முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.அ. அமீரகத்தில் இந்திய தொழிலாளர்களுக்கு காப்பீடு திட்டம்

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

துபாய்,பிப்.12 - ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை அல்லது விபத்தினால் ஏற்படும் மரணத் தின்போது அவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி, நிரந்தர ஊனத்தால் பாதிக்கப்படும்போது நிதி அளித்தல் ஆகிய திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களுக்கு காப்பீடு அளிக்கும் மகாத்மா காந்தி பிரவாஸி சுரக்சா என்ற திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் சேர தொழிலாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில் மத்திய அரசும் தனது பங்களிப்பாக நிதியுதவி அளிக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விரும்பும் தொழிலாளர்கள் ஆண்டு றும் ரூ.1,000 முதல் 12 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். தாய்நாடு திரும்பிய பின் மறுகுடியேறுதல் உள்ளிட்ட வற்றிற்கு பணம் பெற விரும்பி னால், ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆயுள் காப் பீடுக்கு பணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

18 முதல் 50 வயதுக்கு உள் பட்ட இந்திய தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago