ஷிகர் தவன் 102 ரன்கள் எடுத்தார். ரவிந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா மிக எளிதாக வெற்றி பெற்றது. அரையிறுதியையும் உறுதி செய்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியா 39.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வென்றது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளின் கெயில், சார்லஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே கெயில் அதிரடியாக விளையாட முற்பட்டார். முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசினார். எனினும் புவனேஸ்குமார் வீசிய 5- வது ஓவரில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து கெயில் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்து களில் 21 ரன்கள் எடுத்தார். அடுத்து டேரன் பிராவோ, சார்லஸூடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர். இதனால் 20 வது ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 100 ரன்களை எட்டியது. 55 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த சார்லஸ், ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழ்ந்தார். சார்லஸ் ஆட்டமிழந்தது, இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து வந்த சாமுவேல்ஸ்(1ரன்), சர்வான்
(1ரன்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மேற்கிந்தியத்தீவுகளின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. டேரன் பிராவோ 35 ரன்களிலும் கேப்டன் டேயன் பிராவோ 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். போல்லார்டு 32 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். ஆனால் மறுமுனையில் சமி நிலைத்து நின்றார். பின்வரிசையில் சுநீல் நரேன், ராம்பால் ஆகியோர் தலா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 45.3 ஓவர்களில் மேற்கீந்தியத் தீவுகள் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. சமி அதிரடி : கடைசி விக்கெட்டுக்கு கேமர் ரோச், சமி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் சமி அதிரடியாக விளையாடினார். 35 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளை விளாசி 56 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். மறுமுனையில் ரோச் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தார். சமியின் அதிரடியால் கடைசி 5 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 51 ரன்கள் கிடைத்தது. 200 ரன்களைக் கூட எட்டாது என்று இருந்த நிலை மாறி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது மேற்கிந்தியத்தீவுகள். ஜடேஜா 5 விக்கெட்: இந்திய அணி தரப்பில் ஜடேஜா 10 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். புவனேஸ்குமார், அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இந்தியா பதிலடி : இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். தொடக்க முதலே இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் 16- வது ஓவரில் இந்தியா 100 ரன்களைக் கடந்தது. அதே ஓவரில் முதல் விக்கெட் விழுந்தது. ரோஹித் சர்மா 56 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கோலி 22 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஷிகர் தவனுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடியது. மழையால் தடைபட்டது: இந்திய அணி 35.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்த போது மழை பெய்ததால், ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது ஷிகர் தவான் சிக்ஸர் அடித்து சதத்தை எட்டினார். அவர் 107 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதில் 10 பவுண்டரி ஒரு சிக்ஸர் அடங்கும். 40 - வது ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக், பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 54 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 5 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 15 - ம் தேதி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது. இரண்டாவது சதம்:
இத்தொடரில் ஷிகர் தவன் தொடர்ந்து எடுத்துள்ள 2 - வது சதம் இது. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 94 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.